போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன Arul11 ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன Untitl11 ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன Iiiiii12 ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன Untitl13 ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன

Go down

ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன Empty ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன

Post by Admin Wed May 01, 2013 10:39 pm

ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன

ஊடகவியலாளர் 'தராக்கி' டி.சிவராமின் எட்டாவது ஆண்டு நினைவும் 'காலத்தின்
தேவை அரசியல் வேலை' என்ற தலைப்பிலான அவரது கட்டுரைகளின் தொகுப்பு நூல்
வெளியீட்டு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை சூரிச் நகரில்
நடைபெற்றது.

சிவராம் நினைவுப் பணிமன்றத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 'தீவிரவாத
எதிர்ப்பு நடவடிக்கையாக இனப்படுகொலை - தர்மரெத்தினம் சிவராம் மீதான ஒரு
மீள்வாசிப்பு' என்ற தலைப்பில் ஜனநாயக ஊடகவியலாளர் சங்கத்தின் இணைப்பாளரும்,
ஆய்வாளருமான பாஷண அபயவர்தன நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

அவர்
தனது உரையில் "கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இனப்படுகொலை
என்பது இராணுவ மற்றும் அரசியல் நலன்களை மாத்திரமன்றி உலகளாவிய நலன்களையும்
கொண்டுள்ளது என்பதை 2003, 2004 ஆண்டு காலப் பகுதியிலேயே சிவராம் நன்கு
கணித்திருந்தார். அவரது கணிப்பு சரியானது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு
விட்டது" எனத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் நீதியை நிலைநாட்ட தமது
இன்னுயிர்களை ஈந்த சகல இனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கும், ஊடகப்
பணியாளர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சிவராம்
அவர்களின் திருவுருவப் படத்திற்கு தீபமேற்றி, மலர்மாலை அணிவித்து
உரையாற்றிய பாஷண தொடர்ந்து பேசுகையில், போலந்து நாட்டைச் சேர்ந்த
சட்டத்தரணியான ரபாயல் லெம்கின் என்பவரே 1944ம் ஆண்டில் 'இனப்படுகொலை' என்ற
பதத்தை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் ஆகிறார்.

நாஸி
யேர்மனியில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளே
இனப்படுகொலை என வர்ணிக்கப்பட்ட முதலாவது படுகொலையாகக் கருதப்பட்ட போதிலும்,
ஆர்மேனியர்களுக்கு எதிராக துருக்கியினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையே
லெம்கின் தனது கவனத்திற் கொண்டு இந்தப் பதத்தை உருவாக்கினார்.
'குற்றங்களுக்கெல்லாம் மேலான குற்றம்' என இனப்படுகொலையை அவர் வர்ணித்தார்.

ஒரு தேசத்தை, இனத்தை, இனக் குழுமத்தை, மதத்தைப் பின்பற்றுவர்களை
முழுமையாகவே, பகுதியாகவோ அழித்து விடுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளையே
இனப்படுகொலை என அவர் வரையறுத்தார். அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையில் அதனை
ஒரு சட்டமாக மாற்றுவதற்கும் அவர் போராடி 1948ல் வெற்றியும் பெற்றார்.

சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தில் இரண்டு தரப்புகள் பங்குபற்றி இருந்தன.
அதனால் தாக்குதல், பதில் தாக்குதல் என்பவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையே.
ஆனால், யுத்தத்தில் நேரடியாகப் பங்கு கொள்ளாத பொதுமக்களும் திட்டமிட்ட
முறையில் கொன்றொழிக்கப்பட்டமையை இனப்படுகொலை என்ற வரையறைக்குள் அடக்க
முடியும்.

யுத்த காலத்தில் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் சரத்
பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ச, அரசுத் தலைவர் மகிந்த
ராஜபக்ச ஆகியோர் உட்படப் பலர் தெரிவித்த கருத்துக்கள் அவர்கள் வன்னியிலே
விடுதலைப்புலிகளோடு இருந்த 360,000 தமிழ் மக்கள் மீது தெரிந்து கொண்டே,
திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை நிரூபிக்கின்றன.

இலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்கள் விடயத்தில் இரண்டு விதமான அணுகுமுறைகளைக்
கடைப்பிடித்தனர். சந்திரிகா போன்றோர் ஆசைவார்த்தை காட்டி மக்களைத் தம்
பக்கம் ஈர்க்க முயன்றனர். யுத்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு உணவு
மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்த அவர்கள் அதிகாரப் பரவலாக்கல்
குறித்தும் அடிக்கடி பேசி வந்தனர்.

ராஜபக்ச போன்ற இரண்டாவது
வகையினர் மக்களை வகைதொகையின்றி அழித்தொழித்தேனும் அச்சுறுத்திப் பணிய
வைக்கும் தந்திரத்தைக் கைக்கொண்டனர். இராணுவக் கல்வியில் 'ரோமன் மாதிரி' என
அழைக்கப்படும் இவ்வகைத் தந்திரோபாயத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக
மக்கள் பாதிக்கப்படுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்கள் தம் பக்கம்
சாய்வார்கள் என அவர்கள் நினைக்கின்றனர். இதுவே இறுதி யுத்தத்தில்
பயன்படுத்தப்பட்ட தந்திரோபாயமாகும்.

பாதுகாப்பு வலயம் என்ற
பகுதிக்கு வரவழைக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியான எறிகணை வீச்சு
நிகழ்த்தப்பட்டது. அந்த மக்களின் மனவுறுதியைக் குலைத்து, தங்களது கொள்கைகளை
மறந்து உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் குறிக்கோளை மாத்திரம் அவர்கள்
மத்தியில் ஏற்படுத்துவதே அதன் நோக்கம்.

இத்தகைய நிலையை சிவராம்
பின்வருமாறு விபரித்தார். ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்படுகின்றார். கைதின் பின் அவர் கடுமையான சித்திரவதைக்கு
தொடர்ச்சியாக உட்படுகின்றார். இப்போது அவரின் சிந்தனை இரண்டு விடயங்கள்
பற்றியதாகவே இருக்கும். ஒன்று அடுத்த சுற்று சித்திரவதை எப்போது தொடங்கும்
என்பது. மற்றையது தன்னைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்பது. இந்த
உதாரணத்தை ஒரு மக்கட்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ ஊடகவியலாளர் பெண்இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.
» நாகதேவன் துறை கடற்படை முகாம் எப்படி அழிக்கப் பட்டது..? மிக சுவாரஸ்யமான தகவல்கள்..
» ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிரவேறு வழியில்லை..
» "தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொப்புகொள்ளை ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் மாவீரர் நாள் "
» சென்னையில் நடக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இந்தியத் தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் நடத்த சிங்களத் தேசிய இனவாத அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum