போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Arul11 "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Untitl11 "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Iiiiii12 "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Untitl13 "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி"

2 posters

Go down

"வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Empty "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி"

Post by Admin Thu Dec 06, 2012 9:04 am

"வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி"
=======================
[You must be registered and logged in to see this image.]
கிளிநொச்சியில் இறுதியாக ஐ.நா அதிகாரியாகப் பணியாற்றிய ப
ென்ஜமின்
டிக்ஸ், Reflections of the rippling effects of conflict on a Sri Lankan
family என்ற பெயரில், சிறிலங்கா போரின் தாக்கங்களை வெளிப்படுத்தும் ஓவிய
நாவல் ஒன்றை வெளியிடவுள்ளார். அதுபற்றிய அவரது குறிப்பு.

2008
செப்ரெம்பர் 12ம் நாள், விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகமான
கிளிநொச்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்று நான்
கேட்கப்பட்டிருந்தேன்.

சிறிலங்கா இராணுவம் தெற்கே சில கி.மீ தொலைவில் இருந்து, ஏற்கனவே நகரின் மீது எறிகணைகளை வீசிய போது, ஐ.நா வளாகமும் தாக்கப்பட்டது.

எனது ஐ.நா பணியகத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட விமானத்
தாக்குதலின் போது, குண்டுச்சிதறல்கள் எமது முற்றத்தில் மழையாக கொட்டின.

நாம் வெளியேறப் போகிறோம் என்ற செய்தி வெளியானதை அடுத்து, நூற்றுக்கணக்கான
தமிழ்ப் பொதுமக்கள், எமது பணியகத்துக்கு வெளியே எதிர்ப்புப் போராட்டம்
ஒன்றை நடத்தி, எம்மை வெளியேற வேண்டாம் என்று கோரினர்.


20
ஆண்டு மோதல்களுக்குப் பின்னர், அனைத்துலக முகவர் அமைப்புகள், அதிகாரிகளின்
பிரசன்னம் அந்தப் பிரதேசத்தில் இல்லாமல், சிறிலங்கா இராணுவம் கடும்
பலத்துடன் முன்னேறும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், அது எந்தளவுக்கு கடுமையானதாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அனைத்துலக செஞ்சிலுவைக் குழு
வன்னிக்குள் வடக்கே மேலும் நகர்ந்தது. நாம் (ஐ.நா) வெளியேறத் தயாரானோம்.

வன்னியில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தேன்.

எமது பணியாளர்கள், மற்றும் சமூகத்தில் நான் பல நண்பர்களைப் பெற்றிருந்தேன்.

ஐ.நா பணியாளர்களில் தங்கியிருப்போர் உள்ளிட்ட வன்னிப்பகுதி மக்கள்
அங்கிருந்து வெளியேறுவதற்கு, விடுதலைப் புலிகள் மிகவும் இறுக்கமான அனுமதி
வழங்கும் நடைமுறையை வைத்திருந்தனர்.

நாம் அவர்களை விட்டுவிட்டு வெளியேறப் போவதால், மிகுந்த துன்பத்துடன், உணர்ச்சிமயமான சூழலில், அவர்களிடம் விடைபெறத் தொடங்கினேன்.

நான் அடிக்கடி சென்ற ஒரு குடும்பம் அது. அவர்களை எனக்கு மூன்று ஆண்டுகளாகத் தெரியும்.

அவர்களின் திருமணத்தில் பங்கேற்று, அவர்களின் மகள் பிறந்தபோது, அவர்களின்
வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாமரத்தின் கீழ் இருந்து சுவையான உணவை
சாப்பிட்டு, எனது நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.

அவர்கள் என்னை தம்பி என்றே அழைத்தனர். குடும்ப உறுப்பினராகவே பழகினர்.

வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு 9 மணியளவில் நான் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன்.

தவளைகளின் இரவுநேர இரைச்சல்களை மிஞ்சியபடி, அருகிலேயே எறிகணைகள் விழும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

அந்தக் குடும்பம் முற்றாக நம்பிக்கையிழந்து போயிருந்ததைக் கண்டேன்.

முந்தைய நாள் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை அடுத்து, கணவன் பதற்றத்துடன்
அவசியமான பொருட்களை தனது உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அவர்களின் இரண்டு வயதுக் குழந்தையுடன் மனைவி பதுங்குகுழியில் மனமின்றிப் பதுங்கியிருந்தார்.

எமது வெளியேற்றத்துடன் எல்லோரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.

எனது நண்பர் என்னைப் பார்த்துக் கேட்டார், “உண்மையிலேயே நீங்கள் வெளியேறுகிறீர்களா? எமக்கு என்ன நடக்கப் போகிறது?”

அந்தச் சூழலில் குழப்பத்தில் இருந்த நான் அவளுக்கு சில பதில்களை கூறினேன்.

ஐ.நாவின் அதிகாரபூர்வமான வரியில் சொல்வதானால், நாம் “இடமாற்றம் செய்யப்பட்டோம்”.

“விரைவில் திரும்புவோம்” என்று கூறுவது அபத்தமானது.

நாம் வெளியேறிய பின்னர், சிறிலங்கா அரசாங்கம் எம்மை மீளத்திரும்ப அனுமதிக்காது.

உழவு இயந்திரத்தில் பொருட்களை ஏற்ற அவர்களுக்கு நான் உதவினேன்.

அங்கே சொல்வதற்கு எதுவுமேயில்லாததால், அமைதியாக இருந்தோம்.

எனக்கு ஒரு கோப்பை தேநீர் வழங்கப்பட்டது. அமைதியாக அதைக் குடித்தேன்.

“நல்ல அதிஸ்டம்”, “பாதுகாப்பாக இருங்கள்”, “விரைவில் உங்களைப் பார்ப்பேன்”
என்பதை விட அவர்களுக்குச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை.

அது எனக்கு மோசமானதாக தெரிந்தது.

அழகான கொழுப்பு நிறைந்த கன்னங்களை கொண்ட சிறிய பெண் குழந்தையை இறுக கட்டியணைத்து, விட்டு வெளியேறினேன்.

சில நிமிடங்கள் கழித்து நான் எனது காரை நிறுத்தி விட்டு வீதியின் பக்கம் வெறித்துப் பார்த்தேன்.

மறுநாள் காலை நாம் எமது வாகனங்களை அணியாக நிறுத்தியிருந்தோம்.

நாம் வெளியேறுவதை பல பொதுமக்கள் எமது வளாகத்துக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

எமது வெளியேற்றம் காலை 11 மணியளவில் இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

காலை 10.45 மணியளவில், சிறிலங்கா விமானப்படை எம்மில் இருந்து 2 கி.மீ தொலைவில் வீதியில் குண்டுகளை வீசியது.

இப்போது விலகலாம் என்ற என்ற செய்தியை அது கூறியது.

தலைக்கவசம், உடற்கவசம், உள்ளிட்ட எல்லா பாதுகாப்பு விதிமுறைகளும் வாகனத்தில் இருந்தன.

சேலை அணிந்த, சாரம் அணிந்த குடும்பங்களைத் தாண்டி வாகனத்தைச் செலுத்தினேன்.

அவர்களை கைவிட்டுச் செல்வதான குற்றஉணர்வினால் நான் பாதிக்கப்பட்டேன்.

பொதுமக்களைப் பாதுகாக்கின்ற கொள்கை இல்லாத ஐ.நாவில் இருந்து என்ன செய்யப் போகிறேன்? என்று எனது உள்ளுணர்வு கேள்வி எழுப்பியது.

மறுநாள் ஐ.நாவில் இருந்து நான் பதவி விலகிக் கொண்டேன்.

தொடர் நிகழ்வுகளால் வெறுப்படைந்து சிறிலங்காவை விட்டு வெளியேறும் சூழலை ஏற்படுத்தியது.

அடுத்த இரண்டு ஆண்டுகள், வரையறுக்கப்பட்ட ஊடக செய்திகள் மூலம் சிறிலங்காவை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன்.

நண்பர்கள் இறந்துபோன செய்திகள் கிடைத்தன.

2011 மே மாதம், கிளிநொச்சியில் இருந்த நண்பரின் கணவரின் முகநூலில் இருந்து நட்புக்கான அழைப்பு கிடைத்தது.

அவர்கள் எல்லோரும் உயிர்தப்பி, இந்தியா சென்றார்கள்.

அதேவேளை, அவர்களைப் பார்க்கச் சென்றபோது, கணவர் ஏற்கனவே ஐரோப்பா புறப்பட்டு விட்டார்.

புலம்பெயர் தமிழர்கள் மூலம் சேகரித்த 20 ஆயிரம் டொலரை முகவருக்கு
கொடுத்து, மனைவி மற்றும் மகளை விட்டு விட்டு புகலிடம் தேடிச்சென்றார்.

சென்னையில் சேரிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கொங்றீட் அறையில் நான், எனது பழைய, அன்பு நண்பருடன் அமர்ந்திருந்தேன்.

வெளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது.

இப்போது 5 வயதாகும் அந்தக் குழந்தை என் மடியில் அமர்ந்து மாமா என்று அழைத்தது.

இந்தக் கதையை சொல்ல வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன்.

சிறிய கடற்கரைப் பகுதிக்குள் கடுமையான குண்டுவீச்சுகளில் இருந்து இந்தக் குடும்பம் உயிர் பிழைத்தது.

இறுதிவாரங்களில் அவர்கள் எதுவும் செய்ய முடியாத போது தற்கொலை செய்து கொள்வது பற்றி சிந்தித்தார்கள்.

ஐ.நாவினால் அமைக்கப்பட்ட, சிறிலங்கா அரசினால் நடத்தப்படும் “பாதுகாப்பு நரகமான” முகாம்களில் அவர்கள் ஏழு மாதங்கள் வாழ்ந்தார்கள்.

அதன்பின்னர், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.

அவர் இப்போது சென்னையில் தனியாக, பாதிக்கப்படக் கூடிய சூழலில் வாழ்கிறார்.

அவள் தனது கணவரிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.

போரின் நீண்டகால விளைவாக இதைக் காண்கிறேன்.

இந்தக் குடும்பமும், இதுபோன்ற ஏனையவர்களும் தமது வீடுகளைப் பார்க்கப் போவதில்லை.

அவர்கள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேறப் போகிறார்கள்.

இதுபோன்ற கதைகளை உயிர்தப்பி அகதிகளாக ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் அடைக்கலம் தேடியுள்ளோரிடம் சேகரித்துள்ளேன்.

கணவர் அன்ரனி இப்போது லண்டனில் இருந்த கொண்டு, சிறிலங்காவில் தனது
கடந்தகால வாழ்க்கையை, புகலிட சட்டவாளரிடமும், சென்னையில் உள்ள தனது
மனையுடன் ஸ்கைப் வழியாகவும் பகிர்ந்து கொள்கிறார்.

திரைப்பட இயக்குனர் லன்ட்சே பொலொக்கும் நானும், 2011இல் இந்தக் கதை ஓவியங்களை வரையத் தொடங்கி இப்போது நூல் வடிவைப் பெற்று வருகிறது.

நவீன போர்முறையின் கொடூரத்தன்மையை மக்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன்.

ஆனால், மோதலின் விளைவுகள் ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகளுக்கும் தொடரும்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

"வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி" Empty Re: "வன்னிப்போர் அவலங்களின் கதைகளை ஓவிய நாவலாகத் தயாரிக்கும் UNஇன் முன்னாள் அதிகாரி"

Post by nilavu Thu Dec 06, 2012 5:30 pm

அவருக்கு அமது வாழ்த்துக்கள்

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பி.பி.சி தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்.
» முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி.
» முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :
» முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளை குறிவைக்கும் கேபி!
» புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி முள்ளியவளையில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum