போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Arul11 இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Untitl11 இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Iiiiii12 இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Untitl13 இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை!

Go down

இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Empty இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை!

Post by Admin Mon Sep 17, 2012 5:46 pm

[You must be registered and logged in to see this link.]
இலங்கைத் தமிழர் இன்னல் தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கிய பிரதமர் தேவை! Srilanka''காமாலைக்
கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்; மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய்'' என்ற பழமொழிகளை அறிவோம். இப்படித்தான் தமிழ்நாட்டு இயக்கங்களும்
தலைவர்களும் செயல்படுகின்றனர்.
கால்பந்து விளையாட வந்த இலங்கை
மாணவர்களையும் யாத்திரை வந்த கிறிஸ்தவர்களையும் ஓடஓட விரட்டுவார்களா?
கால்பந்து விளையாட வந்த இலங்கை மாணவர்களை விளையாட்டில் பயிற்றுவித்து
விருந்தோம்பி அனுப்பியிருந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வியப்புற்று இலங்கை
சென்றதும் அங்கு நம்மைப்பற்றி உயர்வாக எடுத்துச்சொல்லும் நல்ல தூதுவர்களாக
இருந்திருப்பார்கள். ஆனால், நாம் அவர்களைத் துரத்திவிட்டோம். அதன்
விளைவு...?
""ஸ்ரீலங்கா மொழியால் சிங்கள நாடு; மதத்தால் பௌத்த நாடு''
என்பதே அங்கு ஆட்சியில் உள்ளவர்களின் கொள்கை. இலங்கையில் பல ஆயிரம் இந்துக்
கோயில்கள் அழிக்கப்பட்டன. பல நூறு மசூதிகள் இடிக்கப்பட்டன. பல கிறிஸ்தவ
தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இவை உலகம் அறிந்த செய்திகள்.
தஞ்சை
பூண்டி மாதாவையும் வேளாங்கண்ணி மாதாவையும் கண்டு செல்ல வந்தவர்கள் கிறிஸ்தவ
மதத்தைச் சேர்ந்தவர்கள். ""இருபது ஆண்டுகளாக இங்கு வருகிறோம்.
எங்களுக்கும் தமிழ் தெரியும். எங்களை ஏன் தமிழ்நாட்டில்
துரத்துகிறார்கள்?'' என்று அவர்கள் சொல்லிவிட்டு விமானத்தில்
சென்றுவிட்டனர். யாத்திரையாக இங்கு வந்த கிறிஸ்தவர்கள் எல்லோரும் புத்தளம்,
சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும்போது தமிழ்நாட்டாரின்
மூடத்தனம் நன்கு தெரிகிறது. இங்கு வந்தவர்கள் கிறிஸ்தவர்கள். இதில்
சிங்களர் யார், தமிழர் யார் என்று வேறுபாடு கண்டவர்கள் யார்?
தமிழ் ஈழம்
என்ற வரைபடத்தைப் பார்த்தால் அதன் இடப்பக்கம் கீழாக இருக்கும் பகுதியை
"வடமேல் மாகாணம்' என்பார்கள். இங்குதான் புத்தளம், சிலாபம் ஆகிய ஊர்களும்
உள்ளன. 1960 வரை தமிழர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் காடுகளை அழித்து
சிங்களக் குடியேற்றங்கள் புகுத்தப்பட்டன. இங்குள்ளவர்கள் பேசும் தமிழ்
யாழ்ப்பாணத் தமிழாகவும் இருக்காது. இந்தியத் தமிழாகவும் இருக்காது.
இந்த
மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் அடிக்கடி
வந்து சென்றபடியால் அவர்கள் மொழி சொல்லும் சில சிங்களச் சொற்களும் கலந்த
தமிழையே இவர்கள் பேசுவர். இங்குள்ள முன்னேஸ்வரம் முன்னைநாதர் கோயில்
இந்துக்களுக்கு முக்கியமானது. முன்னைநாதர் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான
தேங்காய்கள் உடைபடுவதைப் பார்த்தாலே வியப்பாக இருக்கும். இங்குள்ள
தென்னந்தோப்புகள் எல்லாம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தால்
வேறுபட்டிருப்பினும் மொழியால் தமிழர்களுக்கே சொந்தமாக உள்ளன.
சைமன் காசி
செட்டி, கொழும்பு மேயராக இருந்த ருத்ரா ஆகிய சான்றோர்கள் வாழ்ந்த பூமி
இது. அக்காலத்தில் பாண்டி நாட்டின் கடற்கரையில் முத்து எடுத்ததுபோல்
இப்பகுதியிலும் தமிழர்கள் முத்தெடுத்துள்ளார்கள்.
கொழும்பு நகரின்
மத்திய (நாடாளுமன்ற) தொகுதி தமிழை தாய்மொழியாகக் கொண்ட இந்து, முஸ்லிம்,
கிறிஸ்தவ மக்களை அதிகமாகக் கொண்ட தொகுதியாகும்.
கொழும்பு செட்டியார்
தெருவுக்கு அடுத்ததாக கொச்சிக்கடை என்ற ஒரு பெரிய பகுதி இருக்கிறது. இதன்
கடற்கரையில் மிகப்பெரிய அந்தோணியார் கோயில் இருக்கிறது. வசிப்பவர்கள்
எல்லோரும் மீனவர்கள் - கிறிஸ்தவர்கள். உணவு, உடை, நடை, பேச்சின் சாயல்
எல்லாம் சிங்களர்போல் இருக்கும். ஆனால், அவர்கள் வீட்டு மொழி தமிழ்.
அந்தோணியார் கோயில் விழாக்களும் தமிழ்மொழியில்தான் நடக்கின்றன.
தலைநகர்
கொழும்புக்குத் தெற்கே தொடங்கி அம்பன்தொட்ட வரை சிங்கள மீனவர்கள் உள்ளனர்.
இன்றைய இலங்கையின் மீன்பிடித் தொழிலில் சிங்களர் இரண்டு லட்சம் பேர்
மட்டுமே. ஆனால், தமிழ்ப் பகுதி மீனவர்கள் மூன்று லட்சம் பேர் என்பது
கணக்கு. இலங்கை மீனவர்களிடத்தில் சிங்களன், தமிழன் என்று சண்டை வந்ததாக
வரலாறு இல்லை.
வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், தேவேந்திரர்,
பார்க்கவர் என்று ஜாதிக் கட்சிகளாகத் தலைவர்களைக் கண்டுள்ள
தமிழ்நாட்டாருக்கு இலங்கையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
திருச்சியில்
இருந்து தமிழர் கொழும்பு செல்கின்றனர். முத்தையா முரளீதரன் போன்றவர்கள்
கண்டியில் வாழ்கிறார்கள். அருணகிரியார் பாடினாரே ""சோதி சிவஞானக் குமரேசா,
கோமிற் கதிர்காமப் பெருமாளே'' என்று அந்த கதிர்காமம் தென் இலங்கையின்
கடைசியில் இருக்கிறது. அந்தக் கதிர்காமத்துக்குப் பக்கமாக உள்ள அம்பன்தொட்ட
என்ற ஊரில் சீன அரசு இலங்கைக்கு விலையில்லாத ஒரு துறைமுகத்தைக் கட்டிக்
கொடுத்துள்ளது.
சிங்களர், தமிழரைப்போன்ற அறிவு ஜீவிகளும் அல்ல; உழைக்கக்
கூடியவர்களும் அல்ல. இயற்கை அவர்களுக்கு ஒத்துழைக்கிறது. விருந்தோம்பலில்
சிறந்தவர்கள். புத்த மதத்தில் அதீத பற்றுள்ளவர்கள். புத்த பிக்குகள்
சொல்வதை கடவுள் சொல்வதாக நம்புபவர்கள்.
இலங்கையின் இன ஒற்றுமைக்கும்,
நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போட்டு சுகமாக வாழ்ந்து
கொண்டிருப்பவர்களில் முதலிடம் புத்தமத சாமியார்களுக்கு.
இரண்டாமிடம்
அரசியலைப் பிழைப்பாகக் கொண்டவர்கள். அதிலும் அரசியல்வாதிகள் புத்த
சாமியார்களைப் பகைத்துக்கொண்டு வாழ முடியாது. எங்கும், எதிலும் புத்தம்
புத்தம் என்று சொல்லி மக்களிடம் பயம் காட்டிக்கொண்டு நாட்டை 300 ஆண்டுகள்
வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, நாம் இங்கு வரும் இலங்கையர்
யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று உதவி செய்தால் அதுவே அவர்களின் செயலில்
மாற்றத்தை உண்டுபண்ணும். பராக்கிரம பாகு என்ற மன்னன் காலத்தில் மட்டுமே
இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டு வாழ்ந்துள்ளனர். தமிழ் அறிந்த அம்மன்னன்
அவையில் தமிழர்கள் அமர்ந்திருந்தனர்.
ஆங்கில ஆட்சியின்போது
அடங்கிக்கிடந்த சிங்களத் தலைவர்கள், புத்த சாமியார்கள் சுதந்திர இலங்கை
தங்களது மட்டுமே என்று கோஷம் போடுவதால் இந்த இருவித தலைமைக்கு மட்டுமே நாம்
எதிர்ப்பு காட்ட வேண்டும். ராஜபட்சக்களும் பிக்குகளும் வருவதை அரசியல்
ரீதியாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதுவரை செய்துகொண்ட
ஒப்பந்தங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு
இந்தியா செய்யும் உதவி ஐ.நா. சபை மூலமாக மட்டுமே நேரடியாகச் செய்யப்பட
வேண்டும்.
உலக வரலாறு தெரிந்த இந்திரா காந்தியைப் போன்ற ஒரு தலைமை
தில்லியில் வேண்டும். இந்தியப் பற்றும் தமிழ் உணர்வும் மிக்க சி.
சுப்பிரமணியம், ம.பொ. சிவஞானம் போன்ற தமிழர்கள் தமிழகத்துக்கு வேண்டும்.
தமிழ்
ஈழம் அமைந்தால் இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய தமிழர்கள் நிம்மதி
அடைவார்கள். வரவேற்போம். இந்திய வம்சத்தைச் சார்ந்த தமிழர்களும்
வணிகர்களும் சிங்களப் பகுதிகளில் வாழ்கிறார்களே அவர்களுக்கும் சிங்கள
நாட்டில் வாழும் உரிமை பெற்றுத் தரவேண்டும்.
சுய ஆட்சியுடைய மாநிலங்களாக அமைத்து மத்தியில் இலங்கை அரசு என்ற முறையில் இருக்குமானால் மிகச் சிறப்பாக இருக்கும்.
இலங்கைக்கு
அண்டை நாடு என்பது இந்தியா ஒன்றுதான். ஆகவே, இந்திய உதவியின்றி அவர்களால்
வாழவே முடியாது. சீனாவும் பாகிஸ்தானும் அவர்களுக்கு உதவுகின்றன. அவர்களின்
உதவிகளை இலங்கை சிங்கள அரசு தந்திரமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவைப்
பகைத்துக்கொண்டு வாழ முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்தீர இந்தியாவுக்கு ஒரு சாணக்கியர் இப்போது பிரதமராக வேண்டும்.

நன்றி: மு.ஐ.வரதராஜன், சேந்தமங்கலம் (தினமணி)
நன்றி :http://www.tamilleader.in/news/2558-2012-09-17-08-47-47.html
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர்
» இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்: ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்
» பாலச்சந்திரன் படுகொலை: நடுநிலை விசாரணை இந்தியாவுக்கு முக்கியம் – கேணல் ஹரிகரன்
» திருச்சியில் கருணா தங்கியிருக்கிறாரா?: ஹோட்டலை முற்றுகையிட்ட இலங்கைத் தமிழர்கள்
» விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியீடு: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum