போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Arul11 விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Untitl11 விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Iiiiii12 விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Untitl13 விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!!

Go down

விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Empty விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!!

Post by Admin Wed Aug 22, 2012 5:37 pm

ஒரு முழுமையான ராணுவத்திற்கு அளிக்கப்பட்ட
பக்காவான பயிற்சியை தனது போராளிகளுக்கு, தாய் மொழியான தமிழிலேயே முழுமையான
அளவில் கொடுத்துள்ளார் பிரபாகரன். இலங்கை ராணுவ அதிகாரிகளே அசந்து போகும்
அளவுக்கு மிக மிக திறமையான முறையில், அனைத்துத் திட்டங்களையும் அவர் தீட்டி
அவற்றை தனது தளபதிகளுக்குக் கொடுத்து கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கைப்
படையின் கண்களில் விரலை விட்டு ஆட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! 20-submarine200கடலுக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு ராணுவத்திற்கே உரிய கட்டுக்கோப்புடன் இயங்கி வந்த இயக்கம் என்பதை யாருமே மறுக்க முடியாது.

விடுதலை புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ராணுவக் கல்வி!! Sub-vechile2விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள்
இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்
பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் வெகு
அழகாக திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு
ராணுவத்தைப் போலவே இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப்
புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பல நாட்டு உதவியுடன், ஒரு தனி மனிதனின் கீழ் இயங்கி வந்த விடுதலைப்
புலிகளுக்கு எதிரான போரை முடித்து விட்ட ராணுவம் தற்போது புலிகள்
பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டைகளை நடத்தி ஏராளமான ஆயுதங்கள்
உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசுக்கு மிக மிக முக்கியமான புதையல் ஒன்று
கிடைத்துள்ளது. அது விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள் உள்ளிட்டவை
குறித்த தகவல்கள் அடங்கிய மிகப் பெரிய ஆவணங்கள்.

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் மண்ணுக்குள் பெரிய பெரிய பேரல்களில்
புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம்
கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய்
விட்டனராம். காரணம், எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல்
இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு
ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள்
காட்டுகிறதாம்.

பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்…

இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக
இருந்த ஒருவரிடமிருந்து கறந்துள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர்
யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின்
அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல்,
ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள்,
புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட் பல
முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ்
குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகள் பொருட்களிலேயே மிக மிக முக்கியமானது
இந்த ஆவணங்கள்தான். கிட்டத்தட்ட புலிகள் அமைப்பின் செயல்பாடுகளை மொத்தமாக
அறிந்து கொள்ள இது உதவுகிறது. உள்நாட்டில் அவர்களுக்கு இருந்த கட்டமைப்பு,
வலையமைப்பு குறித்த முக்கியத் தகவல்கள் இதில் உள்ளன என்றார் அவர்.

கொழும்பில் புலிகளுக்கு இருந்த கட்டமைப்பு, நிதிஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்தும் இதில் விரிவான தகவல்கள் உள்ளதாம்.

போராளிகளுக்கு முழுமையான ராணுவக் கல்வி…

பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியை அளித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள்,
அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள்,
வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய
நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய
ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு,
பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான
வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய
வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத்
தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று
எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார்
பிரபாகரன்.

வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை,
வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை,
போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு
வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும்,
வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர்
போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் விடுதலைப்
புலிகளுக்கு நன்கு தெரிந்திருந்தன.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை
பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள்
போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து
அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டு எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவையும் அவற்றில் அடக்கம்.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட
நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட
வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக
எழுதப்பட்டிருந்தன.

ஒரு நிலையான ராணுவத்துக்கு உரிய கட்டுக்கோப்புடன் விடுதலைப் புலிகள்
இயக்கத்தைத் தனி ஒரு மனிதனாக அவர் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு,
அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து
அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120
மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி
பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள்
அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம்
எடுத்துக் கொண்டதும் அந்த ஆவணங்களில் இருக்கிறது.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட
ஒரு புலியின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும்
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய
விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கத்தை சாதாரண போராளி அமைப்பாக இல்லாமல், கிட்டத்தட்ட ஒரு
நாட்டின் படையைப் போல நடத்தி வந்துள்ளார் பிரபாகரன் என்பது இந்த
ஆவணங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

நீர்மூழ்கி சிக்கியது…

இதற்கிடையே, கடலுக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பலை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளது.

3 முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். முல்லைத்தீவு
கடற்கரையில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில், கடலில், 40 அடி
ஆழத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல, முள்ளியவெளி கடல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான
ஆயுதங்கள், வெடிபொருட்களையும் ராணுவத்தின் இன்னொரு குழு
கண்டுபிடித்துள்ளது.

புலிகளின் நீர்மூழ்கி சிக்கியது..

கடலுக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பலை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளது.

3 முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். முல்லைத்தீவு
கடற்கரையில், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில், கடலில், 40 அடி
ஆழத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல, முள்ளியவெளி கடல் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான
ஆயுதங்கள், வெடிபொருட்களையும் ராணுவத்தின் இன்னொரு குழு கண்டுபிடித்தது
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக பொது அமைப்பான ஐ நா தனது போர் குற்ற அறிக்கையில் ஒழுக்கமான விடுதலை இயக்கத்தை கட்டியமைத்து வழிநடத்தியவர் மாவீரன் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியள்ளது .
» யாழ் பல்கலையில் கல்வி பயிலும் ஒரு சிங்கள மாணவியின் ,,,,,
» கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம்
» தீவீரவாதிகளா விடுதலை புலிகள்! ஒரு சிறப்பு கண்ணோட்டம்.
» முள்ளிவாய்க்காளோடு முற்று பெற்றதா நமது விடுதலை போராட்டம்...???

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum