போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா Arul11 இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா Untitl11 இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா Iiiiii12 இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா Untitl13 இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா

Go down

இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா Empty இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா

Post by Admin Tue Apr 02, 2013 8:15 am

இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம் - சுபத்ரா


விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையை
மையப்படுத்திய நிழல் யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இலங்கையின்
புவிசார் கேந்திர அமைவிடம் தான் இந்த நிழல் யுத்தத்தின் அடிப்'படைக்
காரணம்.

இந்த நிழல் யுத்தத்தில் பங்கெடுக்கும் தரப்புகள் ஒன்றிரண்டு நாடுகள் அல்ல.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான், ஈரான், பாகிஸ்தான் என்று உலகில்
முக்கியமான சக்திகளின் கவனம் இப்போது இலங்கையின் மீது திரும்பியுள்ளது.

சர்வதேச கடல்வழிப் பாதையை அண்டியுள்ள இலங்கையின் அமைவிடம் பல்வேறு
நாடுகளும் இலங்கையின் மீது குறிவைத்துச் செயற்படுவதற்கு காரணமாக
அமைந்துள்ளது.

பல்வேறு நாடுகளும் இலங்கையைத் தமது பாதுகாப்பு
நலனுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள முற்படுவதும், இலங்கை தனக்குள்ள
நெருக்கடியிலிருந்து தப்பிக்க சில நாடுகளுக்கு அதிக இடைவெளியை கொடுப்பதும்
இந்தப் பிராந்தியத்தை நிழல் யுத்தத்துக்கான களமாக்கி விட்டுள்ளது.

இந்த நிழல் யுத்தத்தில் சீனா ஏற்கனவே அதிக செல்வாக்கை கொண்டுள்ளது
தெரிந்ததே. போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு
திடீரென அதிகரித்தது.

அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைப்பதால்
வர்த்தக நலன்கள் கிடையாது என்று, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா
தட்டிக்கழிக்க அதனை சீனா கவ்விப் பிடித்துக் கொண்டு வேகமாக உள்ளே
நுழைந்தது.

அதன் தொடர்ச்சியாக மத்தள விமான நிலையம், அனல் மின்
நிலையம், துறைமுகங்கள், அரங்கங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் என்று
சீனாவின் கையில் ஏகப்பட்ட திட்டங்கள் போயின.

இதன்மூலம் இப்போது
இலங்கைக்கு உதவும் (கடன் மற்றும் கொடை) நாடுகளின் பட்டியலில்
முதலிடத்துக்கு வந்துள்ளது சீனா. அம்பாந்தோட்டையில் அமைத்துள்ள துறைமுகத்தை
இந்தியா வெகுவாக அச்சத்துடன் பார்க்கிறது.

இந்தத் துறைமுகம்
மற்றும் மத்தள விமான நிலையத்துக்கான எரிபொருள் விநியோகத்தை சீனாவே
மேற்கொள்ளவுள்ளது. இது, தனது பாதுகாப்புக்கு எதிராக, அம்பாந்தோட்டைத்
துறைமுகம் சீனாவினால் பயன்படுத்தப்படக் கூடும் என்ற இந்தியாவின் அச்சத்தை
வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வரிகள், தீர்வைகள் இல்லாமல்
1.5 பில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் திட்டத்தை சீனாவின் ஹன்குய் ஒப்பந்த
மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு அளித்துள்ளது இலங்கை.

அதுவும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த சூழலில் தான் இது இடம்பெற்றுள்ளது.
இதனை இந்தியா ஒருபோதும் விரும்பாது. திருகோணமலையில் பிரித்தானியர்
காலத்தில் அமைக்கப்பட்ட 102 எண்ணெய்க குதங்களையும் 600 ஏக்கர் காணிகளையும்
2002ல் இந்தியா பெற்றுக் கொண்டது.

இவற்றை இந்தியாவின் அரச
நிறுவனமான இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனம் நிர்வகிக்கிறது. இதற்குப்
போட்டியாகவே அம்பாந்தோட்டைத் துறைமுகம் விமான நிலையத்துக்கான எரிபொருள்
விநியோகத்தில் கால் வைத்துள்ளது சீனா.

அதுமட்டுமன்றி ஜெனிவா
தீர்மானத்துக்குப் பின்னர் திருகோணமலையின் எண்ணெய்க குதங்களின் ஒரு பகுதி
இந்தியாவிடமிருந்து மீளப் பெறப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
கூறியிருந்தார்.

அதனை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும், அநுர
பிரியதர்ஷன யாப்பாவும் நிராகரித்துள்ளனர். எனினும் திருகோணமலை எண்ணெயக்
குதங்கள் இந்தியாவிடம் இருப்பதை, இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என்பது
மட்டும் உண்மை.

இவை கைமாற்றப்பட்ட உடன்பாட்டை விடுதலைப்
புலிகளுடனான போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ஒப்பானது என்று கருத்து
வெளியிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இலங்கையில் எண்ணெய்
விநியோகத்தில் இந்தியா இறங்கியது லாபத்தை நோக்கமாகக் கொண்டு அல்ல என்றும்
அடித்துக் கூறியுள்ளார்.

இலங்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக்
கொள்வதற்காகவே எண்ணெய்க் குதங்களைக் கைப்பற்றியதாக அவர் கூறியுள்ளது, இந்த
அரசாங்கத்தின் மனோநிலையை படம்பிடித்துக் காட்டுகிறது.

இப்போது அதேவழியில் சீனாவுக்கும் எண்ணெய் விநியோகத்துக்கான களத்தை திறந்து விட்டுள்ளது இலங்கை.
இந்தநிலையில் இலங்கை மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவைக்
கண்காணிக்கவும், அதன் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் இந்தியா
விசாகப்பட்டினத்தில் உயர் திறன் கொண்ட நீர்மூழ்கி கடற்படைத் தளமொன்றை
அமைக்கவுள்ளது.

சீனா உள்ளிட்ட எதிரி நாடுகளின் செய்மதிகளின்
கண்ணுக்குப் புலப்படாத வகையிலும், வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும்
வகையிலும் நீர்மூழ்கிகளுக்கு பதுங்கு குழி வசதிகளுடன் இந்தத் தளம்
அமைக்கப்படவுள்ளது.

விசாகப்பட்டினத்திலுள்ள கிழக்கு கடற்படைத்
தலைமையகத்தில் இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தளம் வர்ஷா திட்டம்
என்ற பெயரில் நிறைவேற்றப்படவுள்ளது.

சீனாவின் ஹைனான் தீவின்
தென்புறத்தில் யலோங்கில் அமைந்துள்ள தரைக்குக் கீழான அணுசக்தி நீர்மூழ்கித்
தளத்துக்குப் பதிலடியாகவே இந்தியா இதனை அமைக்கவுள்ளதாக சில ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.

இங்கு தான் சீனாவின் புதிய சாங் வகை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் உள்ளன.

ஆனால் இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீட்டை குறைப்பதற்கே விசாகப்
பட்டினத்தில் புதிய தளம் அமைக்கப்படுகிறது என்'று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் இலங்கைக்கும் சீனாவுக்கும்
இடையில் செய்மதி மற்றும் விண்வெளித்துறையில் ஏற்பட்டு வரும் நெருக்கம்
தான்.

செய்மதிகளை ஏவ இலங்கைக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு அவற்றைக்
கொண்டு தமது நீர்மூழ்கிகளை சீனா உளவு பார்க்கலாம் என்று இந்தியா அச்சம்
கொள்கிறது.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் பலமே இலங்கை தான் என்று மாறிப்போயுள்ளது.

இந்தநிலையில் விசாகப்பட்டினத்தில் இந்தியா அமைக்கவுள்'ள பாரிய தளமும்,
அம்பாந்தோட்டையில் எரிபொருள் விநியோகம் சீனாவின் கைக்குச் சென்றுள்ளதும்,
இந்த நிழல் யுத்தத்தில் மையத்தை இலங்கையை நோக்கி இழுத்து விட்டுள்ளன.

இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் இலங்கையை வைத்து இந்தியாவுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறது.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல்
குவாசிம் குரேஷி நியமிக்கப்பட்டள்ளதை இந்தியா விருப்புடன் பார்க்கவில்லை.
இது ஒரு இராணுவ நலன்சார் நகர்வு என்றும், தனக்கு எதிரான நடவடிக்கை என்றும் தான் இந்தியா கருதுகிறது.

கடந்த மாதம் இவர் கொ|ழும்பிலுள்ள தூதரகத்தில் தனது கடமைகளை
பொறுப்பேற்றிருந்தார். இம்மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடிப்பதில் பாகிஸ்தானே அதிக கரிசனை காட்டியது.
கடந்தமுறை சீனா நேரடியாக களமிறங்கி ஆதரவு திரட்டியது. இம்முறை சீனா அவ்வாறு ஈடுபடவில்லை.

இம்முறை சீனாவின் இடத்தை பிடித்துக் கொண்டது பாகிஸ்தான்
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கர் இதில் தனிப்படக் கவனம் செலுத்தியிருந்தார்.

அவரது உத்தரவின் பேரில் ஜெனிவாவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் சமீர் அக்ரம்
இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை மூன்று முறை அழைத்து
இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளும்படி கேட்டிருந்தார்.

அவரது
பிரசாரத்தின் மூலம் குவைத், மொரிட்டானியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
என்பன தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. புர்கினோ பாசோ வாக்களிக்கவில்லை.

இந்த அமைப்பிலுள்ள லிபியாவும், சியராலியோனும் மட்டுமே ஆதரித்து வாக்களித்தன.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஏழு நாடுகளும் அமெரிக்கா பக்கம்
சாய்ந்திருந்தால் இலங்கைக்கு ஆதரவாக 6 வாக்குகள் தான் கிடைத்திருக்கும்.

இந்த உறவின் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் கொழும்பு வரவுள்ள
பாகிஸ்தான வெளிவிவகாரச் செயலர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார
அமைச்சர் ஜி.எல். பீரிஸ் போன்றோரைச் சந்தித்து பேசவுள்ளார். இவையெல்லாம்
இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் விடயங்கள்.

பாகிஸ்தான் இவற்றையெல்லாம் செய்வதற்கு காரணம் இலங்கை மீதான பரிவோ பாசமோ அல்ல. அது குறிவைத்துள்ளது இந்தியாவைத் தான்.

இலங்கையை வைத்து இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளிவிடப் பார்க்கிறது பாகிஸ்தான்.

காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்துவதிலேயே பாகிஸ்தான் குறியாக உள்ளது.

ஆங்காங்கே காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்கள் பாகிஸ்தானின் கை அங்கு ஓங்குவதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா என்ன செய்யும் என்பதைக் கணித்தே அதற்கு முரணான வகையில் பாகிஸ்தான செயற்பட்டது.

இதையே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி விடும் திட்டம் பாகிஸ்தானிடம் உள்ளது.

ஏற்கனவே 1994ல் காஷ்மீர் மனித உரிமை மீறல்களை ஐநாவுக்கு கொண்டு போய் இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது பாகிஸ்தான்.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் தனி ஈழத்துக்கு ஆதரவாக கிளம்பியுள்ள போராட்டம்
இந்திய மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளது.


மத்திய அமைச்சர் நாராயணசாமி தனி ஈழத்தை ஆதரிப்பது காஷ்மீரில் பாகிஸ்தான்
தனது வேலையைக் காட்டுவதற்கு வழி ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளது
இதையே காட்டுகிறது.
இவ்வாறாக பல்வேறு நாடுகளினதும் நிழல் யுத்த களமாக இலங்கை மாறியுள்ளது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இந்த தீவிர நிழல் யுத்தத்தை
தனக்குச் சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை
அரசாங்கம்.

இது இலங்கையை பேராபத்தில் தள்ளிவிடக்கூடிய வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.

சுபத்ரா
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "தமிழர்களை அழித்த பூமி தென்னிலங்கைக்கு உல்லாசபுரி, வருமான மையம்! - தாயகத்தில் இருந்து இளங்கீரன் "
» பசி ஒரு கோரம் தீர்க்கப்படாத யுத்தம் பலமனிதர்கள் தவறிழைப்பதன் முதல் காரணம்
» "யுத்தம் நடைபெற்றவேளை அவ்விடத்திலேயே நின்று புலிகளைக் காட்டிக்கொடுத்தார் கருணா என்பதனை விளக்க இதனை விட சிறந்த ஆதாரம் ஒன்று இருக்கவே முடியாது"
» நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ?
» இலங்கையில் சித்ரவதையா? ஆதாரம் இல்லை: பிரித்தானியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum