போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா " Arul11 "மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா " Untitl11 "மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா " Iiiiii12 "மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா " Untitl13 "மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா " Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா "

Go down

"மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா " Empty "மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா "

Post by Admin Sat Dec 22, 2012 8:39 am

"மகிந்த மிருகத்தின் 'கற்பழிப்பு' ஆயுதம் -புகழேந்தி தங்காராசா "
=================

[You must be registered and logged in to see this image.]
தமிழகத்தில் வெளிவந்து கொண்டிக்கும் தமிழக அரசியல் வாரப்பத்திரிகையில்
திரைப்பட இயக்குநரும் தமிழீழ ஆதரவாளருமான புகழேந்தி தங்காராசா அவர்கள்
இரண்டு பகுதிகளாக எழுதிய கட்டுரையினை ஈழதேசம் இணையம் மறுபிரசுரம்
செய்கின்றது. 1996ம் ஆண்டு. பிப்ரவரி மாதம் 11ம் தேதி.
திருகோணமலை மாவட்டத்தின் குமாரபுரத்துக்குள் தேடுதல் வேட்டைக்காக நுழைகிறது
இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களைத் தேடி வந்ததாக
எப்போதும் சொல்லும் கதையை அப்போதும் சொல்கிறது. அவர்கள் எதைத் தேடுவார்கள்
என்பது தெரிந்த குமாரபுரம் மக்கள்இ பெண் பிள்ளைகள் யாரும் அவர்கள் கண்ணில்
பட்டுவிடக்கூடாதே என்று கவலைப்படுகிறார்கள்.

ஊருக்குள் என்ன
நடக்கிறது என்பது தெரியாமல் சைக்கிளில் தன் தம்பியுடன் ஊரை நோக்கி
வந்துகொண்டிருந்த 16 வயது மாணவி தனலட்சுமிக்குஇ ஊரை நெருங்கியபிறகுதான்
ராணுவ நடமாட்டம் கண்ணில் படுகிறது. சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு
அருகிலிருந்த ஒரு கடைக்குள் போய் ஒளிந்துகொள்கிறாள். கடைக்குள் அவள்
ஒளிந்திருப்பதை மோப்பம் பிடித்த ராணுவ வெறியர்கள்இ உள்ளே புகுந்து அவளை
இழுத்துச் செல்கின்றனர்.

அதற்குப் பிறகுஇ அந்தச் சின்னப்
பறவையின் சிறகுகள் ஒவ்வொன்றாகப் பிய்த்து எறியப்பட்டன. சாயம்போன
வானவில்லாய்ச் சிதைந்துபோன அந்தத் தேவதைக்கு என்ன நடந்தது என்பதை வெளி
உலகுக்குச் சொன்னவன்இ அவளைச் சுட்டுக்கொன்ற - குமார - என்கிற சிங்களச்
சிப்பாய்.

குமார சொன்னதை முழுமையாகக் கேட்க இளகிய இதயமுள்ள
எவராலும் முடியாது. என்றாலும்இ அவசியம் கருதி சுருக்கமாகவாவது அதைக்
குறிப்பிட வேண்டியிருக்கிறது.

குமார சொன்னான் -
"நான்
கடைசியாகத்தான் உள்ளே போனேன். ஆடைகள் எல்லாம் கிழிக்கப்பட்டு பார்க்கவே
சகிக்கமுடியாத நிலையில் அவள் இருந்தாள். கேங் ரேப்-பால் அவளது உடல்
முழுக்க காயங்கள். அனேகமாகஇ பல்லால் கடித்த காயங்கள். அவளது பரிதாபமான
நிலையைப் பார்க்கப் பொறுக்காமல்தான் நான் அவளைச் சுட்டுக் கொன்றேன்."

1996ல் என்றில்லை....... அதற்கு முன்பும்இ அதற்குப் பின்பும் நீண்ட
நெடுங்காலமாய் இலங்கை ராணுவம் இதைத்தான் செய்து வருகிறது. தனலட்சுமியைப்
போலவே 1996ன் பிற்பகுதியில் சிதைக்கப்பட்டுஇ காதோடு காது வைத்தமாதிரி
செம்மணியில் புதைக்கப்பட்ட கிருஷாந்தி அறிவும் திறனும் கொண்ட 17 வயது
மாணவி. சிங்கள மிருகங்களால் கிருஷாந்தி எப்படி கிழித்தெறியப்பட்டாள் என்பதை
வெளி உலகுக்குச் சொன்ன சிங்களச் சிப்பாயின் பெயர் - சோமன ராஜபட்சே. அவன்
சொன்னதை அச்சில் ஏற்றவே முடியாது. அவ்வளவு கொடூரம். செம்மணியில் கிருஷாந்தி
மாதிரி நூற்றுக்கணக்கானோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதை அந்த ராஜபட்சே
தான் அம்பலப்படுத்தினான்.

கையில் சிக்குகிற எந்தத்
தமிழ்ப்பெண்ணையும் வயசு வித்தியாசம் பார்க்காமல் கூட்டாகக் கற்பழித்துக்
கொல்வது என்பதுஇ பல்லாண்டுக் காலமாக இலங்கை ராணுவத்தின் கொள்கையாகவே
இருந்துவருகிறது. தனலட்சுமிஇ கிருஷாந்தி - என்று ஆயிரக்கணக்கான பெண்
பிள்ளைகள்இ வெறி பிடித்து அலையும் சிங்கள மிருகங்களின் இச்சைக்கு இரையாகியே
பலியாகியுள்ளனர். மருத்துவராகஇ பொறியாளராகஇ ஆசிரியராகஇ செவிலியராகஇ
கணக்காளராக - எதிர்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் என்று அந்தப் பிள்ளைகள்
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு கனவு இருந்திருக்கும். அத்தனைக் கனவையும்
சிதைத்துஇ அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளையும் நசுக்கி நாசமாக்கிவிட்டன பௌத்த
மிருகங்கள்.

சுதந்திர தாகம் கொண்ட மக்களை உளவியல் ரீதியாக
அதைரியப்படுத்துவதற்காக இத்தகைய கேடுகெட்ட தாக்குதல்களை இலங்கை ராணுவம்
திட்டமிட்டு மேற்கொள்கிறது. சுதந்திரம் கேட்டால் இதுதான் கிடைக்கும் -
என்று சொல்லும் பகிரங்க அறிவிப்பு இது. பாலியல் வன்முறைக்கு
ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படும் தமிழ்ச் சகோதரிகளின் நிர்வாண உடல்கள் பல
சந்தர்ப்பங்களில் நடுத்தெருவில் வீசப்பட்டிருக்கின்றன. அதுஇ மற்றவர்களுக்கு
அந்த மிருகங்கள் விடுக்கும் மிரட்டல். சிங்கள ராணுவத்தில் மிருகங்கள்
மட்டும்தான் இருக்கின்றனஇ மனிதர்களே இல்லை என்பதற்கு இத்தகைய சம்பவங்கள்
சான்று.

கரீபியன் நாடுகளில் ஒன்றான கிரெனடாவைச் சேர்ந்த கிமாலி
பிலிப்இ பாலியல் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச அளவில் போராடிவருகிற
பெண்ணிய வாதி. இரண்டுவாரங்களுக்கு முன் கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்இ
இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் பாலியல் வன்முறை எப்படி ஒரு
ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விவரித்தார்.

"தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதை திட்டமிட்டுச் செயல்படுத்திவந்திருக்கிறது
இலங்கை ராணுவம். கற்பழிப்பை ஒரு ஆயுதமாகவே அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி
வந்துள்ளனர். இது ஈழத் தமிழரின் தனித்துவ அடையாளத்தை - சுதந்திர வேட்கையை
மனத்தளவில் நசுக்கும் முயற்சி" என்று குற்றஞ்சாட்டினார் கிமாலி. தமிழ்ப்
பெண்கள் மீதான பாலியல் வன்முறையும் சித்திரவதையும் இப்போதும் தொடர்வதை
வேதனையுடன் அவர் சுட்டிக்காட்டினார்.

கிமாலி பேசி
வாய்மூடுவதற்குள்இ சிங்கள ராணுவ மிருகங்களின் மற்றுமொரு கெட்ட ஆட்டம்
அம்பலமாகியிருக்கிறது. வன்னிப் பகுதியில்இ. கட்டாயப்படுத்தி இலங்கை
ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 140 தமிழ்ப் பெண்களில் 21 பேர் மனநிலை
பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
மற்றவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களுக்குப் பேய்
பிடித்திருப்பதாகக் கூறுகிறது ராணுவம். சிப்பாய்களின் பாலியல் வன்முறையே
அந்த இளம்பெண்களின் மனநிலை பாதிப்புக்குக் காரணம் என்று புகார்
எழுந்துள்ளது.

இந்த அருவருப்பான நடவடிக்கையில் இலங்கை ராணுவம்
திட்டமிட்டு இறங்கியிருக்கிறது. வன்னிப் பகுதியில் மக்கள் ஒருங்கிணைப்பு
அலுவலகங்களை விரைவில் அமைக்க இருப்பதாகவும்இ அந்த அலுவலகப் பணிகளில் சேரும்
பெண்களுக்குச் சலுகைகள் தரப்படும் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் உள்ளூரில்
அறிவித்தது ராணுவம். அத்துடன் நில்லாமல் பள்ளிகளுக்கு நேரில் சென்றுஇ
ஏழ்மையில் இருக்கும் மாணவிகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துஇ அவர்களை
பாரதிபுரம் முகாமுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

நவம்பர்
16ம் தேதிஇ முகாமில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் பெண்கள்
ராணுவத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கும் நிகழ்ச்சிக்கு
அழைக்கப்பட்டிருந்த பெற்றோருக்கும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பது
அப்போதுதான் தெரியவந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்இ
பெற்றோருக்கு மாலை மரியாதையும்இ 'பிரேவ் மதர்' என்ற பேட்ஜும்
அணிவிக்கப்பட்டது. இந்தக் கட்டாயச் சேர்க்கையைப் பற்றி தங்கள் பெற்றோருடன்
பேசக்கூட அந்தப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. டிசம்பர் 2ம் தேதிஇ அந்தப்
பெண்களிடமிருந்த அலைபேசிகள் பறிக்கப்பட்டபிறகுஇ பெற்றோருடனான தகவல் தொடர்பு
முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்
கிழமையும் மகளைச் சந்திக்கலாம் - என்று தங்களுக்குத் தரப்பட்ட வாக்குறுதியை
நம்பிச் சென்ற பெற்றோர்இ அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சென்ற
வாரம் இதுதொடர்பாக ராணுவத்தினருக்கும் பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம்
நடந்துள்ளது. முகாமில் இருக்கும் பெண்களில் பலர் அழுதுகொண்டே
இருப்பதாகவும்இ 10 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. 8 பேர்
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரியவந்தது..

சென்ற
திங்கள்கிழமை (டிசம்பர் 10ம் தேதி)இ முகாமிலுள்ள பெண்களுக்குப் பேய்
பிடித்திருப்பதாகக் கூறிஇ பேய் ஓட்டும் பூசாரி ஒருவரை ராணுவத்தினர்
முகாமுக்கு அழைத்து வந்து மந்திரித்துள்ளனர். அந்தப் பூசாரிஇ அந்த 8 பேர்
மட்டுமில்லாமல் மேலும் 14 பேருக்கு பேய் பிடித்திருப்பதாகவும்இ 22 பேரில்
ஒருத்தி கண்டிப்பாகக் கெட்ட ஆவியால் செத்துவிடுவாள் என்றும்
கூறியிருக்கிறான்.

செவ்வாய்க்கிழமை இரவுஇ கடுமையாகப்
பாதிக்கப்பட்ட 21 பெண்களை கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
(அந்த 22-வது சகோதரி உயிரோடுதான் இருக்கிறாளாஇ இறந்துவிட்டாளா - என்பது
தெரியவில்லை.) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 21 பேரும் மனநிலை
பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்
அந்தப் பெண்களைச் சந்திக்க முயன்றார். ராணுவத்தினர் அவரைத் தடுத்து
நிறுத்திவிட்டனர். அவர்கள் அனைவருமே ராணுவத்தினரால் பாலியல் ரீதியாகத்
துன்புறுத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.


அலுவலகப் பணிக்காக - என்று பொய்சொல்லி இளம் பெண்களைத் தேர்வுசெய்துஇ
கட்டாயப்படுத்தி அவர்களை ராணுவத்தில் சேர்த்துப் பாலியல் வன்முறைக்கு
ஆளாக்கியிருப்பதன் மூலம்இ சிங்கள அரசு இனப்படுகொலை உத்திகளை
அதிகாரபூர்வமாக்கியிருக்கிறது. இது சர்வதேசத்துக்கும் இலங்கை விடுத்துள்ள சவால்.

ஏற்கெனவே தமிழீழப் பகுதிகளில்இ வதைமுகாம்களிலிருந்து வெளியே அனுப்பப்படும்
பெண் போராளிகளின் நிலை பற்றி அங்குள்ள மருத்துவர்கள் மிகுந்த கவலை
கொண்டுள்ளனர். மேற்கு நாடுகள் கொடுக்கும் அழுத்தத்தால் முகாமிலிருந்து
அவர்களை விடுவிக்கிறது இலங்கை. விடுவிக்கும்போதேஇ அழைக்கும் போது
விசாரணைக்கு வரவேண்டும் - என்று சொல்லித்தான் அனுப்புகிறார்கள். அப்படி
வெளியே வரும் பெண் போராளிகளில் பலரும் முகாமில் நிகழ்த்தப்பட்ட பாலியல்
கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு சிகிச்சை பெற மருத்துவர்களிடம்
வருகின்றனர். மருத்துவர்களிடம் அவர்கள் தெரிவிக்கும் உண்மைகள் கொடூரமானவை.

'அழைக்கும்போதெல்லாம் வரவேண்டும்' என்றுஇ சிங்கள ராணுவம் விதிக்கும்
நிபந்தனைக்கு கேவலமான அர்த்தம் இருக்கிறது. 'பாலியல் ரீதியாக எங்களுக்குத்
தேவைப்படும் போதெல்லாம் அழைப்போம்' - என்பதுதான் அதன் பொருள்.
எப்போதெல்லாம் அந்த மிருகங்களுக்குத் தேவையோ அப்போதெல்லாம்
அழைக்கப்படுகிறார்கள்இ அந்தச் சகோதரிகள். எங்கேயாவது ஓடிப்போய்விடலாம்
என்று பார்த்தால்இ அழைத்தவுடன் போகாதவர்களின் குடும்பத்தைக் கொண்டுபோய்
முகாமில் உட்காரவைத்து மோசமான வழிமுறைகளில் விசாரிக்கின்றன சிங்கள
மிருகங்கள். குடும்பத்துக்குப் பிரச்சினையாய் இருந்துவிடக் கூடாது
என்பதற்காகஇ ராணுவம் அழைக்கும் போதெல்லாம் நடைப்பிணம்போல் முகாமுக்குச்
சென்று திரும்புகிறார்கள்இ தங்கள் மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக
மானத்துடன் போராடிய அந்த மாதரசிகள்.

யாழ்ப்பாணப் பகுதிகளிலும்இ
வவுனியாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள ராணுவப் புலனாய்வு முகாம்களில்
இதைத் தவிர வேறெந்த வேலையும் நடைபெறுவதில்லை. வடக்கு - கிழக்குப்
பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளிகளை சிங்கள ராணுவ அதிகாரிகள்
மற்றும் சிப்பாய்கள் மூலம் கட்டாயமாகக் கருத்தரிக்கவைக்கும் பார்முலாவில்
இந்த முகாம்கள் முதலிடத்தில் உள்ளன. பெண் போராளிகளுக்கு மறுவாழ்வு - என்கிற
பெயரில் இதுதான் நடக்கிறது. "இந்தக் கட்டாயக் கருத்தரிப்புகள்இ
இனப்படுகொலையை நோக்கமாகக் கொண்ட கருத்தரிப்புகள் என்பது வெளிப்படையாகத்
தெரிகிறது. ஆனால்இ இதை யாரிடம் போய் முறையிடுவது? இது வக்கிரம் பிடித்த
இலங்கையின் ஓநாய் மூளையில் உதித்துள்ள காட்டுமிராண்டித்தனமான யுக்தி. இதைத்
தடுப்பதற்கான சர்வதேச ஏற்பாடுகள் எதுவும் இப்போது இல்லை" என்கிறார்கள்
வடகிழக்கு மருத்துவர்கள்.

போருக்குப் பின்னும் தொடரும் இந்தப்
பாலியல் வன்முறையால் கருத்தரித்துவிடும் பெண்கள்இ சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். கருக்கலைப்பு செய்யமுடியாத நிலையில்இ
ஒரு சிங்கள மிருகத்தின் சிசுவை வயிற்றில் தாங்கி நிற்கவேண்டிய அவலநிலைக்கு
அவர்கள் தள்ளப்படுகின்றனர். அப்படிப் பிறந்த ஒரு குழந்தையைக் கொண்டுவந்து
மருத்துவரிடம் கொடுத்த ஒரு சகோதரிஇ அதைக் கொல்ல தனக்கு மனம்
வரவில்லையென்றும்இ அதை வளர்க்கவும் விரும்பவில்லையென்றும் சொல்கிறாள்.
'யாரிடமாவது இதைக் கொடுத்துவிட முடியுமா' என்று கண்கலங்க அவள் கேட்கஇ அந்த
மருத்துவரும் கலங்கியிருக்கிறார்.

ஒரு சிங்களச் சிசுவுக்குத்
தாயாக்கப்பட்ட இன்னொரு இளம் சகோதரிஇ அது எவனுடைய குழந்தை என்பதுகூட
தெரியவில்லை - என்று கூறியபோது மருத்துவரால் ஆறுதல்கூட சொல்லமுடியவில்லை.
ஆனால்இ அந்தச் சகோதரியின் கோபம் தன்னை வியக்கவைத்ததாகச் சொல்கிறார் அந்த
மருத்துவர். "மீண்டும் ஆயுதமேந்திப் போராடியே ஆகவேண்டும்" என்று
மருத்துவரிடம் உறுதியுடன் கூறியிருக்கிறார் அந்தச் சகோதரி.

தொடரும்....

ஈழதேசம் இணையம்.

நன்றி - தமிழக அரசியல் வார இதழ்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரவணக்கம்...! கப்டன் - புகழேந்தி
»  இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் முயற்சியின் பேரில் பலரும் சேர்ந்து, இப்படி ஒரு போஸ்ட்டரை தமிழகமெங்கும் ஒட்ட இருக்கிறார்கள்.
» மகிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி என சொல்லுமா டெசோ? சீமான்
» "மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை"
» "மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum