போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? Arul11 தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? Untitl11 தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? Iiiiii12 தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? Untitl13 தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்?

Go down

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? Empty தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்?

Post by Admin Sat Aug 25, 2012 9:07 am

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்?

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்? 522986_301184226633875_1845880491_n

என்னருமை இளையர்களே வணக்கம் இந்த உலகத்தில் தமிழீழ தேசிய தலைவரை நேசித்தது
போன்று நீங்கள் வேறு யாரையும் நேசித்து இருக்க மாட்டிர்கள். நீங்கள்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா நேசித்திர்கள். சிலர் தலைவரை இயேசு என்றும்
சிலர் முருகன் என்றும் சிலர் சிவன் என்றும் இப்படி பலவிதமான கற்பனை
வடிவங்களில் நேசித்திர்கள். மனதில் நேசித்தவர் இல்லை என்றால் உயிர் நாடி
நின்று விடும் அளவுக்கு நேசித்திர்கள். இது பாராட்டத்தக விடயம் தான்.

ஆனால் அவர் இருக்கின்றார் வருவர் என்று நம்பும் நீங்கள். தேசியத் தலைவரின்
வழிநடத்தலில் போராடிய போது, ஏன் அவரின் தலைமயில் அனைவரும் ஒன்றினைந்து
ஆயுதம் தூக்கி போராட வரவில்லை?

(“50000 இளையர்கள் முன்வந்தால்!)

கடைசி யுத்தம் நடந்த நேரம் தேசியத் தலைவர், கரும்புலிப் போராளிகளிடம் சொன்ன வசனம்.
’50000 இளையர்கள் ஆயுதம் தூக்க முன்வந்தால் இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெறலாம்’. என்றார்.
நீங்கள் கேட்கலாம், ஏன் வன்னியில் இருந்த மக்கள் ஆயுதம் தூக்கவில்லையா
என்று? அது உண்மைதான் மறுக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து
கொள்ளுங்கள். இதே கேள்வியை இஸ்ரேல் யூதர்கள் அன்று கேட்டு இருந்தால்
அவர்களுக்கு என்று நாடு இன்று உருவாகி இருக்காது.

(9 பேர் கொண்ட போராளிக்குழு)
யூதர்களும் முதல் கட்ட போராட்டத்தில் தோல்வி கண்டனர். பின்னர்
அங்கிருந்து வெளியேறி 9 பேர் கொண்ட போராளிக்குழுவை ஒன்றினைத்து, ஒரு உளவு
அமைப்பை உருவக்கினார்கள் அந்த அமைப்பின் பெயர் தான் மொசாட். அவர்கள்
திட்டத்தின் படி உலகெல்லாம் புலம் பேயர்ந்து உள்ள யூதர்களை ஒன்றிணைத்து
செயல் பட்டனர். ஒரு குழுவை அந்த நாட்டுக்குள் இரகசியமாக நுழைந்தார்கள்.
அக்குழுவிற்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. யாருக்காகப்
போராடினார்களோ அந்த மக்களே போராளிகளை காட்டிகொடுத்தனர். அதுமட்டும் இன்றி
முன்னாள் போராளிகளும் அவர்களுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தனர்.

இச்சூழல் போரட்டத்தை கட்டி எழுப்ப உள்நுழைந்த மொசாட் குழுவிற்கு மிக பெரிய
சிக்கலை ஏற்படித்தியது. இருந்த போதும் அவர்கள் போராட்ட வியூகத்தை மாற்றி
அமைத்தார்கள்.

(புலம்பெயர் மக்களின் ஆயுதப் போராட்டம்)


அதன் ஒரு கட்டமாக புலம்பெயர் நாடுகளில் உள்ள யூதர்களை ஆயுதம் ஏந்தி
போராட்த்துக்குள் களம் இறக்கினர். இதன் மூலம் சர்வதேசத்துக்கு யூதர்களின்
ஒற்றுமையை புரியவைக்க முடியும், ஒருமித்த யூத இனமும் அவர்கள் வாழ்வதற்கு
தனி நாடு கேட்பதை உலகிற்கு உணர வைக்க முடியும் என்பதை அந்த மொசாட் அமைப்பு
தீர்க்கமாக சிந்தித்தது.
அந்த திட்டத்தின் படி புலம்பெயர்ந்த மக்களை
கப்பல்கள் மூலம் உள்ளே எடுத்தார்கள். எடுக்கும் போது யூதர்களின் கப்பல்கள் 4
மூழ்கடிக்கப்பட்டன. ஆனால் மீண்டு தரை இறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
இதன் முடிவாக தனி நாட்டை அமைத்தார்கள்.
இந்த வெற்றிக்குக் காரணம் 9
பேர் தலைமையிலான் மொசாட் என்ற அமைப்பின் வழிநடத்தால் தான். அந்த மொசாட்
என்ற உளவு அமைப்பின் திறமையால் உலகவல்லரசான அமெரிக்காவையும் தம்வசம்
வீழ்த்தினார்கள். அதன் விளைவு அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும்
வென்றார்கள்.

(நாம் சாதிக்க போவது)

இதை விட நாம்
இனிமேல் என்ன செய்ய போகின்றோம். தலைவர் இருக்கின்றார், அவர் வருவார்,
என்பதாலும் நாம் எதையும் சாதிக்க போவது கிடையாது. தலைவர் இல்லை என்பதாலும்
நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை.

(வெளிவருவார் தலைவர்)


இப்போது இருக்கும்நிலையில் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். என்னவெனில்,
இப்போது அடுத்த கட்ட போராட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு இருக்கும்
போராளிகளுடன். ஒன்றினைந்து போராட்டத்துக்கு பலம் சேர்க்க வேண்டு. இதன்
மூலம் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதுடன், தேசியத் தலைவர் இருப்பின்
மௌனத்தில் இருந்து வெளியில் வருவர். அப்படி வராத பட்சத்தில் நாம்
போரட்டத்தை முன்னெடுத்து சென்று தேசியத் தலைவர் நினைத்த தமிழீழத்தை நாம்
கட்டி அமைப்போம். அதுதான் நாம் எமது தேசிய தலைவருக்கும், எமது
மாவீரர்களுக்கும் செய்யும் நன்றிக்கடனாகும்.
இதைவிடுத்து தலைவர்
வந்தால் தான் நான் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பேன் என்றால், எமது
போராட்டம் இன்னும் பல அழிவுகளை சந்திக்க நேரிடும். இப்போது உள்ள நிலையில்
உலக நாடுகள் எல்லாம் நமது தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் ஒரு நாடு
உருவாகுவதை விரும்ப மாட்டார்கள். ஏன் எனில் தெற்கு ஆசியாவில் எமது தலைவரை
மீறி எந்த ஒரு வல்லாதிக்க நாடுகளும் கால் ஊன்ற முடியாது. இதுதான் இன்றைய
யதார்த்த உண்மையாகும்.

(இறுதிக்கட்ட போர் நடந்து)


வன்னியில் இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், மக்களின்
அவலம் கண்டு புலனாய்வுத்துறை அமைப்பைச் சேர்ந்த. முக்கிய போராளிகள்
தலைவரிடம் கேட்ட விடயம்.
சிங்கள இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதானால்
நாம் இலங்கையின் தலைநகரில், மிக பெரிய தாக்குதலை தொடரவேண்டும். இதன் மூலம்
இராணுவ நடவடிக்கையை திசை திருப்பி எமது மக்களை காப்பாத்த முடியும் என்றனர்.
இதற்கு தேசியத் தலைவர் கூறிய பதில்….
அவ்வாறான தாக்குதலை செய்ய வேண்டாம், அது எமக்கு மென்மேலும் பயங்கர வாத
முத்திரைகள் குத்த வழிவகுத்துவிடும், என்பதை மிகவும் தெளிவாக சொல்லி
விட்டார்.
மேலும் இந்த அழிவுக்கு உலக நடுகள் ஒரு நடவடிக்கை எடுக்கும்
என்றார் . அது மட்டும் இன்றி புலம் பேர்ந்து வாழுகின்ற எமது மக்கள் இதற்கு
ஒரு முடிவு எடுப்பார்கள் அவர்களின் எழுச்சி எமது விடுதலைப் போரட்டத்துக்கு
வெற்றியை பெற்றுத்தரும்.

(மாணவர் புரட்சி)

அது மட்டும்
இன்றி எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள்.
அதன்மூலம் இந்திய மத்திய அரசு ஒரு முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை
தெரிவித்தார். அதுமட்டும் இன்றி எமது இரத்த சகதியின் சரித்திரத்தை
பார்த்துகொண்டு தமிழக மாணவ சமுதாயம் அமைதியாக இருந்து விட போவதும்
கிடையாது. இந்த இரத்த சகதியின் வரலாற்றையும் எமது ஆயுத மௌனத்தையும்
பார்க்கும் தமிழக மாணவ சமுதாயம் வெறுமென இருந்து விடமாட்டார்கள். அவர்கள்
தமிழீழம் நோக்கி ஆயுதம் தூக்கி போராட கிளர்ந்து எழுவார்கள். இந்த மாணவ
புரட்சியை பார்த்து, இந்திய மத்திய அரசு தமிழர் பிரச்சனைக்கு ஒரு
நிரந்தரமான தீர்வுக்கு வழிவகுத்துக் கொடுக்கும்.
மேலும் புலம்பெயர்
மாணவ சமுதாயமும் ஆயுதம் தூக்கி தமிழீழம் நோக்கி புறப்படுவார்கள். இப்படியான
புரட்சி நடக்கும் என நம்பி இருந்தார். ஆனால் இவை அனைத்தும் ஏன் நிறை
வேறாமல் போனது. தமிழக மாணவ சமுதாயமும் உலக தமிழ் மாணவ சமுதாயமும் ஒருகணம்
சிந்தியுங்கள் இன்னும் காலம் வீண்போக வில்லை சிந்தியுங்கள்.

(போராளிகள் போராடத்தயாராக)

போராளிகள் இன்னும் போராடத்தயாராக உள்ளனர். ஆயுதம் தூக்க வராவிட்டாலும்
பரவாயில்லை தமிழனுக்கு முகவரி தேடித்தந்த எமது தேசியத்தலைவருக்காகவும்,
மறைந்த மாவீரர்களுக்கவும் நீங்கள் கிளர்ந்து எழுங்கள், ஒரு அரசியல்
மாற்றத்தை ஏற்படுத்துங்கள்,

(என்ன செய்தார்கள்)

இறுதிக்கட்ட போருக்கு செல்வோம்
ஆனல் இறுதிக்கட்டப் போரின்போது உலகநாடுகள் நமது உறவுகளின்
தியாகங்களுக்கும் அற்பணிப்புக்கும் என்ன செய்தார்கள்? முத்துக்குமாரின்
தீக்குளிப்பு என்ன ஆனது? ஜெனிவாவில் முருகதாசின் தீக்குளிப்பு என்ன ஆனது?
இப்படி பல போராட்டங்கள் நடத்தியும் உலக நாடுகள் எமது பக்கம் திரும்பிப்
பார்க்காமல் போனதன் காரணம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
அதுமட்டும்
இன்றி இந்தியாவுக்கு அகிம்சை போரட்டத்தின் மூலம் சுதந்திரத்தைகொடுத்த
பிரித்தானிய அரசு பரமேஸ்வரனின் அகிம்சை போரட்டத்துக்கு ஏன் ஒரு சரியான
பதில் எதையும் வழங்க வில்லை?
இந்நிலையில் எமது இறுதி போருக்கு
வெற்றியை கொடுக்கும் ஒருசந்தர்ப்பம் அமைந்தது. அதுதான் வணங்க மண் கப்பலின்
வருகை என நாம் நம்பி இருந்தோம். அந்த கப்பல் வந்தால் அதற்கு நடுக்கடலில்
பாதுகாப்பு கொடுப்பதற்கு கடல் புலிகளும் ஆயத்தமாக இருந்தனர். இந்த கப்பல்
வந்திருந்தால் ஒரு பெரிய மற்றம் நிகழ்ந்திருக்கும். அதாவது காயப்பட்ட
போராளிகளுடன் பொதுமக்களும் என பல ஆயிரம் பேர்களை காப்பாத்தி இருக்கலாம்.
இந்த முயற்சியும் தோல்வி கண்டதன் காரணம் என்ன என்பது இன்றுவரை புரியாமல்
உள்ளது.

(புலம் பெயர் மக்களின் முற்றுகை)

புலம் பெயர்
தமிழ் மக்கள் மிக பெரிய மாற்றத்தை நிகழ்த்தினார்கள் அதுதான் இலங்கை அதிபர்
மகிந்த ராஜபக்ச பிரித்தானிய வந்த பொது ஐரோப்பா முழுவதும் உள்ள எமது மக்கள் .
பிரித்தனியவிற்கு படை எடுத்து விமான நிலையத்தை முற்றுகை இட்டனர். இதன்
விளைவாக பிரித்தானிய அரசு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை அங்கிருந்து
வெளியேற்றியது மட்டும் இன்றி . அவருக்கு பிரித்தானியாவில் சரியான
பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறியது.
இந்த மாற்றத்தை
நிகழ்த்திய எமது மக்கள் வன்னியில் இறுதி போரில் மக்கள் அழிந்த பொது
அனைவரும் பிரித்தனியாவிற்கு படை எடுத்திருந்தால் வன்னியில் எமது மக்களையும்
போராளிகளையும் காப்பாற்றி இருக்க முடியும். எமது மக்கள் அழிந்த பின்னர்
உங்களுக்கு வந்த கோபமும் வேகமும் நாம் அழிந்து கொண்டிருந்த போது உங்கள்
மனங்களில் குமிரிய எரிமலையை ஏன் பிரித்தானிய அரசிடம் காட்டவில்லை.

(என்ன நடந்தது..?)

உலக நாடுகளும், எமது உறவுகளும் எம்மை காப்பாற்றுவார்கள் என்ற
நம்பிக்கையில் ஏராளமான போராளிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு மக்களுடன்
மக்களாக சரணடைந்தனர். அது மட்டும் இன்றி ஊடகவியலாளர் ‘மரியா கொள்வினிடம்
புலித்தேவன்’ அவர்கள் தொடர்பு கொண்டு சரணடையும் போராளிகள் பற்றிய விபரத்தை
தெரியப்படித்தினார். இது உலக நாடுகளுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்கு
தெரியும். ஆனால் முடிவில் போராளிகள் காப்பாற்ற படவில்லை.

(என்ன வழி…? சிந்தியுங்கள்.)

இனிவரும் காலங்களில் நாம் எப்படி தமிழீழத்தை அடைவது இதற்கு என்ன வழி…………?
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் எதோ ஒரு வடிவில் போராட்டக் காய்களை
நகர்த்துவதில் போராளிகள் இன்றுவரை தமது கடமையை சரிவர செய்கின்றனர். இன்று
அமெரிக்கா தமிழர் பிரச்சனையில் தலையிடுகின்றது. இதன் பின்னணியில் அமெரிக்க
நலன் சார்ந்த விடயங்கள் இருப்பினும், அமெரிக்கா ஒரு அணியின் ஆதரவு இன்றியோ
அல்லது உதவி இன்றியோ இலங்கையில் தலையிடாது. அது யார் என்று சிந்தியுங்கள்.
இன்னொரு விடயம்? இந்தியத் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு அதிசயம் நடந்தது.
அதுதான் தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புது டில்லி
பாராளுமன்றத்தின் முன், இலங்கை அரசை போர் குற்ற நாடக ஐக்கிய நாடுகள்
சபையில் வாக்களிக்க சொல்லி அழுத்தம் கொடுத்தன. இந்த கட்சிகள் ஒன்றிணைந்ததன்
பின்னணியில் யார் இருக்கின்றனர் என்று சிந்தியுங்கள். இதை சிந்திப்பிர்கள்
ஆனால் எமது போராட்டம் நகர்வுகள் நடந்து கொண்டு இருப்பதை உணர முடியும்.

இப்போது உள்ள நிலை யாதெனில் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்
பட்டால், மிக விரைவில் நாம் தமிழீழத்தை அடைய முடியும். இதை செய்வதன் மூலம்
நீங்கள் தமிழீழ தேசியத்தலைவரை நேசிப்பது உண்மையாகும் .
உண்மையை
உணர்ந்து செயல் படுங்கள். தலைவர் இருக்கின்றார், இல்லை, அவர் வருவார்,
வரமாட்டார், என்ற விவாதங்களை நிறுத்துங்கள் அதுதான் நல்லது. தலைவர்
இருக்கின்றார் என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால் அது உங்கள் மனதளவில்
இருக்கட்டும். விவாதம் வேண்டம். உங்கள் விவாதங்களால் தலைவரின் பெயரைத்தான்
கெடுக்கின்றீர்கள். தலைவரின் இருப்பு உங்கள் மனதளவுடன் இருக்கட்டும். அதை
முன்னிறுத்தி அடுத்த கட்ட போராட்டத்துக்கு சபதம் எடுப்போம். போராளிகள்
இன்னும் போரட்ட தயாராகத்தான் உள்ளனர். எனவே உங்கள் ஆதரவே போராட்டத்துக்கு
ஒரு உறுதுணையாகும்.

தமிழீழ மாணவர் படை
வெற்றியின் காரணம் வெற்றியின் முடிவில் தெரிந்து கொள்வோம்.
வெற்றிக்கு முன் வெற்றியின் இரகசியம் தெரிந்தால் தோல்வியே
முடிவாகிவிடும். இதை சொல்வதன் காரணம் இனிவரும் காலங்களிலும் நமது
போரட்டங்கள் அழிவின் முடிவாக நிற்காமல் வெற்றியின் சிகரமாக இருக்க வேண்டு
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா?
» இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?. இரத்த வெள்ளத்தில் தமிழ்ச்சிறுவன்..
» மண்ணைக் காக்க வழி என்ன?
» சேரன் என்ன சோழன் என்ன
» மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். - அய்யா.பழ.நெடுமாறன்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum