போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் " Arul11 "வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் " Untitl11 "வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் " Iiiiii12 "வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் " Untitl13 "வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் " Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் "

Go down

"வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் " Empty "வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் "

Post by Admin Fri Aug 24, 2012 8:48 am

[You must be registered and logged in to see this image.]
"வயதிற்கேற்ற பக்குவம் இல்லாமல் வசைபாடுவது கருணாநிதிக்கே உரிய கலையாகும் - பழ. நெடுமாறன் "
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில்
சொல்வதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யானதும்
முன்னுக்குபின் முரணானதுமான விவரங்களையேத் தந்துள்ளார்.


இலங்கையில் போர் நடந்த போது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியத் தலைவரான கருணாநிதி அதில்
அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும்.


அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த
அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல்
அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் தான் உணர முடியும்
என்று கூறியுள்ளார்.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு
அதிலும் மத்தியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் எப்போதும் இணைந்து
செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங்களில் எப்படி
நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி
செய்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த
ஜோதிபாசு வங்கதேசத்துடன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பராக்கா
அணைப் பிரச்சினைக்குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின்
பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார்.

ஆனால்
மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர்
உடன்பாடு செய்ய முடியாது, எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த
தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை இதற்கு
இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க தேசத்துடன்
உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு
ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில்
தமிழக அரசு என்ன சொல்கிறதோ அப்படித்தான் இந்திய அரசு செயல்படவேண்டும் என
வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ கருணாநிதிக்கு இல்லாமல் போனது.
மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ
அதுதான் எனது நிலைப்பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச்
சொன்னவர் கருணாநிதி.

ஈழப்போராளிகளுக்கிடையே சகோதர
யுத்தத்தை தூண்டிவிட்டதற்கும் அந்தப்போரில் பின்னடைவு ஏற்பட்டதற்கும்
நெடுமாறன்தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். வரலாற்று உண்மைகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இவ்வாறு கூறியிருக்கிறார்.

1983ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில்
சகல போராளி இயக்கங்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. ஈழ விடுதலை அமைப்புகள்
அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மனமாற
விரும்பினார். இதற்காக குறிப்பிட்ட நாளில் அனைத்து அமைப்புகளின்
தலைவர்களும் தன்னைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது இந்த அழைப்பை
தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. இந்த
அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி போராளி இயக்கத்
தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட தினத்திற்கு முதல் நாள் தன்னைச்
சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையும் பத்திரிகைகள்
முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.

போராளி இயக்கங்களைப்
பிளவுபடுத்துவதற்கான முதல் நடவடிக்கையை இதன் மூலம் மேற்கொண்டவர்
கருணாநிதிதான், தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிளவு வேலைகளை வரிசையாக
சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். உதாரணத்திற்கு இங்கே ஒன்றை
சுட்டிக்காட்டினேன். தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான
இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தவரும் கருணாநிதியே. இந்த உண்மையை மறைக்க பிறர்
மீது பழிசுமத்த முற்படும் அவரின் முயற்சி ஒருபோதும்
வெற்றியடையப்போவதில்லை.
தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு
எதிரானத் தீர்மானத்தில் ஜெயலலிதா கொண்டுவந்தது எனக்கு நினைவு இருக்கிறதா?
என்று கேட்டிருக்கிறார். சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு கடும் கண்டனம்
தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு அதன் நகல்களை நாங்களும் எங்களுடைய
தோழமை கட்சிகளும் கொளுத்தி கைது செய்யப்பட்டோம். முழுப் பூசணிக்காயை
சோற்றில் மறைக்க முயற்சி செய்பவனைப் போல நாடறிந்த இந்த உண்மையை
மறைப்பதற்கு கருணாநிதி முயற்சி செய்கிறார்.

டெசோ மாநாட்டில் தனி
ஈழம் தொடர்பாக தீர்மானம் போடக்கூடாது என மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்
அவரைச் சந்தித்து வற்புறுத்தியதாகவும் அதனை தான் ஏற்றுக்கொண்டதாகவும்
நெடுமாறன் கூறியிருப்பது பொய்யாகும் குற்றம் சாட்டியிருக்கிறார். அது
உண்மையில்லை என்றால் நடத்தப்பட்ட மாநாட்டின் பெயரிலோ நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் எதிலுமோ தமிழீழம் என்ற சொல்லே இடம்பெறாமல் போனதற்கு யார்
பொறுப்பு? மத்திய அமைச்சர் பொறுப்பு இல்லை என்று சொன்னால் இவர் அந்தப்
பொறுப்பை ஏற்கவேண்டும். எதைக் கண்டு அஞ்சி அவர் இவ்வாறு செய்தார்
என்பதையாவது வெளியிடவேண்டும்.

நேற்றைய தினம் இந்திய
நாடாளுமன்றத்திற்கு முன் தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டிக்கும் வகையில்
ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த
ஆர்ப்பாட்டம் திடீரென கைவிடப்பட்டதற்கு பின்னணி என்ன? முன்பு முல்லைப்
பெரியாறு அணைப் பிரச்சினையில் மதுரையில் நடத்தவிருந்த பெரும் ஆர்ப்பாட்டம்
கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதே அதைப் போல இப்போதும்
கைவிடப்பட்டிருக்கிறது. திரைமறைவில் நிர்பந்தம் செய்தது யார்? பகிரங்கமாக
வெளியிடும் துணிவு கருணாநிதிக்கு உண்டா?
ஈழப்போர் நெருக்கடியான
கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக
முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது
நடத்திய டொசோ மாநாடும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர்
உணர்வது நல்லது. முதிர்ந்த வயதில் அதற்குத்தக்க பக்குவம் இல்லாமல்
தரக்குறைவான வார்த்தைகளால் மற்றவர்கள் மீது வசைபாடுவது அவரையே திருப்பித்
தாக்கும் என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறாரோ அவ்வளவுக்கு அவருக்கு
நல்லது.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இதுதாண்டா தமிழன் எதிரிகளாக இருந்தாலும் போரில் இறந்த சிங்கள வீரர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் அவர்களின் உறவினரிடம் ஒப்படைத்தனர் புலிகள்.
» பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் தொடரும் – பழ.நெடுமாறன்!
» "சிறீலங்காப்படையில் தமிழ்ப் பெண்கள் கட்டாய சேர்ப்பு சிங்கள அரசின் செயலுக்கு- பழ. நெடுமாறன் கண்டனம்"
» மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். - அய்யா.பழ.நெடுமாறன்.
» மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த தமிழ் மகள் பார்வதி அம்மாவிற்கு துரோகம் செய்த கலைஞர் மற்றும் அவரது அரசின் அராஜக காவல்துறை அய்யா நெடுமாறன், திரு.வைகோ அவர்களையும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும் காட்சி.......video

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum