போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? Arul11 இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? Untitl11 இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? Iiiiii12 இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? Untitl13 இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா?

Go down

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? Empty இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா?

Post by Admin Sat Aug 11, 2012 10:35 pm

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு
இருக்கின்றாரா? அடுத்த கட்ட தமிழர்களின் நகர்வு என்ன?என்பதுதான் இப்போது
உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது.
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? M_Id_57135_prabhakaran

ஆனால் இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் விடை காண முன்னால் இந்தியாவாலும்
அமெரிக்காவாலும் அறிவிக்கப்பட்ட மேலும் இரண்டு ஆண்டுக்களுக்கு விடுதலை
புலிகளின் மேலான தடை சட்டம் என்பதினை நாம் மிகவும் ஆழமாகவும்
நுணுக்கமாகவும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.

எமது விடுதலை போராட்டமானது உலக வல்லரசுகளால் ஒடுக்கப்பட்டு விடுதலை புலிகள்
முற்றாக அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தி அடைந்து விட்டதாக
அரசாங்கமும் எல்லா உலக நாடுகளும் அறிக்கை விட்டு கொண்டு இருக்கும் போது
இன்னமும் விடுதலை புலிகளின் நிதி கட்டமைப்பு செயற்படுவதாக சொல்லி மீண்டும்
பயங்கரவாத சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?எங்கள் அண்ணா இப்போதும் உயிரோடு இருக்கின்றாரா? LtteNewsImage

இந்தியா.அதை தொடர்ந்து அமெரிக்கா. இனி வரும் காலங்களில்,தேவை ஏற்படின் ஏனைய
நாடுகளும் இதை வழிமொழியலாம். இல்லை ஏற்கனவே சில நாடுகளில் இன்னமும்
அமுல்படுத்தப்பட்ட சட்டம் காலாவதியாகாமல்
இருக்கலாம்.இவையெல்லாம் ஆதிக்க சிந்தனை உள்ள பேரினவாத நாடுகளின் அடிப்படை
கொள்கைகள் . இவற்றை பற்றி நாம் விமர்சிப்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும்
எழுதலாம்.ஆகவே இதை இப்போது விட்டு விடுவோம்.

தமிழர்களாகிய நாம் விடுதலை போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்?
எமது நாட்டின் மீதான அக்கறையில் இன்னமும் செயற்பட்டு கொண்டு உள்ளோமா?
வெறும் எழுத்துகளில் மட்டும் எழுதும் நாம் அதை எத்தனை சதவீதம் நடைமுறை
படுத்துகின்றோம்?

வெளிநாடு தமிழர்களின் இன்றைய நிலை என்ன? 2008 இன் மாவீரர் உரையின் போது
புலம்பெயர் இளம் தலைமுறையின் கையில் விடுதலை போராட்டமானது
ஒப்படைக்கப்படுகின்றது என்று சொன்ன எங்கள் அண்ணாவின் சொல்லை நாம் எவ்வளவு
தூரம் மதிக்கின்றோம். எனதருமை இளம் சமுதாயமே உங்கள் மனக்கதவை திறந்து
கேளுங்கள்.

புலம்பெயர் இன்றைய தமிழர்கள் உண்மையான அர்பணிப்புடன் தம்மை ஈடுபடுத்தவில்லை
என்பது நிதர்சனம். 2009 ஆண்டு வைகாசி மாதம் லண்டன் மாநகரமே அதிரும் படி
ஒன்று கூடிய எம்மினிய உறவுகள் இன்று மாறியிருப்பது மிகவும் வேதனையான உண்மை.
மகிந்த ராஜபக்ச குற்றவாளி என்றும் அவரது ஆட்சி குடும்பாட்சி என்றும்
சொல்லிக்கொண்டு கொடி பிடிக்கும் எம்மினம் விடுமுறை வந்ததும் அந்த
ஆட்சியாளர்களின் சுற்றுலா துறை வருமானத்தை அதிகரிக்க செல்லும் இடம்
கொழும்பு அதுதவிர தமது பொழுது போக்கிற்காக விடுதலை போராட்டங்களில்
பங்குபற்றுவது நடந்துகொண்டு தான் இருக்கின்றது.இன்னும் தென்னிந்திய
திரைப்பட குழுவினரை அழைத்து மேடை விழா நிகழ்ச்சி நடத்துவதும் ஆளாளுக்கு
பணம் சம்பாதிப்பதும் என்றும் இல்லாதவாறு அதிகரித்து உள்ளது. விடுதலை
இயக்கமானது பலம் பொருந்தியதாக இருந்த காலப்பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள்
நடை பெறுவது மிகவும் அரிதானதாக ஒன்றாகவே இருந்தது. அப்படி நடைபெற்றாலும் ஈழ
தமிழரின் பங்களிப்பு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால் இப்போது உள்ள
நிலைமை எதிர்மறையாக மாற்றம் அடைந்து உள்ளது.

இதற்கான முக்கிய காரணியாக எனது அறிவுக்கு தெரிவது, ஒரு சிறந்த தன்னலம்
இல்லா தலைமைத்துவம் இல்லாதது தான்.இருந்திருந்தால் இந்தியா தடைவிதிக்கும்
போதே ஜனநாய ரீதியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி இருப்பார்கள்.இல்லை
எமது உறவுகளில் உள்ள ஒரு சிலரின் உண்மையான நாட்டுபற்றை தெரிந்து அவர்களுடன்
கை கோத்து விடுதலையை மழுங்கடிக்காமல் வளர்த்து இருப்பார்கள். இப்போது உள்ள
புலம் பெயர் தமிழர்களின் மனங்களில் விடுதலை வேட்கையானது மிகவும் குறைந்து
விட்டது என்பது நிஜம்.

எங்கோ ஒரு மூலையில் எந்த ஒரு நிதிபலமும் இல்லாமல் கொரில்லா முறையில்
ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் உச்சம் அடைந்து உலக நாட்டையே திரும்பி
பார்க்க வைத்தது என்றால் அதற்கான முழுக் காரண கர்த்தாவாக இருந்தது எமது
தன்னலம் இல்லா தலைமையையும் உண்மையான தேச வேட்கையும் தான்.

ஆனால் இப்போது இருக்கும் தலைமையோ, எப்போதோ எமது ஈழத்தை விட்டு வெளியேறி
நிதி அடிப்படையில் பலம் பொருந்தியவர்களும், தாம் அழிந்து போகும்
காலத்திலும் தமது பெயர் வரலாற்றில் எந்த ஒரு அர்பணிப்பும் செய்யாமல்
இடம்பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மட்டும் தான்.

எனவே மதிப்புக்குரிய எம்மினிய தமிழ் உறவுகளே நீங்கள் இப்போதும் விழித்து
எழுந்து விடாவிட்டால் எமது இனமானது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இழந்து
,தமது இனத்தின் அடையாளத்தை தொலைத்து, நாம் வாழ்ந்ததற்கான அறிகுறிகளையே
இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.அத்துடன் நாற்பது ஆயிரத்திற்கு மேலான
எமது போற்றுதற்குரிய மாவீரர் செல்வங்களின் கனவும் தியாகமும் வீணாகி
போய்விடும். எமது ஈழத்தில் நடந்த அவலங்களிற்கு மூன்று லட்சத்துக்கும்
மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யபட்டதற்கும் உண்மையான தீர்வு கிடைக்கமால்
போய்விடும்.

எமது தமிழ் மக்களே!

இறுதியாக எமது உன்னத தலைவன் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள்.
இப்போது உள்ள இந்திய, புலம் பெயர் தமிழ் தலைவர்கள் யாரிலும் எனக்கு
நம்பிக்கை இல்லை. உண்மையான சுதந்திர தாகம் கொண்டு எம்மையும் எமது
இனத்தையும் காக்க போராடும் ஒரு சிறந்த தலைவன் எங்களுக்கு வேண்டும். அவன்
இப்போது எங்கோ ஒரு மூலையில் மிக அடிமட்ட நிலையில் உண்மையான சுதந்திர காற்றை
சுவாசித்து கொண்டு இருக்கலாம்.அவனை கண்டு பிடியுங்கள்.

அது கடினம் என்றால் இப்போது தலைமையில் இருக்கும் உறவுகளே நீங்களாவது
இனிமேல் உங்கள் தன்னலங்களை விட்டு விட்டு ஒன்றாக கை கோருங்கள். அப்போதாவது
நாங்கள் உங்களை நம்புகின்றோம்.





நன்றி
[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கடைசி யுத்தத்தில் நடந்தது என்ன .. ஒரு போராளியின் வாக்குமூலம்....!!!!
» இறுதி யுத்தத்தில் நடத்து என்ன ? VIDEO
» தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? நாம் என்ன செய்யவேண்டும்?
» இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடியில் நடந்தது என்ன? கிருஷ்ணா விளக்கம்
» 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum