போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Arul11 அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Untitl11 அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Iiiiii12 அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Untitl13 அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!

Go down

அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!! Empty அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!

Post by Admin Sun Aug 18, 2013 8:33 am

அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
**********************************************************

[You must be registered and logged in to see this image.]
 சிவகரன் சாந்தினி. 31 வயதான இவருக்கு 11 வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கி றார். தன் ஒரு காலை முழுமையாக இழந்த நிலையில் இன்று தன் எல்லா தேவைகளையும் இன்னொருவர் உதவி யுடனேயே நிறைவேற்றிக் கொள்கிறார். முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக் கருகில் அவரைச் சந்தித்தபோது எம்மிடம் பேச மிகவும் பயந்தார். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கடந்த காலங்க ளில் தான் அனுபவித்த கசப்பான அனுபவ ங்கள்தான் இதற்குக் காரணம். பின் எம்மை அறிமுகம் செய்த பின்னர் சரளமாகக் கதைக்கத் தொடங்கினார்.

‘எண்ட சொந்த இடம் முறிகண்டி. சண்டை நடக்கேக்க இங்கிருந்து இடம்பெயர்ந்து விஸ்வமடுவுக்கு சென்றோம். பின் அங்கிருந்து இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இருந்தனாங்கள். அங்கிருந்து இடம்பெயர்ந்து மாத்தளனில் இருந்தோம். மாத்த ளன் ஹொஸ்பிடலில சுகாதார தொண்டராக எட்டு வருஷம் வேலைசெய்தனான். நான் ஹொஸ்பிடலில வேலைசெய்து கொண்டிருக்கும்போது ஷெல் வந்து ஹொஸ்பிடலில விழுந்தது. எனக்கு பக்கத்துலதான் விழுந்தது. அந்த பீஸ் அடிச்சு கால் முறிஞ்சது. முழுவதும் முறிஞ்சிட்டுது. பின் அங்கயிருந்து என்னை ஏற்றிக் கொண்டு போய் முள்ளிவாய்க்கால் ஹொஸ்பிடலில போட்டிருந்தவங்க. முள்ளி வாய்க்கால் ஹொஸ்பிடலில மூன்று நாள் இருந்தனான். அங்க இருக்கும்போது எண்ட பிள்ளைய தவறவிட்டுட்டன். என்ன தனியதான் கப்பலில ஏத்திவிட்டவை. பின் எண்ட பிள்ள மாத்தளனில இருந்ததாக தகவல் கிடைச்சது. என் பிள்ளைய ஆமி கொண்டுபோய் கதிர்காமர் முகாமில விட்டு எண்ட அக்கா அவவ வைச்சிருந் தவ. எனக்கு காயப்பட்டு 5 மாசத்துக்கு பிறகுதான் ரீட்மண்ட் முடிஞ்சிது. அதுக்குப் பிறகு வலயம் 4 முகாமுக்கு என்ன அனுப்பினவ. பின் கதிர்காமர் முகாமில இருந்த எண்ட பிள்ளைய எடுத்தம். முகாமில இருக்கேக்க எனக்கு கால் சரிவரல. பின் வவுனியா ஹொஸ்பிடலுக்கு அனுப்பி அங்க 2 மாசம் இருந்தனான். பின் வலயம் 6 முகாமுக்கு ஏத்தினவ. அங்கிருந்து 2010 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 27 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்தவங்கள்’ என்று தன் கடந்த காலம் பற்றிக் கூறினார்.

இப்போது எப்படி உங்கள் வாழ்க்கை போகின்றது? இது உங்களுடைய சொந்தக் காணியா என்று கேட்டோம். அதற்கு பிறகுதான் அவரது பிரச்சினையைக் கூறினார்.
‘எனக்கு மூன்று அண்ணாமார். அதில ஒரு அண்ணாவின் மனைவியின் அண்ணாதான் இந்தக் காணிய எனக்கு எழுதித் தந்தவர். அவையளுக்கு ஏழு சகோதரங்கள். 2000 ஆம் ஆண்டு எனக்கெண்டு சொந்தமாக எழுதித் தந்தவையள். 2003 ஆம் ஆண்டு அதுல ஒரு கல்வீடு கட்டினனான். இவ்வளவு காலமும் இதுக்கு யாரும் உரிமை கொண்டாட இல்ல. நான் மீள்குடியேறி வந்த பிறகு இங்க உள்ள ஜீ. எஸ் உம் அண்ணியின் மற்ற சகோதரங்களும் சேர்ந்து எங்கள எழும்பச் சொல் லி பொலிஸிற்கு எண்ட்ரி போட்டாங்கள். ஒருநாள் இரவு ஒன்பது மணியி ருக்கும். நாலு ஆமிக்காரரோடு வந்து விடியிறதுக்கிடையில இந்தக் காணிய விட்டு எழும்பணும். இல்லாட்டி கொலை செய்வம் என்று ஆயதங்களோடு மிரட்டினவங்கள். 4 பேர் 2 மோட்டர் பைக்கில வந்தவங்கள். நான் பொலிஸிற்கு எண்ட்ரி போட்டனான். சிவில் அலுவலகத்துக்கும் அறிவிச்சனான்.

யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. பொலிஸ{ம் அவங்கட பக்கம்தான். அவங்களெல்லாம் வசதியான ஆக்கள். நாங்களெல்லாம் ஏழைகள் தானே. அதனால பொலிஸ{ம் அவங்கட பக்கம் தான். அவங்களுக்கு சிங்களம் தெரியும். எனக்கு சிங்களமும் தெரியாது.. இங்கவுள்ள ஜி.எஸ்கூட அவங்கட பக்கம்தான். ரெண்டு அறை விறாந்தை கல்வீடு இருந்தது. ஜி எஸ் தான் இடித்து எங்கள எழும்பச் சொன்னார். அந்த அண்ணா எழுதித்தந்த துண்டெல்லாம் என்னட்ட இருக்கு. அவர் வந்து பொலிஸில கதைத்தவர். பின்ன வழக்கு போட்டு அவர் கதைத்ததால் இந்த ஒரு துண்டு காணியை மாத்திரம் எங்களுக்குத் தந்திருக்கிறாங்க. இப்ப தற் காலிகமாக தகரத்தை போட்டுத்தான் இருக்கிறம்’ என்று அவர் கூறும்போது வார்த்தைகள் சோர்ந்தன.

‘எண்ட கணவர் கூலி வேலை செய்துதான் என்னை பார்க்கிறார். முன்னமாதிரி எனக்கு தனித்து இயங்க முடியாது. எல்லாவற்றுக்கும் உதவி தேவை. தண்ணி அள்ளி குளிக்க ஏலாது. கணவர்தான் எல்லாவற்றுக்கும் உதவி செய்யிறார். எனக்கு என்னையே கவனிக்க முடியல. அதனால் எண்ட பிள்ளைய அக்கா கொண்டு போய் வைச்சி படிப்பிக்கிறா’ என்று மனவேதனையுடன் கூறினார்.

தன் ஒரு அவயவத்தை முழுமையாக இழந்து தவிக்கும் ஒருவரது வீட்டை இடித்து இரவோடிரவாக விரட்டும் அளவுக்கு மனித மனங்கள் இருக்கத்தானே செய்கின்றன? யுத்தம் எவ்வளவு தூரத்துக்கு மனங்களை இறுக்கி வைத்திருக்கிறது.

தன் ஒரு காலை முழுமையாக இழந்தாலும் தன்னால் முடிந்தளவு ஏதாவது வரு மானம் தேடவேண்டும் என்ற நோக்கில் சிறிய சில்லறைக் கடை ஒன்றை கண வரின் துணையுடன் போட்டிருக்கிறார். அதன்மூலம் தனக்கு ஏதாவது வருமானம் கிடைக்கும் என்றும் தன் பிள்ளையின் எதிர்காலத்திற்கு அது உதவும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்தத் தாய். அது மட்டுமன்றி தாதியர் நியமனத் துக்காக இதுவரை மூன்று தேர்வுகள் நடந்தனவாம். அப்படி நியமனம் கிடைத்தால் அதனையும் செய்வேன் என்று அவர் கூறும்போது அவரது அசையக்கமுடியாத நம்பிக்கை எம்மைப் பிரமிக்க வைத்தது.

சாகித்யா
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum