போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் Arul11 காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் Untitl11 காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் Iiiiii12 காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் Untitl13 காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர்

Go down

காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் Empty காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர்

Post by Admin Wed Apr 24, 2013 8:23 am

[You must be registered and logged in to see this image.]

வவுனியா மாவட்டத்தில் உள்ள
கருங்காலிக்குளத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்காக 1500 ஏக்கர்
பரப்பளவுள்ள காடுகளை சிறிலங்காப் படையினர் அழித்து வருவதாக கொழும்பு ஆங்கில
வாரஇதழான “சண்டே லீடர்“ தகவல் வெளியிட்டுள்ளது.

வவுனியா
மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட அடர்ந்த
காடுகள் அழிக்கப்பட்டு வருவதற்கு சூழலியலாளர்கள் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளனர்.

1200 சிங்கள பௌத்தக் குடும்பங்களைக்
குடியேற்றுவதற்காக, கருங்காலிக்குளத்தில் உள்ள சுமார் 1500 ஏக்கர்
பரப்பளவுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக் காடுகள் கடந்த ஒன்றரை தொடக்கம்
இரண்டு மாதங்களாக சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்டு வருவதாகவும், வவுனியா
மாவட்டச் செயலர், பிரதேச செயலரின் உதவியுடன் வவுனியா மாவட்ட கட்டளை
அதிகாரியே இதனை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின்
பணிப்பாளரான சஜீவ சமிக்கார தெரிவித்துள்ளார்.

“வனத்
திணைக்களத்தின் அனுமதியின்றி, தென்பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 சிங்களக்
குடும்பங்கள் கருங்காலிக்குளம் வனப் பகுதியில் சட்டவிரோதமாக
குடியேற்றப்பட்டுள்ளனர்.

இது 2009ம் ஆண்டின் 65வது இலக்க வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை கடுமையாக மீறும் செயலாகும்.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளது மட்டுமன்றி அதனை அழித்து, வீடுகளை அமைத்து வீதிகளும் அமைக்கப்படுகின்றன.

கருங்காலிக்குளம் வனப் பகுதியில் இருந்து 8000 ஏக்கர் காணிகளை சிங்களக்
குடியேற்றங்களுக்காக விடுவிக்கும்படி வனத் திணைக்களத்தை வவுனியா மாவட்டச்
செயலர் கோரியுள்ளதாகவும், அதற்கு வனத் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்து
வருவதாகவும் அறியப்படுகிறது." என்கிறார் சமிக்கார.


குடியேற்றங்களுக்காக வனப் பகுதியை வழங்குவதற்கு வனத் திணைக்களம் கடுமையான
எதிர்ப்பைத் தெரிவித்து வருவதால், பாதுகாப்பு அமைச்சில் உள்ள உயர் அதிகாரி
மூலம் அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து இந்தப் பகுதியை விடுவிக்க
முயற்சிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அரசியல்
தலையீடுகளால் எமது வனவிலங்குகளுக்கும் காடுகளுக்கும் இயற்கை வளங்களுக்கும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இப்படியே தொடர்ந்தால், எமது எதிர்கால
சந்ததிக்கு என்ன நடக்கும்? காடுகளைப் பார்க்க அவர்கள் வேறு நாடுகளுக்குத்
தான் செல்லவேண்டும்“ என்றும் சமிக்கார தெரிவித்துள்ளார்.

இங்கு
காடுகளை அழிக்கும்போது சிறிலங்கா இராணுவத்தினரால் வெட்டப்படும் பெறுமதி
மிக்க மரங்கள் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை இராணுவ அதிகாரிகளால் கொண்டு
செல்லப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

“பெறுமதிமிக்க மரங்கள் இராணுவ பாரஊர்திகளில் எங்கோ கொண்டு செல்லப்படுவதை பொதுமக்கள் கண்டுள்ளனர்.

இந்த குறிப்பிட்ட வனப் பகுதி உலர் கலப்பு பசுமைக் காடுகளையும், இந்தப்
பகுதிக்கேயுரிய சிறப்பான களுவாரா மரங்களையும் கொண்டுள்ளது. பெரும்பாலான
களுவாரா மரங்கள் வெட்டப்பட்டு அடையாளம் தெரியாத இடங்களுக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவம் கடந்த மூன்றாண்டுகளில் அழித்துள்ள இரண்டாவது பெரிய காட்டுப்பகுதி இதுவாகும்.

வாழைச்செய்கைக்காக சோமாவதி சைத்திய வனப் பகுதியில் ஆயிரக்கணக்காக ஏக்கர் காடுகளை சிறிலங்கா இராணுவம் ஏற்கனவே அழித்திருந்தது.
இப்போது அவர்கள் கருங்காலிக்குளத்தில் 8000 ஏக்கர் காடுகளை கோருகின்றனர்.

இந்தக் குடியேற்றங்களுக்குப் பின்னால் வண.எட்டம்பகஸ்கட கல்யாண திஸ்ஸ தேரர் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அழிக்கப்பட்டு காடுகளுக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாத வகையில் சிறிலங்கா இராணுவம் ஆங்காங்கே பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளது.

“குடியேற்றப்பட்டவர்களை மட்டுமே இந்தப் பகுதிக்குள் சிறிலங்கா
இராணுவத்தினர் அனுமதிக்கின்றனர். போருக்கு முன்னர் இங்கு வாழ்ந்த இந்தக்
குடும்பங்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இது
அடர்ந்த காடு. எல்லா மரங்களுமே 100 வயதுக்கு மேற்பட்டவை. எனவே இவர்கள்
எப்படி 30 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்திருக்க முடியும்?“ என்றும்
சமிக்கார கேள்வி எழுப்புகிறார்.

வனத் திணைக்களத்தைச் சேர்ந்த,
தம்மை வெளிப்படுத்த விரும்பாத நம்பகமான வட்டாரங்கள், சிங்கள மக்களைக்
குடியேற்றுவதற்கு 8000 ஏக்கர் காணிகளை விடுவிக்கும்படி மாவட்டச் செயலரால்
முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக
தெரிவித்துள்ளன.

“அரசகாணிகள் பெருமளவில் இருக்கும்போது, எதற்காக
8000 ஏக்கர் வனக் காணிகளை கோருகின்றனர்? இப்படியே காடுகளை அழித்தால் ஒரு
காடு கூட மிஞ்சாது“ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், வனத்
திணைக்கள பதில் கட்டுப்பாடாளரான, சதுருசிங்க, கருங்காலிக்குளம் வனப்
பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டது குறித்து தனக்கு எதும் தெரியாது என்று
கூறினார்.

“பதில் கடமையை பெறுப்பேற்றதில் இருந்த இதுபற்றி நான்
அறியவில்லை. வவுனியா மாவட்டச்செயலர் அத்தகைய கோரிக்கையை விடுத்திருந்தால்
கூட நான் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை
சிறிலங்கா இராணுவத்தினர் அழித்திருந்தால் அதுபற்றி மாவட்ட வன அதிகாரி
எமக்குத் தகவல் தகவல் தந்திருப்பார். அவரிடம் இருந்து எந்தத் தகவலும்
கிடைக்காத நிலையில், அதுபற்றி கருத்துக் கூறமுடியாது என்று
தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வன அதிகாரி சரத் குமாரவிடம் இதுதொடர்பாக கேட்டபோது, எந்தவொரு தகவல்களையும் வழங்க மறுத்து விட்டார்.

“இதற்கான வழிகாட்டுதல்கள் உயர்மட்டத்தில் இருந்து வந்தது, என்னால் எந்தக்
கருத்தும் கூறமுடியாது. நான் ஒரு அரச பணியாளர். எவ்வாறாயினும், இங்கு என்ன
நடக்கிறது என்பதை எனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்“ என்று
அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டச்செயலர் மற்றும் பிரதேச
செயலருடன் இதுபற்றி கருத்துக் கேட்கத் தொடர்பு கொள்ள முயன்ற எல்லா
முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதுபற்றிய கருத்தை அறிவதற்கு
மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு குறுந்தகவல் அனுப்பிய போதும்
அவரிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

எவ்வாறாயினும், வண.எட்டம்பகஸ்கட கல்யாணதிஸ்ஸ தேரர், சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

சிங்கள மக்கள் வனப்பகுதியில் குடியேற்றப்படவில்லை என்றும், அது அவர்கள் வாழ்ந்த கிராமம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சே அவர்களை அங்கு மீளக்குடியேற்றியதாகவும், இராணுவமோ அல்லது ஏனையவர்களோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிறிலங்கா இரணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான்
வணிகசூரியவிடம் கேட்டபோது, “சிறிலங்கா இராணுவம் எந்தவொரு காடுகளையும்
அழிக்காது, எந்தவொரு நபரே, தரப்போ அவ்வாறான செயலில் தொடர்பட்டிருந்தால்,
அவர்களுக்கு எதிராக, தராதரம் அந்தஸ்து பாராமல் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டை நான்
முழுமையான நிராகரிக்கிறேன். சிறிலங்கா இராணுவம் ஒரு உயர் ஒழுக்கமுள்ள,
அமைப்பு.

சில விதிமுறை மற்றும் சட்டமீறல்கள் இடம்பெற்றிருக்கலாம்,
ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும்.
சிறிலங்கா இராணுவம் யார் உதவி கோரினாலும்
அபிவிருத்திப் பணிகளுக்கு உதவி வருகிறது. வடக்கில நாம் 10 ஆயிரம் வீடுகளை
அமைக்க உதவியுள்ளோம்.
மீள்குடியேற்ற அமைச்சின் கோரிக்கைக்கு அமைய
வீடுகளை அமைப்பதற்காக காடுகளை அழித்துள்ளோம். ஆனால் பெறுமதியான மரங்களை
இராணுவ அதிகாரிகள் கொண்டு சென்றதான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக“ அவர்
கூறியுள்ளார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் சிங்கள காடையர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ் பாசையூரைச் சேந்த சாதாரண குடி மகனின் உடம்பை பாருங்கள் உறவுகளே !!!
» முல்லைத்தீவை முழுமையாக சிங்கள மயமாக்கும் முயற்சியில் - நாயாறில் சிங்கள கடற்தொழிலாளர்கள்
» 2005ம் ஆண்டு சுனாமி நிதியை தமிழ் மக்களுக்கு செலவழிக்க புலிகளோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளிப்போம் என்று சிங்கள பெளத்த பிட்சுக்க‌ள், தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திய போது, கூட்டத்தை கலைக்கும் சிங்கள போலீசுக்காரரை மிர
» "வலிகாமம் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக 5,000 வழக்கு! நேற்று மட்டும் 400 குடும்பங்கள் பதிவு"
» வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்;

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum