போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்) Arul11 ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்) Untitl11 ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்) Iiiiii12 ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்) Untitl13 ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்) Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்)

Go down

ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்) Empty ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் ஒளிப்பட ஊடகத்துறையும்! (படங்கள்)

Post by Admin Sat Aug 04, 2012 5:50 pm

அசலனப் படங்கள் (Still photographs) ஊடகத்துறையில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. ஆயிரம் சொற்களுக்குச் சமமானது ஒரு ஒளிப்படம் என்று
சொல்லப்படுவதில் நிறைய உண்மை இருக்கிறது. புகைப்படக் கருவிகள் மேம்பாடு
அடைந்த எமது காலத்தில் ஒளிப்படத்தின் முக்கியத்துவம் முன்னரிலும்
கூடியுள்ளது.
தொலைக்காட்சியில் காட்டப்படும் ஒளிக்
காட்சிகளுடன் போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும்
இருக்கின்றன. விற்பனையைப் பெருக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களைக்
கவர்ந்திழுப்பதற்காகவும் பெருமளவு ஒளிப்படங்களைப் பத்திரிகைகளும்
சஞ்சிகைகளும் பிரசுரிக்க வேண்டியுள்ளது.

இன்ரர்நெற் செய்திகளிலும் ஆய்வுகளிலும்
இடையிடையே ஒளிப்படங்களை பிரசுரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
படங்களுக்காகவே இணைய தளத்தைப் பார்ப்போர் இருக்கிறார்கள். கூகிள் (Google)
கெற்றி இமேஜஸ் (Getty Images) போன்ற நிறுவனங்கள் ஒளிப்படங்களைக் களஞ்சியப்
படுத்துகின்றன.
[You must be registered and logged in to see this image.]
இந்தக் களஞ்சியங்களில் இருந்து தேவையான ஒளிப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்
படப்பிடிப்பாளர்கள் தமது படங்களை இந்த நிறுவனங்கள் உட்பட றொயிற்றர்
(Reuter) ஏஎப்பி (AFP) போன்ற செய்தி நிறுவனங்களுக்கும் விற்பனை
செய்கிறார்கள்.

செய்தி நிறுவனங்கள் நாளாந்திரச்
செய்திகளோடு அவற்றிற்குப் பொருத்தமான ஒளிப்படங்களையும் பத்திரிகைகள்,
சஞ்சிகைகள் போன்றவற்றிற்கு விற்பனை செய்கின்றன. ஒளிப்படங்களுக்கு ஊடகத்
துறையில் நிறைய வரவேற்பு இருக்கிறது.

ஒளிப்பட ஊடகத்துறை (Photo Journalism)
என்பதின் அர்த்தம் என்னவென்றால் செய்தி சேகரிப்பவர்கள் எழுத்து மூலச்
செய்திச் சேகரிப்பை மாத்திரம் செய்யாமல் படப்பிடிப்பையும் கூடுதலாகச்
செய்கிறார்கள். சில ஊடகவியலாளர்கள் தனியே படங்களை மாத்திரம்
எடுக்கிறார்கள்.

சில படப்பிடிப்பாளர்களின் சலனப் படங்கள்
கலை உணர்வோடு எடுக்கப்படுவதால் காலத்தால் அழியாத சிரஞ்சீவி நிலையை
அடைக்கின்றன. இந்த ரக ஒளிப்படங்கள் வரலாறு படைக்கின்றன. ஒளிப்பட
போட்டிகளில் அவை பரிசுகளை வெல்கின்றன.

போர் நடக்கும் இடங்களில் துணிச்சலாக
நின்று படிப்பிடிப்பை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்களை போர் ஊடககவியலாளர்கள்
என்று அழைக்கிறார்கள். War Photographers and reporters என்ற பொதுப் பெயர்
போர் நடக்கும் இடங்களில் ஒளிப்படம் எடுப்போருக்கு வழங்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் போர் காட்சிகளை
படம் பிடிப்பதில் பெரும் கவனஞ் செலுத்தினார்கள். படப்பிடிப்புத் துறை
புலிகள் கட்டமைப்பில் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது. போர்
காட்சிகளை படம் பிடிக்கும் போது உயிரிழந்த போராளிகள் இருந்தார்கள்.
[You must be registered and logged in to see this image.]
குண்டடிபட்டு வீழ்ந்த படப்பிடிப்புப் போராளியின் இறுதி மூச்சை அவர்
பக்கத்தில் வீழ்ந்து கிடந்த படக்கருவி தானியங்கி முறையில் படப் பிடிப்பு
நடத்திய வரலாறு புலிகள் அமைப்பில் உண்டு. ஒரு படப்பிடிப்பாளன் உயிரிழந்து
வீழ்ந்த போது அடுத்த படப்பிடிப்பாளன் வீழ்ந்தவன் கருவியைக் கையில்
எடுத்துப் படப்பிடிப்பைத் தொடர்ந்த வரலாறும் புலிகள் அமைப்பில் இருக்கிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்புலிகளும் படப்பிடிப்பில் ஈடுபட்டனர்.

அசலனப் படங்கள், வீடியோ படங்கள் மூலம்
ஆவணப்படுத்தலுக்கு (Documentation) முக்கியத்துவம் கொடுப்பதில்
விடுதலைப்புலிகள் ஒப்பற்று விளங்குகிறார்கள். உலகின் எந்தவொரு விடுதலைப்
போராட்ட அமைப்பும் புலிகளுக்கு நிகராக படப்பிடிப்புக்கு முக்கியத்துவம்
கொடுத்ததில்லை.

போட்டோ ஜெர்னாலிசம் பற்றிப் பேசும் போது
லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த டிம்
ஹெதறிங்ரன் (Tim Hetherington) பற்றிப் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

1970 டிசம்பர் 05ம் நாள் இங்கிலாந்தில்
பிறந்த ஹெதறிங்ரன் 2011 ஏப்ரல் 20ம் நாள் லிபியா நாட்டு மிஸ்றாட்டா
(Misrata) களத்தில் குண்டடிபட்டு உயிர் நீத்தார். இறக்கும் போது அவருக்கு
வயது 40 அவர் சலனப் படப் பிடிப்பு வீடியோ படப்பிடிப்பு ஆகிய இரண்டையும்
மேற்கொண்டு இரண்டிலும் சாதனை படைத்தவர்.

ஆப்கானிஸ்தான் போரில் அவர் றெஸ்டிரெப்போ
(Restrepo) என்ற ஆவணப் படத்தை 2010ல் தயாரித்தார். இன்றும் அதன் பெறுமதி
உணரப்படுகிறது. அதே ஆப்கானிஸ்தான் போரில் அவர் 2007ம் ஆண்டு பிடித்த அசலனப்
படம் உலகப் பத்திரிகையாளர் படப்பிடிப்புப் போட்டியில் பரிசு பெற்றது.

ஒரு அமெரிக்கப் போர் வீரன் போரில் பங்கு
பற்றிய சோர்வில் இரு கைகளாலும் முகத்தைத் துடைக்கும் காட்சியை அவர் படம்
பிடித்தார். அமெரிக்கப் படையினர் படும்பாட்டையும் ஆப்கானிஸ்தான் போரின்
தன்மையையும் அந்தப் படம் விளக்குவதாக நடுவர்கள் விளக்கம் கூறகின்றனர்.
[You must be registered and logged in to see this image.]
லிபியாவில் நடந்த அதிபர் கடாபிக்கு எதிரான போர் முடிந்து விட்டது. ஆனால்
சென்ற வருடம் அது உச்சம் அடைந்த போது மிஸ்றாட்டா கடாபியின் படைகளால்
முற்றுகை இடப்பட்டது. அங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட டிம் ஹெதறிங்ரன்
எறிகணைக் குண்டடிபட்டு உயிரிழந்தார்.

லிபியாவில் ஒரு பிரபல நகர்ப்புறச்
சதுக்கத்திற்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. எந்தவித நவீன
படப்பிடிப்புக் கருவி தயாரிக்கப் பட்டாலும் அதை பயன்படுத்துபவன் மனிதனாகத்
தான் இருக்கிறான். இதை விடுதலைப் புலிகளின் வீரச்சாவடைந்த நூற்றுக்கும்
மேற்பட்ட படப்பிடிப்பாளர்கள் நிரூபிக்கிறார்கள்.

நன்றி : eelampress
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்புலிகள் படங்கள்
» புலிகளின் பாய்ச்சல் படங்கள்
» "பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை"
» பாலச்சந்திரனின் படங்கள் கவனத்தில் எடுத்தது ஐ.நா.; பொறுப்புக்கூறல் குறித்து இலங்கைக்கு பான் கீ மூன் வலியுறுத்து
» முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு யுத்த பூமியின் இன்றைய நிலை-(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum