போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் Arul11 Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் Untitl11 Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் Iiiiii12 Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் Untitl13 Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்

Go down

Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் Empty Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்

Post by Admin Thu Feb 28, 2013 9:19 am

சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் – பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும்

[You must be registered and logged in to see this image.]
“சிங்கள பௌத்தர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள
பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள
அரசாங்கமாகும். ஜனநாயக மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும்
சிங்கள இனத்தை அழிக்கின்றன”

ஐக்கிய அரபுக் குடியரசு United Arab Emirates நாட்டினை தளமாகக் கொண்ட Gulf News ஊடகத்தில்
அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள
ஆய்வுக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரம்:

சிறிலங்காவில் நிலவும் பௌத்த தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படா
விட்டால், இத்தீவில் வாழும் சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில்
வன்முறையும் இனப்போரும் மட்டுமே ஏற்பட வழிவகுக்கும். சிறிலங்காத் தீவில்
நிலவும் பௌத்த தீவிரமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற நாசிச ஆட்சியை
நினைவுபடுத்துகிறது.

சிறிலங்காவில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாத
சமூகமானது அங்கு வாழும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில்
வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகிறது. இந்த வரிசையில், கடந்த வாரம்
சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான Bodu
Bala Sena மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. இது
தற்போது சிறிலங்காவில் நிலவும் அடக்குமுறையை மிகத் தெளிவாக எடுத்துக்
காட்டுகின்ற செய்தியாக அமைந்துள்ளது.

“சிங்கள பௌத்தர்களால்
மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே
சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள அரசாங்கமாகும். ஜனநாயக
மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள இனத்தை அழிக்கின்றன”
என இந்த ஊர்வலத்தில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது.

தன்னை
பதவியில் அமர்த்த உதவிய ‘புனிதமான சிங்கள வாக்குரிமை’ பாதுகாக்கப்படுவதை
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்த வேண்டும் என இந்த
ஊர்வலத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய Bodu Bala Sena அமைப்பின் கட்சித்
தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘கெரில்லா’ போன்று முஸ்லீம்கள்
உடையணிவதாக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தீவிரவாத புத்தபிக்குகள்
விமர்சித்தனர்.

அத்துடன் முஸ்லீம்கள் உண்ணுவதற்காக பிரத்தியேகமாக
முத்திரை குத்தப்பட்ட உணவுவகைகள் (Halal) போன்றவற்றுக்கு தடைவிதிக்க
வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள்
பௌத்தத்தை முதன்மைப்படுத்தி கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். இவர்கள் முஸ்லீம் மத அடையாளங்களை விமர்சித்து தீவிர பௌத்த
பிக்குகள் உரையாற்றிய போது அதற்கு ஆதரவாக தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Halal என்பது ‘அனுமதிக்கப்பட்டது அல்லது சட்டரீதியானது’ எனப் பொருள்படும்.
Halal Foods என்பது முஸ்லீம்களின் உணவுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்
கீழ் அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளாகும். அதாவது முஸ்லீம்கள் பன்றி, கொலை
செய்யப்படுவதற்கு முன்னர் இறந்த மிருகங்கள், ஊண்உண்ணி மிருகங்கள், இறந்த
பறவைகள் போன்ற குறித்த சில உணவுகளை உண்ணுவதற்கு குர்ஆனில்
தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒழுங்கான முறையில் கொல்லப்படாத அல்லது
மனிதாபிமானமாக கொல்லப்படாத மிருகங்களின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ற
சட்டம் உள்ளது.

“இன்றிலிருந்து நீங்கள் எல்லோரும் முஸ்லீம்
நடைமுறைகளுக்கும் முஸ்லீம் வர்த்தக செயற்பாடுகளுக்கும் எதிராக காவற்துறை
போன்று செயற்பட வேண்டும். நீங்கள் மக்கள் காவற்துறையினராக உங்களைக் கருதி
செயற்படவேண்டும். ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் சிங்கள இனத்தை
அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்” என Bodu Bala Sena என்கின்ற பௌத்த
சிங்கள தீவிரவாத அமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்த பிக்குவான ஞானசாரா
தேரர் அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேபோன்று
சிறிலங்காத் தீவில் வாழும் கிறிஸ்தவர்கள் தமது மத நடவடிக்கைகளை
தீவிரப்படுத்தி வருவதாகவும் தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.


பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள மக்களின் பணம், தொழில்
மற்றும் முயற்சியாண்மை போன்றவற்றை விழுங்குவதாக பிறிதொரு பிக்கு
ஆவேசத்துடன் தெரிவித்தார். “இது சிங்கள தேசம். சிறிலங்காவில் வாழும்
சிறுபான்மையினர் பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் அதன் அடையாளத்திற்கும்
அச்சுறுத்தல் இல்லாது வாழவேண்டும் என்பது இந்தப் பிரபஞ்சத்தின்
கோட்பாடாகும்” என அந்தப் பிக்கு குறிப்பிட்டார்.

உணவுத் தடையை
சிறிலங்கா அரசாங்கம் மார்ச் 31 இற்குள் அமுல்படுத்த வேண்டும் என Bodu Bala
Sena அமைப்பின் பொதுச் செயலர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியான சவால்
ஒன்றை விடுத்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இந்தத் தடையைப் போடும் வரை தாம்
தொடர்ந்தும் போராடுவோம் எனவும் இவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


“சட்டத்தை எமது கைகளில் நாங்களாக எடுத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம்”
என பொதுச் செயலர் ஆர்ப்பாட்டப் பேரணியில் வலியுறுத்தினார்.


அண்மைக் காலமாக சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லீம்
சமூகத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு இச்சிங்கள தீவிரவாத அமைப்பே தலைமை
தாங்கிவருகிறது. குருநாகல மாவட்டத்தின் நரம்மல என்கின்ற இடத்தில் வர்த்தக
நிலையங்களை வைத்திருக்கும் முஸ்லீம் உரிமையாளர்கள் அவர்களது வர்த்தக
நிலையங்களை மார்ச் 31ற்குள் மூடிவிட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இந்த
உரிமையாளர்களின் கொலை செய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டு Bodu Bala Sena
அமைப்பு எச்சரிக்கை கடிதங்களை கடந்த வாரம் அனுப்பியிருந்தது.


இதேபோன்று ஜனவரி மாதத்தில் வடமேற்கு மாகாணத்தின் வயம்ப என்ற இடத்தில் பௌத்த
தீவிரவாத அமைப்பால் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் Halal உணவுப் பொருட்கள்
விற்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி பிறிதொரு ஆர்ப்பாட்டப் பேரணி
இடம்பெற்றது.

சிறிலங்காத் தீவு முழுமையிலும் வாழும் சிறுபான்மை
முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான வன்முறைகள்
நாட்டில் மிகக் கிட்டிய எதிர்காலத்தில் பிறிதொரு இனப்போருக்கு
வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல
நூற்றாண்டுகளாக சிறிலங்காத் தீவில் வாழும் பெரும்பாலான சிங்களவர்களும்
சிறுபான்மை இன மக்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்துள்ள போதிலும்,
இவ்வாறான சில பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் அடாவடித்தனங்கள் நாட்டுக்கு
ஆபத்தை உண்டுபண்ணுகின்ற காலம் தற்போது நெருங்கிவிட்டது.


சிறிலங்காத் தீவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிராகக்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் வளைகுடா ஒத்துழைப்புச்
சங்கத்தின் உறுப்பு நாடுகள் கவனத்தைச் செலுத்துவதுடன் இவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் விதமான நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன. இந்நிலையில்,
பௌத்த தீவிரவாத அமைப்புக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வாறான
வன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்காம் அமைதி காப்பது எச்சரிக்கையுடன்
நோக்கப்பட வேண்டும்.

வளைகுடா ஒத்துழைப்புச் சங்கமானது
சிறிலங்காவுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிபுரிகிறது. அதாவது
சிறிலங்கர்களுக்கு தனது உறுப்பு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களை
வழங்கியுள்ளது. இச்சங்கத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள்
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளாகவும் வியாபாரிகளாகவும் அடிக்கடி வருகை
தருகின்றனர்.

இந்நிலையில் வளைகுடா ஒத்துழைப்புச் சங்கமானது
சிறிலங்கா முஸ்லீம்கள் சந்திக்கும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும். இதற்கான
நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காவிட்டால் அதன் பின்னர்,
சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமல்லாது சிறிலங்காவில் வாழும் அனைத்து
சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பௌத்த தீவிரவாதம் வன்முறையைக்
கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இது ஒரு நாட்டின் இறையாண்மை சார்ந்த
விவகாரம் அல்ல. இது மனிதாபிமானம் சார்ந்த விவகாரமாகும்.

*Tariq A. Al Maeena is a Saudi socio-political commentator. He lives in Jeddah, Saudi Arabia.

நித்தியபாரதி
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிநொச்சியில் அமைக்க பட்டிருந்த கிறிஸ்தப வாலிப சங்கத்தின் வேலிகள் அதன் பெயர் பலகைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளது .
» சிறிலங்காவில் ‘தமிழ்ஈழ‘ அரசியல்கட்சிகளுக்கு விரைவில் தடை
» "தமிழீழம் எங்கே இருக்கின்றது அதன் எல்லைகள் எங்கு உள்ளன" தேசிய தலைவரின் நெத்தியடியான பதில்
» "மனிதமிருகம் மகிந்தாவின் இந்திய வருகையை எதிர்த்துத் தீயினில் கரைந்த வீர உறவு விஜயராயுக்கு எங்கள் வீரவணக்கம்.-யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்"
» "சித்திரவதை என்பது சிறிலங்காவில் அமைப்புரீதியாக உள்ளது - ஹாங்காங் நீதிமன்றம் அதிரவைக்கும் தகவல்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum