போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
துரோகசக்காரம் Arul11 துரோகசக்காரம் Untitl11 துரோகசக்காரம் Iiiiii12 துரோகசக்காரம் Untitl13 துரோகசக்காரம் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

துரோகசக்காரம்

Go down

துரோகசக்காரம் Empty துரோகசக்காரம்

Post by Admin Sun Dec 02, 2012 8:22 am

துரோகசக்காரம்
**************

[You must be registered and logged in to see this image.] அவனை எளிதில் எவராலும் புரிந்துகொள்ள முடியாது.
அவன் தனக்குள் வனைந்து வைத்திருக்கும் உலகம் அப்படியானது.

அவன் எப்படித்தான் அதற்குள் வாழத் தன்னைப் பழக்கிக் கொண்டானோ தெரியாது.
தனது பழக்கங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப அவன் அப்படியானதொரு உலகை உருவாக்கியிருந்தான்.

அவன் எப்போதும் தனிமையை விரும்பினான். அதற்குள் வாழும் நிறைவையும் அவன் தேடியிருந்தான்.

கொடுக்கப்படும் கடமையை நூறு வீதமும் நேர்த்தியாகச் செய்ய வேண்டுமென்பதில்; அவன் நூறு வீதமும்

முயல்வான்.

இங்கிருந்த நாட்களில் - தோழர்களின் அருகிருந்த பொழுதுகளில் - அவன் எல்லோரையும் தன்பால் ஈர்த்திருந்தான்.

அதிகம் பேசாது - கூடிப்பழகாது - தனித்துத் தன்னுலகத்துள் வாழும் ஒரு
மனிதன் எப்படி எல்லோரையும் தன்வசப்படுத்த முடியுமென யாராவது கேட்கக்கூடும்.

ஆனால், அவன் வாழ்ந்து காட்டினான். தன்வசப்படுத்திக்காட்டினான்.

பேச்சால் - உறவால் ஒரு மனிதன் மற்றவர்களை அதிகம் ஈர்ப்பதிலும் பார்க்க -
செயலால் எத்தனை வலிமையாக எல்லோரையும் ஈர்க்க முடியும் என்பதைச் செய்து
காட்டியதற்கு அவன்...

நல்ல எடுத்துக்காட்டு...

நல்ல சாட்சி...

கரும்புலிக்கு விண்ணப்பித்திருந்தவனின் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு; அவனொரு மறைமுகக் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தான்.
ஏற்கெனவே எவருக்கும் எளிதில் பிடிபடாத அவன்... இனி எவருக்கும் எப்போதுமே பிடிபடப்போவதில்லை...

அவன் எண்ணங்களும் எவருக்கும் தெரியவரப்போவதுமில்லை.

அவனைப் புரிந்து கொள்வதே இயலாத காரியம் - அதுவும் இப்போது ஒரு மறைமுகக்
கரும்புலியாகி... தேசத்தின் அதிஉயர் இரகசியத்தைப் பேணப்போகும் நிலையில்.
சாத்தியமேயில்லை.....

மற்றவர்களுக்குத் தெரியாத அவனின் செயல்களைப் போலவே... - அவனின் சாவும் கூட ஒருநாள்.....

யாருக்கும் தெரியாமல் - அவனை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக... இருக்கப்போகிறது.

ஆனால், அவன் சாவு செய்யும் சாதனை..... அது என்றும்; சரித்திரத்தில் நிலைத்திருக்கப்போகிறது.....

சனநெரிசல் மிக்க பகைவனின் ~தலைமை நகரத்துள் அவன் வாழத் தொடங்கியிருந்தான்.
மன எண்ணங்களை பிறழச்செய்யும் அந்த நகரத்தின் ஆடம்பரங்களுக்குள் அள்ளுண்டு போகாமல் - நிதானமாக நடந்தான்.....

தாக்க வரும்; கொடிய மிருகத்தை வேட்டையாட முயலும் ஒரு தேர்ந்த
வேட்டைக்காரன் போல... தன்னுடைய 'இலக்கை மட்டும்;" அவன் தேடிக்
கொண்டிருந்தான்.

அவனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு; மிகமுக்கியமானது.

அது தமிழனாய்ப் பிறந்து - தமிழனுக்கே அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த தமிழினத்தின் 'கோடரிக்காம்பு".

தான் பெற்ற அத்தனை புலமைகளையும்; பகைவனிற்குப் பலம் சேர்க்கும் வகையில்;;
கேவலம் பணத்திற்கும் ஆடம்பரத்திற்கும் விற்றுக்கொண்டிருந்த ஒரு
'புத்திஜீவி"

எதிரி தமிழரின் உரிமைகளைப் பறித்து - அவர்களை அடிமைகளாக மாற்ற முயலும் வேளைகளிலெல்லாம்...

உலகை ஏமாற்றும் அரைகுறைத் 'தீர்வெழுதி"..... தமிழினத்திற்கு நிரந்தர
அடிமைச் சாசனம் எழுதும் தந்திரம் உரைத்து..... சட்ட நுணுக்கம் காட்டி...
இனத்தைப் படுகுழிக்குள் தள்ளிக்கொண்டிருந்த துரோகியைத் தான் அவன்
தேடிக்கொண்டிருந்தான்.....

ஒருநாள் - இவன்
பலநாள் தேடியலைந்த அந்த இலக்கு; இவன் தேடிப்போ
காமலே இவனின் முன்னே வந்துகொண்டிருந்தது.
பகைவனின் உச்சப் பாதுகாப்பு ஏற்பாட்டோடு
விரைந்து வந்து கொண்டிருந்தான் அந்தத் ~துரோகி.

நின்று நிதானித்து - முடிவெடுத்து தாக்குதல் மேற்கொள்ள அவகாசம் கிடையாது.
உடனடியாகவே 'அழிக்க" வேண்டிய இலக்கு. முன்னே நகர்ந்து போனவனுக்குள்.....
அந்த சந்தேகப் பொறி தட்டியது.
துரோகி சாதாரண மானவனல்லன்.....

எதிரிகள் எப்போதும் பாதுகாக்க விரும்பும் 'சாணக்கிய மூளையாளன்."
ஆகவே, பாதுகாப்பு ஏற்பாடு நிச்சயம் பலமானதாக இருக்கும்.
அந்தப் பலமான பாதுகாப்பு ஏற்பாட்டை உடைக்கக்கூடியதாகத் தாக்குதலைத் தொடுக்க வேண்டும்...

ஆகவே, அதற்கேற்ப தாக்குதலை நேர்த்தியாகச் செய்ய வேண்டும்.
அவன் பவனிவரும் அந்த ஊர்தி..... ஒருவேளை குண்டுதுளைக்காத ஊர்தியாக
இருந்தால்..... அவன் செய்யப்போகும் அந்த தாக்குதல் சறுக்கி... துரோகி
தப்பிவிடவும் கூடும்.

இப்படி நிகழுமானால் இத்தனை நாள் முயற்சியும் பாழாகிப் போய்விடும்...
அந்த சிறு பொழுதில் அவன் முடிவெடுத்து தாக்குதலை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அந்தத் துரோகியை அழிக்கும் தாக்குதல் உத்தியைத் தானே நினைத்து... அந்த
நீளமான தெருவில் விரைந்து வந்துகொண்டிருந்த அந்த இலக்கு அருகில் நெருங்கி
வந்தவுடன்..... ஆவேசத்தோடு பாய்ந்து தாக்கினான்..... அந்தத் துரோகியின்
ஊர்தியை எங்கள் வீரன்....
குறிதவறாத அந்த அடியில் அழிந்து போனான் அந்தத் துரோகி.....
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

துரோகசக்காரம் Empty Re: துரோகசக்காரம்

Post by Admin Sun Dec 02, 2012 8:26 am

போராட்டம்..!
*************

[You must be registered and logged in to see this image.]
நெருக்கடி மிகுந்த காலமொன்றில்; எதிரியின் தலைமை ~நிர்வாக மையம் நோக்கி அவள் நகர்த்தப்பட்டாள்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கு முன்னதாக
ஒரு அனுபவத்தை அவள் பெற வேண்டுமென்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

முன்பின் அறிமுகமில்லாத எதிரியின் தளத்தில் அவள் நிலை பெற் இந்தப் பயண அனுபவம்; அவளுக்கு கைகொடுக்கக்கூடும்.
எந்தவேளையும் விழிப்போடு இருக்கும் பகைவரின் கண்களுக்குள் எத்துப்படாது நிற்க நிறைந்த திறமையும் - சாமாத்தியமும் வேண்டும்.
சிறு சந்தேகம் எழுந்தால் கூட அவளை மட்டுமல்ல - சூழவுள்ளவர்களையும்
சேர்த்தே சிறையில் தள்ளிவிடக்கூடிய அல்லது கொன்றுவிடும் ஆபத்து அதிகம்.
ஆகவே, அந்தத்தளத்தின் அறிமுகத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்வது அவளுக்கு அதிக நன்மை பயக்கக்கூடும்.
ஒருநாள் அவள் எதிரியை ஏமாற்றும் பல புனைகதைகளோடு இங்கிருந்து தன் பயணத்தைத் தொடக்கினாள்.

தந்தை - மகள் என்ற போலி அறிமுகத்தோடு தடை முகாம் தாண்டி உள்ளே நுளைந்து கொண்டாள்.
அவளின் நடவடிக்கைக் காலம் முழுவதும் அவரே இவளின் தந்தை.
அந்த இடை நகரத்தில் பயணத்தடை - கெடுபிடி-காலதாமதம் என இழுத்தடிக்கும்
எதிரியின் வழமையான நடவடிக்கைகள் காரணமாக அவளின் அதிக நாட்கள் வீணே கழிந்தன.

பலநாள் அலைச்சல் - எத்தனையோ நாள் மனவுளைச்சலென சிரமப்பட்டவள்; ஒரு நாள்
அவள் சென்றடைய வேண்டிய எதிரியின் நிர்வாக மையத்தைச் சென்றடைந்தாள்.
அவள் அங்கு சென்றதும் - இங்கு தெரிவித்த முதல் விடயம்;...

நான் மீளவும் அங்கு வராமல் - இங்கேயே நின்று செயற்படப் போகிறேன்...
மீண்டும் ஒரு பயணத்தால்; தேவையற்ற காலதாமதமும் - நெருக்கடிகளும் ஏற்படலாம் சில வேளைகளில் தேவையற்ற கைதுக்கும் உள்ளாகலாம்.

அவள் தெரிவித்த நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு... அங்கு அவள் தொடர்ந்து நிற்பதற்;கான அனுமதி வழங்கப்பட்டது.
அவள் அங்கு நிலைபெற்று இயங்கத் தொடங்கினாள்...


ஐயாவுக்குத் தெரியும்; அவள் ஏதோவொரு இரகசிய நடவடிக்கைக்காகவே அங்கு வந்திருக்கிறாள் என்பது...

அது என்ன...? அதை அவள் எப்படி செய்யப்போகிறாள் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.

ஐயா வயதானவர்... அவரின் மகள் ஒரு போராளி; அவரின் குடும்பம் இங்கேதான் இருந்தது.
அவள் அங்கு நிலை பெற்ற சிறிது காலத்தில்; தன்னுடைய பணியில் ஓய்வின்றி ஈடுபடத் தொடங்கினாள்.

எதிரியின் முற்றத்தில் நின்று கொண்டு அவனின் பலத்தையும் -பலவீனத் தையும் அவள் ஆராயத் தொடங்கினாள்.

அதற்காக அவள் தன்னை வருத்தி செயற்பட்ட உழைப்பிருக்கிறதே அது கடினமானது - அந்த நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும்...

ஒவ்வொரு நாளும் - அவள் காலையில் புறப்பட்டுப் போவாள்.

எங்கு போகிறாள் - யாரைச் சந்திக்கிறாள் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் மதியமோ - மாலையோ வரும் போது அதிகளவில் களைத்துப் போயிருப்பாள்... முகம் வாடியிருக்கும்...

வந்தவள் சும்மாயிருக்கமாட்டாள்... குடியிருக்கும் வீட்டின் அத்தனை வேலைகளையும் ஓடியோடிச் செய்வாள்... ஒரு பொறுப்புள்ள மகளைப்போல...
ஐயாவோடு அன்பாக உரையாடுவதிலிருந்து... உணவு பரிமாறுவது வரை... சிரத்தையோடு காரியம் செய்வாள்.

ஐயா மகளின் அன்பில் நனைந்து... மெய்யுருகி - மனம் கசிந்து போவார்.
நாட்கள் ஓடின - அவளின் அலைச்சல் ஓய்வின்றித் தொடர்ந்தது...

ஐயா அவளின் தந்தையைப் போல நடிக்க அங்கு சென்றவர் - ஆனால் அவளின் செயல்கள் அவரை மாற்றியது.

ஐயா அவளுக்கு உண்மையான தந்தையாகவே... வாழத்தொடங்கினார்.


ஐயாவுக்குத் தன்னுடைய மகளுக்கும் - இவளுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காண முடியாதிருந்தது.

அத்தோடு அவர் அவருடைய மகளைப்பிரிந்து அதிக தூரத்திற்கு வேறு வந்திருந்தார்.
அவர் தன்னுடைய மகளாக மனதுக்குள் வரித்துக்கொண்ட அவள்;; ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவதை எண்ணிச் சஞ்சலப்படத் தொடங்கினார்.

ஐயாவுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வு மாற்றம்; அவளின் மீது ஆழமான பாசப்பிணைப்பாக் வேரூண்டத் தொடங்கியது.

ஐயா பாசத்திற்கு அதிக இடம் கொடுத்து; கடமையில் குழம்பத் தொடங்கினார்.
அந்த நேசம் அழகிய மலரின் மேல் படிந்த பனித்துளி போன்ற குளிர்மையான அன்பு.
அவளின் மனமோ இலட்சியத்தில் இறுகிக்கிடக்க ஐயாவின் மனமோ பாசத்தால் உடைந்து கொண்டிருந்தது...

இலக்கு நோக்கிய பயணத்தில்; ஐயா மேலும் திசைமாறத்தொடங்கினார்.
விளைவு ஐயா அவளைக் கடமையைச் செய்ய விடாது நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கினார்.


அங்கே அவள் குடியிருந்த வீட்டிலிருந்து முன்னரைப்போல புறப்படுவதற்கு அவர் அனுமதிப் பதில்லை.
அவளுக்கும் - தளத்திற்குமான தொடர்பாடல்களை துண்டிக்கத் தொடங்கினார்.
அவள் கடிதங்களை எழுதி இங்கே அனுப்பச் சொல்லி ஐயாவிடம் கொடுத்தால்; அவர்
அவற்றைக் குப்பைக்கூடைக்குள்ளேயோ அல்லது எரியும் அடுப்புக்குள்ளேயோ
தள்ளினார்.
'போவதற்கு நான் எல்லா ஒழுங்குகளையும் செய்து தாறன் நீ வெளிநாட்டுக்குப்போ..." என விடாது நச்சரிக்கத் தொடங்கினார்.

அவளோ ஐயாவின் மனம்கோணாத... நல்ல மகளாக நடந்து கொண்டு... தன்னுடைய இலக்கு
நோக்கிய பயணத்தில்; இயங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்.
ஆனால் ஐயாவின் செயல்களால் - அவளுக்கும் தளத்திற்குமான தொடர்புகள் அரிதாகிக் கொண்டே வந்தது.

அவள் உள்ளுக்குள்ளேயே ஒரு போராட்டத்தை நடாத்த வேண்டியவளானாள்.
அங்கே பாதுகாப்பாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அதேவேளை - தளத்தினுடனான தொடர்புகளைச் சீர்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது...
விடுபடமுடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கும் ஐயாவின் பாசப்
போராட்டத்திலிருந்து விடுபடல் என்பது அவளுக்கு சிரமமாகவிருந்தது அவள்
மனப்போராட்டத்துள் நெருக்குப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஐயாவைப் பலமுறை ஏமாற்றி... தந்திரமாக அவள் தளத்துடன் தொடர்ந்து தொடர்புளைப் பேண விளைந்தாலும்; சீரின்றிய தொடர்புகள் தான் தொடர்ந்தன.

அங்கே ஐயா ஏற்படுத்திய சிக்கல்களால் அவள் திணறவேண்டியிருந்தது.

அது தேர்தல் காலம்...

அதியுயர் பாதுகாப்பைக் கொண்ட இலக்கொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ள இங்கு திட்டமிடப்பட்டது.

அந்த இலக்குத் தமிழரின் மீதான பாரிய இடப்பெயர்வுக்கும்... பல படுகொலைகளுக்கும் காரணமாக விருந்த கொடிய இலக்கு.

இலட்சோப இலட்ச மக்களைச் சமாதானத்தின் பெயரால் ஏமாற்றுவதற்குக் காரணமாக இருந்த ஒரு இலக்கு.

சென்பீற்றர் தேவாலயப்படு கொலைக்கும் - நாகர்கோவில் மாணவர் படுகொலைக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிறைவேற்று அதிகார மையம்.

தாக்குதல் நடவடிக்கைகள் - ஒழுங்குபடுத்தல் தீவிரம் பெற்றிருந்தது.
தாக்குதலை செய்யப்போகும் கரும்புலியைத் தேர்வு செய்வது மட்டும் தான்
நடவடிக்கையாளர்களின் எஞ்சிய பணியாகவிருந்தது.

இங்கு பொறுப்பாளர்கள் பொருத்தமான ஆளைத் தேடிக்கொண்டிருந்தனர்.
அங்கு தாக்குதல் தளத்தில் இந்த நடவடிக்கைக்கு ஒழுங்குபடுத்தக்கூடிய நிலையில் நிற்கும் ஒரே ஆள் அவள் தான்.

ஆனால், அவளை அந்தத் தாக்குதலுக்குத் தெரிவு செய்வோம் என்றால் பல்வேறு காரணங்களால் அவளது தேர்வு தட்டுப்பட்டுக் கொண்டிருந்தது.

காரணம், அவள் அங்கு ஒரு அனுபவப் பயணமாக மட்டுமே புறப்பட்டுப்
போயிருந்ததால்; அவள் போதிய பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. அத்தோடு
வெடிகுண்டு அங்கியின் அறிவு கூட சிறியளவில் தான் அவளிடமிருந்தது.

அப்படியானால், அவளை இங்கே தளத்துக்கு எடுத்து அவளுக்குரிய பயிற்சியை அளித்து அங்கு மீண்டும் அனுப்ப வேண்டும்.

ஆனால், அன்றைய காலச் சூழலில் அது முடியாத காரியம்.

இல்லாவிடின் பகை தளத்திற் குள்ளேயே பிறிதொரு இடத்திற்கு அவளைப் பின்னகர்த்தி; அவளுக்கான பயிற்சியை வழங்கி அங்கு அனுப்ப வேண்டும்.

இத்தனை நெருக்கடிக்குள்ளும் பொறுப்பாளர்களின் கையிலுள்ள ஒரே தெரிவு அவள் மட்டும் தான்.

குழம்பித் தெளிந்து அவளிடமே முடிவை விடுவோமென்றால்;, அதற்கும்
முடியாமலிருக்கிறது. காரணம், ஐயா தளத்துடனான தொடர்புகளை அவள் பேண
முடியாதவாறு தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டிருக்கிறார்.


ஒருவழியாக சீரற்ற தொடர்பாடல் மூலமாக அளித்து விடயத்தை அவள் விளங்கிக்
கொள்ளக்கூடியதாக அரைகுறையாகத் தெரியப்படுத்தியது தான் தாமதம் அவள்
அழுங்குப்பிடியாக பிடித்துக் கொண்டாள்.

அந்தத் தாக்குதலை நான்தான் செய்ய வேண்டுமென... உறுதியாக நின்றுகொண்டாள்...
இந்தளவுக்கும் அவளுக்கு இலக்கு இதுதானென்று கூட சொல்லப்படவில்லை.

சிலவேளைகளில் அதுவொரு சாதாரண இலக்காகக்கூட இருக்கலாமென அவள் நினைக்கலாம்.

இந்தச் சிக்குப்பாடுகளுக்குள் திணறிக்கொண்டிருக்க... அவள் தொடர்ந்தும்
தளத்துடன் தொடர்பைப் பேணி வருகிறாள் என்பதை ஐயா தெரிந்துகொண்டு மேலும்
மேலும் பிரச்சினைகளை உருவாக்கினார்.

சாமான்யப் பெண்களைப் போலல்லாது, அவளொரு இலட்சியப் பெண்ணாகப் போராட வேண்டியிருந்தது.

எல்லா நெருக்கடிகளையும் உடைத்து வெளியேவர அசாத்திய மனத்துணிச்சலும் - தைரியமும் அவளுக்கு வேண்டியிருந்தது...

அவள் தனக்குரிய பெயரைத் தானே சூட்டியிருந்தாள்.
அவள் இங்கிருந்த நாட்களில் - ஒருநாள் - ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு
அவள் அந்தப் படத்தில் வந்த ஒரு ஆளுமை மிக்கப் பெண் கதாபாத்திரம் ஒன்றின்
பெயரைத்தான் தனக்குச் சூட்டியிருந்தாள்.

இப்போது அத்தகைய ஆளுமையைத்தான் அவள் அங்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.
தந்திரமாக ஐயாவை ஏமாற்றி... அங்கிருந்து வெளியேறிய அவள்... நடவடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாள்.
'நான் தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறன்...
எனக்குரிய வெடிபொருட்களை அனுப்பிவிடுங்கள்...
அத்தோடு இங்கிருந்து தளத்திற்கோ - அல்லது வெறொரு இடத்திற்கோ வரமுடியாத
சூழ்நிலை இருப்பதால்... தயவுசெய்து எனக்கு அழிக்கவேண்டிய அந்த இலக்கிற்;கான
வாய்ப்பை தராமல் விட்டுவிடாதீர்கள்... என உருக்கமாக வேறு
கேட்டுக்கொண்டிருந்தாள்.
அங்கு நடைபெறப்போகும் அந்தத் தாக்குதலைத்தான் செய்ய வேண்டுமென்பதில் அதிக ஆர்வமும்... உறுதியும் கொண்டவளாகக் காணப்பட்டாள்.
ஆனால், நடவடிக்கையாளர் களுக்கோ அவளின் விடயத்தில் எல்லாமே குழப்பமாக இருந்தது.

அவளை ஈடுபடுத்துவதில் தயக்கம் இருந்தது.
முடிவில் அவளே வெற்றி பெற்றாள்...
தாக்குதல் இலக்கை நோக்கிய அவளது இறுதிப் பயணத்திற்கு முன்பு ஒருநாள்; தளத்திலிருந்து அவளுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது.
நீங்கள் ஒருமுறை கூட அம்மானைச் சந்திக்கவில்லை. ஆகவே ஒருமுறை இங்கு வந்து சந்தித்துவிட்டு விரைவாகச் செல்லுங்கள்... என்று.
அதற்கு அவள் அங்கிருந்து பதில் அனுப்பியிருந்தாள்.
'நான் கதைத்துக்கொண்டிருக்கிறதெல்லாம் பொறுப்பாளர்களுடன் எண்டுதான் நினைத்துக் கொண்டிருக்கிறன்..."
தயவுசெய்து... எனக்கான சந்தர்ப்பத்தைத் தந்துவிடுங்கள்...
எல்லாவற்றையும் அம்மானிடம் சொல்லிவிடுங்கள்... என அங்கிருந்து பதில் அனுப்பியிருந்தாள்.

அந்தத் தாக்குதலுக்குரியவள் அவள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட முன்னரையும் விட அதிக உற்சாகமாக இயங்கத் தொடங்கினாள்...

அவளுக்கான வெடிமருந்து அனுப்பப்பட்டு இரகசிய இடமொன்றில் வைக்கப்பட்டது.

அவளுக்கு உதவியாக இங்கிருந்து ஒரு உதவியாளர் அனுப்பப்பட்டார். அவர் அங்கு
அவள் மேற்கொள்ளப்போகும் தாக்குதலுக்கேற்ப வெடிபொருள் ஒழுங்குகளையும்,
தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவளுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், அவளோ இங்கிருந்து சென்றவர் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் தானே செய்து அவருக்கு எந்தச் சிரமத்தையும் விட்;டுவைக்கவில்லை.

சென்றவர்க்கு வியப்பாக இருந்தது... பெருமையாகவும் இருந்தது...
ஐயாவின் பிடியிலிருந்து தந்திரமாக வெளியேறியவள் எவருடைய உதவியுமின்றித்
தாக்குதலுக்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தி அந்தப் பல்லாயிரக்கணக்கான
சனச் சமுத்திரத்துள்ளிருந்து விலகி... அந்த உயர் இலக்கை நோக்கி அவள்
நகர்ந்து கொண்டிருந்தாள்...

கம்பி வேலிபோல... அடுக்கடுக்காய்
எதிரி ஏற்படுத்தியிருந்த மனித வேலிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்து
முன்னேறிக் கொண்டிருந்தவளின்... முன்னே அவள் தாக்க வேண்டிய அந்த இலக்கு
அவளின் தாக்குதல் வலயத்துக்குள்ளிருந்து வேகமாக வெளியேறிக்
கொண்டிருந்தது...

இனியும் தாமதிக்க முடியாது. தாக்குதல் வலயத்துள் இலக்கு முழுமையாக அகப்பட்டிராத போதும் அவள் தாக்க வேண்டியதாயிற்று...

அந்தக் கடைசி நிமிடம்... அவள் தன்னை வெடிக்க. எதிரி நாட்டு நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பக்கம் இருண்டு போனது..
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum