போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
மண்பற்று.... Arul11 மண்பற்று.... Untitl11 மண்பற்று.... Iiiiii12 மண்பற்று.... Untitl13 மண்பற்று.... Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

மண்பற்று....

Go down

மண்பற்று.... Empty மண்பற்று....

Post by Admin Sun Dec 02, 2012 8:15 am

மண்பற்று
**********

[You must be registered and logged in to see this image.]
இரட்டைக் குழந்தைகளாக அவர்கள் பிறந்தபோது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனது அந்தக்குடும்பம்.
ஆசையாசையாய் அள்ளியெடுத்து - அவர்களின் அன்பையெல்லாம் கொட்டிவளர்த்து மகிழ்ந்து நின்றது அந்தக்குடும்பம்.

ஆனால், இன்று அவர்கள்.....?
அன்று அந்தக் கடற்கரையோரக் கிராமத்தின் ~கதாநாயகிகள் அவர்கள் தான்.
அன்று மட்டுமென்ன இன்றும் அவர்கள்தான் அவ்வூரின் ~கதாநாயகிகள்.
ஆனால், பலருக்குத் தெரியாது.
எல்லாமிருந்தும் இந்த சுதந்திரம் மட்டும் இல்லாது போனதால்.....
எல்லாம் இருப்பதாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது.....

ஆட்களும் வளர்ந்து, அறிவும் வளர இப்படித்தான் அவர்கள் சிந்திக்கத்தொடங்கினார்கள் அந்த இரட்டைச் சகோதரிகள்.

இங்கொரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்க தாங்கள் வீட்டில் குந்தியிருப்பதில் பயனில்லையென எண்ணியிருப்பார்கள் போலும்.....

குடும்பத்திலிருந்து பிரிந்து ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டுப் போனார்கள்; தம்மை விடுதலைப் போராட்டத்தில் இணைப்பதற்காக.

காலமோடியது இளையவள் கடற்புலியாகி எதிரியை அழிப்பதற்காக கடலிலே காத்திருந்தாள்.....

மூத்தவள் கரும்புலியாகி எதிரியின் தளமொன்றை நோக்கிய பயணத்திற்காக தென்தமிழீழத்தின் நகரமொன்றில் புறப்படத்தயாராகி நின்றாள்.....

அம்மாவுக்கு எதுவுமே தெரியாது.
பாவம் பிள்ளைகளைப் பிரிந்த மனக்கவலையில் அவள் நொந்துபோனாள்.
எத்தனை இரவுகள் அவள்..... அவர்களை நினைத்து அழுதிருப்பாள்.....

கண்ணீரில் கரைந்த இரவுதான் அவளுக்கு அதிகம்.....
ஆனாலும், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
அம்மா பிள்ளைகளை வீட்ட வரச்சொல்லிக் கேட்பதேயில்லை...
கேட்டால் மட்டுமென்ன அவர்கள் வந்துவிடவா போகிறார்கள்.
எத்தனை முறை அவள் கேட்டிருப்பாள். ஏச்சு வேண்டியதுதான் மிச்சம்.....
தமக்கையும்... தங்கையும் வௌ;வேறு இடங்களில் நின்றாலும்...
அவர்களிருவரும் நின்றது சாவோடு மோதும் போர்க்களங்கள் தான்.

அவர்கள் விரும்புவதும் அதுதான் கடலோடி விளையாடி பகையோடு மோத இளையவள் காத்திருக்கும் தருணங்கள் ஆபத்தானவைதான்...
ஆனால், என்ன செய்வது.... போராடினால்த்தான் வாழ்க்கையென்றான நிலையில்; தமிழினமிருக்கும் நிலையில்..

ஒரு நாள்; கடலில் நடந்த சமரொன்றில்; அந்த இரட்டையர்களில் இளையவள் எதிரியோடு மோதி தன்மேனியில் குண்டேந்தி வீழ்ந்துவிட...
தங்கையின் ஆசை முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாத தொலைவில் மூத்தவள் நின்றாள்....
ஒரு வானொலிச் செய்திதான் தங்கையின் வீரச்சாவு செய்தியைச்; சொல்லிவிட்டுப்போனது.
அவள் அழுதாள்.... தங்கைக்காக மட்டுமல்ல... தங்கையை நினைத்து அழும் தாய்க்காகவும் சேர்த்து.....

பிறப்பால் இணைந்து..
பந்தத்தால் ஒன்றிணைந்து...
போராட்டத்திலும் ஒன்றாகச்சேர்ந்து...
இலட்சியத்திற்காக வாழ்வதிலும் ஒன்றுபட்டவள்... இப்போது சாவில்மட்டும் முந்திவிட்டாளே..
மறக்கமுடியாத எத்தனை இனிய நினைவுகள்...
அவளுக்கும் தங்கைக்குமிடையில்... சொல்லி முடித்துவிடவும் முடியாத...
எண்ணி முடித்துவிடவும் முடியாதவை அவை.....
அவளுக்குத்தெரியும் அம்மா சோகத்தால் துடித்துப் போயிருப்பாள் என்பது.....
தங்கையின் முகத்தை தன்முகத்தில் ஒருமுறை பார்க்க அம்மா எவ்வளவு
ஏங்கியிருப்பாள் என்பதை எண்ணிப் பார்க்கவே அவளால் தாங்க முடியாதிருந்தது.

என்ன செய்வது....?
அம்மா அழாதயணை....
அவள் சும்மா சாகேல்ல....
நாட்டுக்காகத்தானே செத்திருக்கிறாள்...
எனச்சொல்லி....
அம்மாவின் தோள்களை அணைத்து... உச்சியைத்தடவி.... ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்திருக்கும்.
ஆனால், அவள் உறுதியானவள்.
இயக்கம் வீட்ட போகச் சொன்னாலும் அவள் போகமாட்டாள்.
அவளை நம்பி ஒப்படைக்கப்பட்ட கடமையின் பெறுமதி அத்தகையது....
தங்கையின் உடலைப் பார்க்கும் வாய்ப்பு அம்மாவுக்குக் கிடைத்ததையிட்டு...
அவளுக்கான இறுதி விடைகொடுக்கும் பாக்கியத்தைப் பெற்றதையிட்டு.... அம்மா
பெருமைபடட்டும்.
தன்னுடைய சாவுகூட அம்மாவுக்குத் தெரியவரப் போவதில்லை...
எங்கே அவள் வீரச்சாவடைந்தாள் என்பதைக்கூட அம்மா அறியப்போவதில்லை.....
தங்கையின் வீரச்சாவு குறித்து அம்மாவுக்கு ஆறுதல் செய்தியை மட்டும் அங்கிருந்து அவளால் அனுப்ப முடிந்தது.


எதிரியின் தளப்பிரதேசத்தை நோக்கிய அவளது பயணம் ஆரம்பமாகியிருந்தது.
அவள் பிறந்த ஊரின் வெகுதொலைவிலிருந்து அவள் அந்த தனது இறுதிப்பயணத்தைத் தொடக்கியிருந்தாள்.
இனி எப்போதுமே அவள் இங்கே திரும்பிவரப்போவதில்லை.
அவள் நேசிக்கும் தாயை...
தாய்நாட்டை... இனி காணப்போவதில்லை...
இப்படித்தான் அவளை அதிகம் நேசிக்கும்....
தாயும்...
தாய்நாடும்.... கூட....
அவளை இனிக்காணப்போவதில்லை.
அவள் குறித்த எந்தத் தடங்களும் எவருக்கும் கிட்டப்போவதுமில்லை.
அவள் புறப்பட்ட அந்தக் கடைசி நிமிடங்கள்....
அது ஒரு உணர்ச்சிமயமான நிமிடங்கள்...
மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தவள் தயங்கினாள்...
இத்தனை காலமும் அவள் பத்திரமாகப் பாதுகாத்த... அவள் தன்னுயிரிலும் மேலாக
நேசித்த... அந்த உன்னதமான ~ஏதோவொன்று அவள் கைகளுக்குள் மின்னியது....
உள்ளங்கைகளை விரித்து ஒருமுறை அவள் பார்த்துக்கொண்டாள். அதுதான் அவளின் கடைசிப்பார்வை.

தான் பயணித்த அத்தனையிடங்களுக்கும் தன்னோடு இத்தனை நாளும் கூடவே கொண்டு
சென்ற அந்த ~பொக்கிசத்தை அவளை வழியனுப்பி வைக்கும் தளபதியிடம் மனமின்றி
ஒப்படைத்தாள்.

'இதை மறந்திடாமல்..."
நான் வீரச்சாவடைஞ்ச பிறகு....
வீட்ட ஒப்படைச்சு விடுங்கோ... அது அவளின் பல கதைகளைச் சொல்லும் போல....
தளபதியின் கைகளுக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்து வந்த போது அவள் அள்ளிவந்த ~மண் பத்திரமாக இருந்தது.
அவளின் மண் பற்றைச் சொல்லியபடி....
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum