போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
கடமை வீரன் Arul11 கடமை வீரன் Untitl11 கடமை வீரன் Iiiiii12 கடமை வீரன் Untitl13 கடமை வீரன் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

கடமை வீரன்

Go down

கடமை வீரன் Empty கடமை வீரன்

Post by Admin Sun Dec 02, 2012 8:14 am

கடமை வீரன்
***********

[You must be registered and logged in to see this image.]
அவனொரு மறைமுகக் கரும்புலி வீரன்.
நல்ல உணர்வான போராளி....


ஆனால் பெரும் குழப்படிக்காரன் அவனைப் பொறுத்த வரையில் எந்த நேரமும் ஏதாவது
செய்து கொண்டிருக்க வேண்டும் - ஓரிடத்தில் ஓய்வாக இருப்பதென்றால் - அது
மட்டும் அவனால் முடியவே முடியாது.
அவனின்...

இந்தப் பெயரைச்சொல்லி யாரும் அழைப்பதேயில்லை...
மாறாக எல்லோரும் அவனை ~மூஸ் என்றுதான் அழைப்பதுண்டு.
அவனின் நட்பு வட்டம் பெரிது... தெரிந்தவர்கள் அறிந்தவர்கள்... எண்ணிக்கை
மிக அதிகம்..... அதனால் எல்லோருடைய நட்பையும் பேணிக்கொள்வதில் அவனுக்கு
அதிக ஆர்வம்.

அவனுடைய அளவில்லாத ~மூஸ் காரணமாக பல நாட்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பான். ஆனாலும், அதற்;காக மூசை குறைத்தது கிடையாது.
யாரேனும் தெரிந்தவர்களின் படலையைக்கடந்து உள்ளே அவன் நுளைவான்...
நுளைந்தவன் இங்கே தானே நிற்பான் என நினைத்தால்... நினைத்தவர் பாவம்... அவன்
அங்கே நிற்கமாட்டான்.

அதிலிருந்து நாலு தெரு தாண்டியும் அவனுடைய நட்புப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
அந்தளவுக்கு அவனொரு ஊர்சுற்றும் வாலிபன்...
அவன் ~மூசுக்கு முன்னுதாரணம்... என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்....
ஆனால்.....

பல இலட்சம் மக்கள் செறிவாக வாழும் நகரமது.
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரு சில மணிநேரத்திற்குள் உள்ளே நுழைவதும் - வெளியேறுவதுமாக எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் நகரம்.
அங்கே தான் எங்களது இந்தக் கரும்புலி வீரன் நின்றான்.
இங்கே ~மூஸ் அடிப்பதில் 'பட்டம்" வேண்டியவன்; அங்கே மட்டும் என்ன...சும்மாவா இருந்துவிடப்போகிறான்....

அங்கேயும் அதே பல்லவி தான்...

அந்த நகரத்தின் சந்துபொந்து யாவும் அவனுக்கு அத்துப்படியாகியிருந்தது.
ஆனால், அவன் அங்கு போயிருப்பதன் நோக்கமோ பெரிது இரகசியமானது.

மிக முக்கியமான இலக்கொன்றின் மீதான தாக்குதலுக்காகவே அவன் அங்கு சென்றுள்ளான்.

அது குண்டு பொருத்திய ஊர்தியை ஒரு நகரும்... இலக்கின் மீது மோதி அழிக்க வேண்டும்...

அந்த இலக்கின் மீதான தாக்குதலுக்காக அங்கே நின்ற எல்லோருமே எவ்வளவு
சிரத்தையுடன் இயங்க வேண்டியிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும்.
சிறு கவனக்குறைவு கூட பெரும் முயற்சிகளை சீர்குலைத்து விடக்கூடிய சூழல்.

தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குத் தேவையான அனுபவமும்... அறிவும் கூர்மையுடனிருக்க வேண்டும்.

எவ்வளவு தான் கடினமாக பயிற்சி எடுத்தாலும், சில வேளைகளில் நடைமுறைச்
சிக்கல்கள் எழுந்து நிற்கும்... அவற்றை வென்றுதான் காரியமாற்ற
வேண்டியிருக்கும்.
புதியகளம்... பழக்கப்படாத சூழல்... எதிரியின் முற்றம் அதற்குள் செயற்படுவதென்றால்...
வேகமாக விரைந்து செல்லும் பெருவாரியான வாகன நெரிசல்களுக்குள்ளும்...
சன நெரிசல்களுக்குள்ளும்... வாகனம் செலுத்துவதில் அவன் சிரமப்பட வேண்டியிருந்தது.
இவனின் அந்த 'மூசை"த் தவிர மற்றெல்லாம் திருப்தியாக இருந்தது...
ஒருநாள்...
தாக்குதல் நடவடிக்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுக் குண்டு பொருத்தப்பட்ட வாகனம் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இனி எந்தவேளையும் அவன் விழிப்போடு இருக்கவேண்டும். அவன் மேற்கொள்ள வேண்டிய
கடமை எதிரியின் இதயத்திற்குள்ளேயே ஆணி அறைந்தாற் போல மேற்கொள்ளவேண்டிய ஒரு
தாக்குதல்....

நீண்டகால முயற்சியின் - அறுவடையாக அமையப்போகும் ஒரு நடவடிக்கை.
இனி எல்லாமே அவன் கையில்....

அங்கே களத்திற்குப் பொறுப்பாக நின்ற தளபதி அந்தக் குண்டூர்தியை அவனிடம் ஒப்படைக்கும் போது சொன்னார்....

'வாகனத்தை விட்டு இறங்கி அங்கயிஞ்சயின்டு போயிடாத.....
எந்த காரணத்தையும் கொண்டு வாகனத்தை பிடிபட விட்டுடாத..."
தளபதி எதை நினைத்துக் கொண்டு... இதைச் சொல்கிறார் என்பது அவனுக்குத் தெரியும்...
அதன் அர்த்த பரிமாணம் அவ்வளவு முக்கியத்துவம் மிக்கதென்பதும் அவனுக்குத் தெரியும்.
தளபதியின் அறிவுறுத்தல்களுக்கும்... தெளிவுரை களுக்கும் பதிலாக ஒரு
அர்த்தம் பொதிந்த சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு நம்புங்கோ... நான்
செய்வன் என்பதுபோல அவன் புறப்பட்டுப் போனான்...

அந்த நகரம் யார்
வருகைக்காகவும்... தாமதத்துக்காகவும் காத்திராமல் தன்னுடைய இசைவோட்டத்தில்
எப்போதும் போல... இப்போதும் ஓடிக் கொண்டிருந்தது....

இவன் மட்டும் தன்னுடைய இலக்கின் வருகையை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தான்.
அந்தப் பெரும் சனக்கூட்டத்துள் எவருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத் தாதவகையில்; இவன் போருலா வந்து கொண்டிருந்தான்.

அந்தக் கரும்புலி வீரனுடன் அவனை வழிநடத்தும் அவனின் தளபதியும் கூடவேயிருந்தார்.
நீண்டநாள் அவன் எதிர் பார்த்திருக்கும் சந்தர்ப்பம்...

இலக்கு நெருங்கினால் குறிதவறாது அடிக்க வேண்டுமென்ற தவிப்பு. நெஞ்சுள் பாரமாய் அழுத்த அவன் இயங்கிக் கொண்டிருந்தான்...

அதுவொரு இளவேனிற்பொழுது.

நகரப்போக்குவரத்துக்கு மாறாக செயற்படாது அதுவொரு சாதாரண பயணம் போல
போக்குக்காட்டி... சரியான நேரத்தில் - சரியான இடத்தில் தாக்க வேண்டும்.
ஆனால், அன்றைய அந்தக் காலைப்பொழுது அவனுக்கு வாய்ப்பானதாக அமையவில்லை...
அவன் எதிர்பார்த்த அந்த இலக்கு இவனின் தாக்குதல் வலயத்துள் வராமலே நழுவிப்போனது
அன்றும் அவனுக்கு ஏமாற்றம்...
எத்தனை நாள் இப்படி ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பான்.
இப்போதும் அப்படித்தான்...

ஆனால்;, அன்றைய நாள் எப்படியாவது அந்தத்தாக்குதல் மேற்கொண்டேயாக வேண்டும்.
அப்படியானால் காலையில் நழுவிப்போன அந்த இலக்கு மாலையிலாவது வீழ்த்தப்படவேண்டும்...
நெஞ்சுள் அழுத்தும் அந்த இலட்சியச்சுமையோடு... இயங்கிக் கொண்டிருந்தவனுக்காகக் காத்திருக்கப் போகிறதா காலம்....
நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது... அவன் பசியை மறந்து இயங்கிக் கொண்டிருந்தான்.
கூட வந்த தளபதிக்கோ பசி தாங்க முடியாதிருந்தது...
அந்தத் தளபதிதான் ~மூசைப்பார்த்துக் கேட்டார்.....
சாப்பிட்டு வருவமா......?
அவன் அந்த கேள்விக்குப் பதிலுரைக்காது போகவே... மீண்டும் அவரே கதைத்தார்.
ஒவ்வொருவராக மாறி.... மாறி.... வாகனத்திலை நிண்டு கொண்டு போய் சாப்பிட்டு வருவம்...
அப்போது அந்தக் கரும்புலி வீரன் தளபதியைப் பார்த்துச் சொன்னான்...
'வாகனத்திலை குண்டு பொருத்தியாச்சு வெடிக்குவரை நான் வாகனத்தை விட்டு இறங்க மாட்டன்"
நீங்கள் வேண்டுமானால் போய் சாப்பிட்டு வாங்கோ...
சொன்னது மட்டுமல்ல.... உறுதியாகவும் நின்றுகொண்டான்.

இனி அவனை எப்படியழைத்தாலும் அவன் வரப்போவதில்லை...
இலட்சியப்பசி மேலோங்கி நிற்கும் போது அவன் வயிற்றுப் பசியைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை...
அப்ப நீ... வாகனத்திலேயே இரு... நான் உனக்கும் சேர்த்துச்சாப்பாடு
வேண்டிக் கொண்டு வாறன்... எனத் தளபதி அவனிடம் சொல்லிவிட்டு இறங்கிப்போய்
சில நிமிடங்களுக்குள் அந்த நெருக்கடிமிக்க தெருவில் நிகழ்ந்துவிட்ட
எதிர்பாராத சிக்கலொன்றின் விளைவாக அவனை எதிரிகள் சூழ்ந்துவிட... அவன்
இரகசியத்தைப் பேணும் உயர் நோக்கோடு ஊர்தியோடு சேர்த்துத் தன்னை அழித்தான்
அந்த வீரன்...
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum