போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் Arul11 தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் Untitl11 தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் Iiiiii12 தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் Untitl13 தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்

Go down

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் Empty தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்

Post by Admin Sat Aug 18, 2012 2:58 pm

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்
[You must be registered and logged in to see this image.]

ஈழப் போராட்ட வரலாற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முக்கியமான
மாதமாகும். யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள்
பல முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு குடாநாட்டிற்குள் பிரவேசித்த மாதம் இது.

ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முகமாலை முன்னரங்கில் தொடங்கிய சமர் பல
முனைகளில் விரிவாக்கம் பெற்றது. சிங்களப் படையினருக்கு பெரும் இழப்புகளை
ஏற்படுத்தியதாக அமைந்த இந்தத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின்
போரியல் ஆற்றல்களை வெளிப்படுத்திய தாக்குதலாகவும் அமைந்தது.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சமர் 2006 ஆகஸ்ட் 11 ஆம் திகதி
தொடக்கம் சில நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றது. இந்த தாக்குதலின் போது
தமிழீழ விடுதலைப் புலிகள் பல தரையிறக்கங்களை மேற்கொண்டனர். பல முனைகளிலும்
சிங்களப் படையினருக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்திய பின்னர் தமிழீழ
விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியாக இந்தத் தாக்குதல்களை முடிவுக்கு
கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆயினும் இந்தத் தாக்குதல்களால்
எதிரி நிலை குலைந்து திக்குமுக்காடினான். எதிரியிடமிருந்து புலிகள்
பெருந்தொகையான ஆயுத தளபாடங்களையும் இதில் கைப்பற்றினர். தமிழீழ தேசியத்
தலைவரால் மிகவும் நேர்த்தியான முறையில் மேற்படி தாக்குதல் திட்டம்
வகுக்கப்பட்டிருந்தது. முகமாலை முன்னரங்கை உடைத்துக்கொண்டு முன்னேறுகின்ற
புலிகள் எதிரியை நிலை குலையச் செய்வது. மற்றைய அணிகள் கடல்வழியாக
மண்டைதீவு, அல்லைப்பிட்டி ஆகிய இடங்களில் தரையிறக்கங்களை மேற்கொள்வது.

மண்டைதீவில் தரையிறங்கும் அணி இராணுவ நிலைகளைத் தகர்த்தெறிந்து
மண்டைதீவுச் சந்திக்கு வருகின்ற அதேவேளை அல்லைப்பிட்டியில் தரையிறங்குகின்ற
அணியும் படை நிலைகளைத் தகர்த்தெறிந்து மண்டைதீவுச் சந்திக்கு வந்து இரு
அணிகளும் ஒன்றிணைவது. மண்டைதீவில் அமைக்கப்பட்டிருந்த ஆட்லறித் தளத்தை
தகர்த்து தீவகத்திலுள்ள எதிரியை நிலை குலையச் செய்வது. இதுவே இந்தத்
தாக்குதல் வியூகமாகும்.

ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி அதிகாலை வேளை
தாக்குதல்கள் ஆரம்பமாயின. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் உரிய
திட்டமிடல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது. முகமாலை முன்னரங்கத்தை
உடைத்துக்கொண்டு முன்னேறிய புலிகளின் அணிகள் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு
மிக வேகமாக முன்னேறின. அதேபோல் நீரூந்து விசைப்படகுகளில் வந்த புலிகளின்
விசேட அணி அல்லைப்பிட்டியில் தரையிறங்கி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட
போதிலும் மண்டைதீவில் தரையிறக்கத்தை மேற்கொள்ள முடியாத இக்கட்டான நிலை
ஏற்பட்டது.

ஆயினும் அல்லைப்பிட்டியில் தரையிறங்கிய அணிகள் எதிரிக்குப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின.
புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிங்கள இராணுவம் கள
முனைகளை விட்டுத் தப்பியோடியது. இதனால் பலாலி, வரணி, யாழ்ப்பாணம் கோட்டை
ஆகிய இடங்களிலிருந்த இராணுவத்தினர் பின்தள தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டிய
நிலை ஏற்பட்டது. இங்கிருந்த ஆட்லறித் தளங்களிலிருந்து ஏவப்பட்ட ஷெல்கள்
பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் வீழ்ந்து வெடித்ததால் பல அப்பாவிப்
பொது மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில
காரணங்களால் புலிகளின் அணிகள் தமது முன்னைய நிலைகளுக்குத் திரும்பிச்
சென்றன. எதிரிக்குப் பெரும் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும்
ஏற்படுத்திய இந்தத் தாக்குதல்களின்போது புலிகளுக்கு மிகவும் குறைவான
இழப்புகளே ஏற்பட்டன. புலிகள் தமது முன்னைய நிலைகளுக்குத் திரும்பும் போது
எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவான ஆயுத தளபாடங்களையும் அவர்கள்
கொண்டு சென்றனர்.

மேற்படி யுத்தத்தின் போது அல்லைப்பிட்டித்
தரையிறக்கத்தைத் தடுப்பதற்கு இராணுவம் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது.
இதற்காக அல்லைப்பிட்டியை ஷெல் தாக்குதலால் துவம்சம் செய்தது. இராணுவத்தின்
தாக்குதலுக்கு அஞ்சி அல்லைப்பிட்டி புனித பிலிப் நேரியார் தேவாலயத்தில்
தஞ்சமடைந்த மக்களை இராணுவம் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்தது.


2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் மேற்படி
தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
இதனால் அங்கு தங்கியிருந்த 20 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அத்
தாக்குதல் இடம்பெற்ற போது இந்த தேவாலயத்தில் தங்கியிருந்த ஏராளமான மக்கள்
படுகாயமடைந்தனர்.

இதில் காயமடைந்த பொதுமக்களை வைத்தியசாலைக்கு
கொண்டு செல்வதற்கோ கொல்லப்பட்ட மக்களின் உடலங்களை அப்புறப்படுத்துவதற்கோ
இராணுவம் அனுமதி வழங்கவில்லை. காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக யாழ் போதனா
வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வண்டிகள் பண்ணைப் பாலத்திற்கு
அப்பால் செல்ல இராணுவம் அனுமதி வழங்கவில்லை. அல்லைப்பிட்டியிலிருந்தும்
எந்தவொரு வானங்களும் மேற்படி காயக்காரர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு
கொண்டு வருவதற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் மேற்படி
மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கினர். குறிப்பாக நவாலி
சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெற்றதை விட மோசமான நெருக்கடிகளை
அல்லைப்பிட்டி மக்கள் எதிர்நோக்கினர்.

இந்தத் தாக்குதலில்
கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை
அல்லைப்பிட்டி புனித பிலிப் நேரியார் தேவாலயத்தில் நடைபெற்றது. அமலமரித்
தியாகிகள் சபையைச் சேர்ந்த எஸ்.இரத்தினராஜ் தலைமையில் இந்த அஞ்சலி
நிகழ்வுகளும் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட மக்கள்
தமது உறவினர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இவர்களின் கண்களில்
ஒருவித எதிர்பார்ப்பு இருந்தமை அவதானிக்கப்பட்டது. அதாவது, இந்த
இழப்புகளுக்கு என்றோ ஒரு நாள் காலம் பதில் சொல்லுமா? இந்த அழிவை
ஏற்படுத்தியவர்ளை இறைவன் தண்டிப்பானா? என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்ததை
அவதானிக்க முடிந்தது.

கடந்த 30 வருட காலமாக தமிழ் மக்கள் மீது
சிங்களம் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்புகளுக்கு என்றோ ஒரு நாள் காலம் பதில்
சொல்லும். தமிழினத்தை அழித்தவர்கள் என்றைக்குமே நிம்மதியாக வாழ
மாட்டார்கள். தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கப்படுவார்களாயின் அவர்கள்
மீண்டும் பொங்கி எழ வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்பதை சிறிலங்காவின்
ஆட்சியாளர்களும் சர்வதேச நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும். இது காலத்தின்
கட்டாயமாகும்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
» "இது இப்படியே போனால் ... யாழ்ப்பாண மக்கள் நிலை என்னவாகும்"
» "மீண்டும் ஜேர்மனியில் இலங்கைத் தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்"
» தமிழ் மக்கள் மீதான வன்னி இனப்படுகொலை 2009 video
» "மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum