போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் Arul11 இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் Untitl11 இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் Iiiiii12 இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் Untitl13 இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல்

Go down

இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் Empty இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல்

Post by Admin Wed Apr 24, 2013 8:25 am

[You must be registered and logged in to see this image.]

சிறிலங்காவின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள இரத்தினபுரி
மாவட்டத்தின் அலுப்போல தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளிகள் வதியும்
குடியிருப்பு மீது 30 சிங்கள இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் வரை காயமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழும் தமிழ் தோட்டத் தொழிலாளிகள்,
இவர்களைச் சூழ மற்றைய கிராமங்களில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்களால்
அச்சுறுத்தப்படுகின்றனர். இதன் பெறுபேறாக ஏப்ரல் 17,2013 அன்று தோட்டத்
தொழிலாளிகளின் குடியிருப்பு மீது சிங்கள இளைஞர்கள் தாக்குதலை
மேற்கொண்டுள்ளனர். தற்போது இங்கு எழுந்துள்ள குழப்பநிலையை தடுப்பதற்காக
சிறிலங்கா காவற்துறையினர் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அலுப்போல தோட்டப் பிரதேசமானது 306 கெக்ரேயர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு உயர் ரகத் தேயிலை உற்பத்தியாக்கப்படுகிறது. இங்கு 1.2 மில்லியன் கிலோ
தேயிலை ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்தின்
தலைநகரமான இரத்தினபுர நகரிலிருந்து 28 கிலோமீற்றர் தூரத்தில் அலுப்போல
பிரதேசம் அமைந்துள்ளது.

இத்தோட்டத்தில் தொழில்புரியும்
பெரும்பாலான தொழிலாளிகள் 'தொண்டமான்புர' என அழைக்கப்படும் வீட்டுத்
திட்டத்தில் வாழ்கின்றனர். இப்பெயரானது இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
முன்னைநாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, றணசிங்க பிறேமதாச,
சந்திரிக்க குமாரதுங்க போன்றவர்களின் அரசாங்கங்களில் சௌ.தொண்டமான்
அமைச்சராக கடமையாற்றினார். இவர் 'தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்' எனவும்
அழைக்கப்படுவதுடன், தற்போதைய அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின்
தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் பாட்டனார் ஆவார்.

இவ்வாண்டு
இடம்பெற்ற சிங்கள தமிழ் புதுவருடத்தின் போது அலுப்போல தோட்டப்
பிரதேசத்திற்கு அருகிலுள்ள கல்போட் தோட்டத்தில் இசைநிகழ்வு ஒன்று
இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு தொண்டமன்புர குடியிருப்பு வாழ் மக்கள்
கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் இதில் கலந்து கொண்ட
தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது சில சிங்கள
இளைஞர்கள், தமிழ் யுவதிகள் சிலரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால்
கிண்டலடித்தனர். இதனை அறிந்த தமிழ் இளைஞர்கள் சிங்கள இளைஞர்களிடம்
வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது இவர்களை சிங்கள இளைஞர்கள் தாக்கினர்.
இதனையறிந்த அலுப்போல வாழ் தமிழர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில்
இரண்டு தமிழர்கள் மிக மோசமான காயங்களுக்கு உட்பட்டு, பலங்கொட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 23 வயதான தமிழ்ச்செல்வன் என்ற
இளைஞனுக்கு தீவிரமாக அடிபட்டிருந்ததால் அவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். பிறிதொரு இளைஞனான விஜயகுமார் சிகிச்சை பெற்ற பின்னர்
வீடு திரும்பினார்.

இத்துடன் இந்தச் சம்பவம் முடியவில்லை. இதன்
பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு வௌல்வத்தையிலிருந்து 30 சிங்கள இளைஞர்கள்,
அலுப்போல தோட்டப் பகுதியை முற்றுகையிட்டதுடன், 'தொண்டமான்புர' குடியிருப்பு
மீது தாக்குதல் மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களில்
பெருமளவானவர்கள் மதுபானம் அருந்தியிருந்தனர். தமிழர்கள் எமது நாட்டை விட்டு
வெளியேற வேண்டும் அல்லது சாவை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என மிரட்டினர்.
சிங்களக் காடையர் குழு சில மக்களையும் தாக்கினர்.

இதனால் தமிழ்
இளைஞர்கள் குறிப்பாக தொண்டமன்புர வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த தமிழ்
இளைஞர்கள் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் சிங்களக்
காடையர்கள் தந்திரோபாயமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து குறிப்பிட்டளவு
தூரத்தில் நின்றவாறு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன் போது
தொண்டமன்புர குடியிருப்புயை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதன் பின்னர்
தொண்டமன்புர வாழ் தமிழ் மக்களும் கற்களை எறிந்து பதில் தாக்குதலை
மேற்கொண்டனர். இதனையடுத்து சிங்கள இளைஞர்கள் அந்த இடத்தை விட்டு
பின்வாங்கிச் சென்று மேலும் பலருடன் திரும்பி வந்து தொண்டமன்புர
குடியிருப்புயை எரித்தனர்.

இதனையடுத்து அலுப்போல தோட்டத்தைச்
சேர்ந்த தமிழ் மக்கள் மலைநாட்டைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள், வர்த்தக
சங்கப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் போன்றோரைத் தொடர்பு கொண்டனர்.
காவற்துறையினரிடமும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் வௌல்வத்த
பிரதேச காவற்துறை நிலையத்தில் கடமையில் ஈடுபட்;ட காவற்துறையினர் சம்பவம்
நடந்த இடத்திற்கு விரைந்ததுடன், மேலும் வன்முறைகள் ஏற்படாவண்ணம் நிலைமையைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


அலுப்போல தோட்டத் தொழிலாளிகள் மத்தியில் மட்டுமல்லாது இது போன்று
அண்மைக்காலங்களில் இரத்தினபுர மாவட்டத்தில் வாழும் தமிழ் தோட்டத்
தொழிலாளர்களுக்கு எதிராக சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள்
பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

சிங்களக் காடையர் ஒருவர்
அலுப்போல தோட்டப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் அங்கு அமைந்துள்ள
இந்துக் கோவில் ஒன்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனைத்
தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளிகளை எதிர்த்து சிங்களவர்கள் தாக்குதலை
மேற்கொள்வதாகவும், இதன் தொடர்ச்சியாகவே இசைநிகழ்வைப் பார்த்து விட்டு தமது
குடியிருப்புக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த தமிழர்கள் மீதான
தாக்குதல் அமைந்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக
மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசனால் வழங்கப்பட்ட ஊடக அறிக்கை
ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுப்போல மற்றும் கல்பொட தோட்டப்
பிரதேசங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களை விட, நிவிதிகல பிரதேசத்தில் உள்ள
டொலஸ்வெல தோட்டப் பிரதேசத்தில் சில நாட்களின் முன்னர் வன்முறைச் சம்பவம்
ஒன்று இடம்பெற்றதாகவும், இதேபோன்று பெல்மடுல்ல பிரதேசத்தின் லெலோபிற்றிய
மற்றும் கோணகும்புர தோட்டப் பிரதேசங்களில் ஒரு வாரத்தின் முன்னர் இத்தகைய
வன்முறைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் மனோ கணேசன் தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும்
மலையகத் தோட்டங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சூழவுள்ள
கிராமங்களில் வாழும் சிங்களவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில்
விரைந்து நடவடிக்கை எடுத்து, கேகாலை, இரத்தினபுர மாவட்டங்களில் வாழும்
தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மனோ கணேசன், இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கால்நடைகள் மற்றும் கிராமிய சமூக
அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிடம் கோரியுள்ளார்.


பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் வாழும் சிறுபான்மை மலையக தமிழ்
தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் சிறப்பு
நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக இன்றியமையாதது என மனோ கணேசன் மேலும்
தெரிவித்துள்ளார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "யாழ். மண்டைதீவில் கடற்படையினரின் அட்டகாசம்! இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் "
» யாழில் பத்திரிகை செய்தியாளர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல்
» பிரிகேடியர் தீபன் அவர்கள் மீது நச்சுக்குண்டுத் தாக்குதல் !
»  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:
» "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum