போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
வேகம்....... Arul11 வேகம்....... Untitl11 வேகம்....... Iiiiii12 வேகம்....... Untitl13 வேகம்....... Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

வேகம்.......

Go down

வேகம்....... Empty வேகம்.......

Post by Admin Sun Dec 02, 2012 8:28 am

வேகம்
**********

[You must be registered and logged in to see this image.]
யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எதிரி முன்னோக்கிப் பாய்தல் -
இடிமுழக்கம் - என அடுத்தடுத்து பெயர் சூட்டிப் படை நடவடிக்கைகளை
முன்னெடுத்துச் சனங்களைப் பெரும் வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருந்த காலம்.


அவன் தன்னையொரு கரும்புலியாக இணைத்துக் கொள்ளுமாறு தலைவருக்குக் கடிதம் எழுதிவிட்டு... பதிலுக்காகக் காத்திருந்தான்.

அவனின் சாரதியத் திறமையில் எல்லோருக்கும் நம்பிக்கை. எந்த மோசமான
தெருவிலும் அவன் இலாவகமாக வாகனத்தைச் செலுத்தும் ஆற்றல் அவனின் மீதான
மதிப்பை உயர்;த்தி நின்றது.


ஒருநாள்

ஏதோவொரு அலுவலாகப் பொறுப்பாளர் கோப்பாய் பக்கமாக அவனிடம் வாகனத்தைக் கொடுத்து அனுப்பிவிட...

வீதியிலிறங்கிய வாகனம் விண்கூவத்தொடங்கியது...
நல்ல வீதி... பொறுப்பாளரின் கண்களுக்கு எட்டாத தொலைவு...
வானத்தில் பறக்கும் 'அவ்றோ"வின் வேகத்தை; தரையில் பரீட்சித்துப் பார்த்தால் என்ன என்ற நினைப்பு...

ஆசை மனதுக்குள் எட்டிப்பார்க்க... கால்கள் 'அக்சிலட்டரை" ஒட்ட மிதித்தது.
வாகனம் உருண்டு போகிறதா... பறந்து போகிறதா என்ற சந்தேகம்; தெருவில்
நின்றவர்களுக்கு. உல்லாசப் பறத்தலில் மூழ்கியிருந்தவனின் கவனம்;
சற்றுத்தளம்ப கோப்பாய் வீதியோரமிருந்த மதிலைக் காணக்கிடைக்கவில்லை... மதிலை
உடைத்து உள்ளே பாய்ந்தது வாகனம்.

விளையாட்டுத் தனத்தின் விபரீதம் மெல்ல உறைக்க எந்த அவகாசமும் கொடாது அவனின் முன்னே வந்து நின்றார் வீட்டுச் சொந்தக்காரர்...

'உனக்கு என்ன பிரச்சினையெண்டாலும் எனக்குக் கவலையில்லை...
வாகனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சேதம் பற்றியும் எனக்குக் கவலையில்லை...
எனக்கு என்ர மதில் முன்னர் இருந்தது போலவே இப்போதும் இருக்க வேண்டும்..." ஒற்றைக் காலில் அவன் முன்னே நின்றார்.

நிலைமை சிக்கலாகிவிட்டது...

சுற்றி நாலுபக்கமும் தலையைத்திருப்பி பலமுறை பார்த்தான்.
தெரிந்தவர்கள்... பழகியவர்கள்... தகடு வைப்பவர்கள்... என்று எவரும் இல்லை.
சூழல் திருப்தியாக இருந்தது...
இனி ஐயாவைக் கவனிக்க வேண்டியதுதான். அவரைக் கனக்கக் கதைக்க விட்டால் -
தகவல் அசுரவேகத்தில் பொறுப்பாளரின் செவிகளுக்கு எட்டும்.. பிறகு கதை
கந்தலாகிவிடும்.

ஆகவே ஐயாவின் வாயை உடனடியாக அடைக்க வேண்டும்.
மனதுக்குள் கணக்குப் போட்டவன் சொன்னான்...
'ஐயா பிரச்சினையில்லை...
உங்கட மதிலைக் கட்டி வெள்ளையடித்தும் தரலாம்...

ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ..."
கதையாலேயே ஐயாவை மடக்கி அவரிடமிருந்து விடுபட்டு வெளியேறினான்.
எவருக்கும் இந்த விடயம் தெரியவர முதல் வேகமாக வாகனத்தைக் 'திருத்தகத்தில்"
விட்டுத் திருத்தி... வர்ணம் பூச வேண்டியவற்றிற்கு வர்ணம் பூசி...

இரண்டு நாட்களுக்குள்ளேயே இருந்தது போலவே முகாமில் கொண்டு போய்விட்டது
மட்டுமல்ல... ஐயாவின் உடைந்த மதிலையும் யாருக்கும் தெரியாமல் அங்கயிஞ்ச
காசுவேண்டி கட்டி வெள்ளையடித்து முடித்திருந்தான்...


யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில்; எதிரி 'சூரியக்கதிர்" படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தான்.

எதிரி மேற்கொள்ளும் பாரிய படை நடவடிக்கை... அவன் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி மூர்க்கமாக வேறு முன்னேறிக் கொண்டிருந்தான்...

எல்லா விளைவுகளுக்கும் எதிர்விளைவுகள் உண்டு இயற்கைகூட இந்த ஒழுங்கில்
இயங்கும் போது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் நியாயமான கோபங்களையும்
ஆக்கிரமிப்பாளர்கள் சந்தித்தாகத்தானே வேண்டும்...

இங்கே படைகளை
அனுப்பிவிட்டு; அங்கே அவர்களின் அதிகார மையத்துள் வெற்றித் திமிரில்
மூழ்கிக்கிடக்கும் அதிகாரத் தலைமையின் தலையிலேயே இடியை இறக்கத்
திட்டமிடப்பட்டது.

தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
எதிரியின் 'பொருளாதாரத் தலைமை மையம்" தலைநகரத்தின் மையத்துள் அதிஉச்ச
பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருக்கும் அந்தக் 'காப்பகம்" தாக்கப்பட
வேண்டும் என்பதே நோக்கம்.

சேகரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களின்
அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருக்கும் அந்த பொருளாதார மையம் மீதான
தாக்குதலுக்குத் திட்டம் தீட்டி... வெடிமருந்து வாகனமும்; எதிரியின்
தளத்துக்குள் நகர்த்தப்பட்டுவிட்டது.


அந்தத் தாக்குதலில் பங்கு கொள்ளப்போகின்றவர்களுக் கான பயிற்சிகள் நடந்து கொண்டிருந் தாலும்...

அந்தத் தாக்குதலின்போது பயன்படுத்தும் பிரதான குண்டூர்தியைச்
செலுத்துவதற்குத் திறமையுள்ள சாரதி ஓராள் தேவைப்பட பொறுப்பாளர்களின்
நினைவில் வந்து நின்றது எங்கள் 'கோப்பாய் சாகசக்காரன்" தான்.


ஏற்கனவே கரும்புலிக்கு விண்ணப்பித்துவிட்டு நின்றவனை அழைத்து இதைச்
செய்கிறாயா எனக்கேட்க... உற்சாகத்தோடு தாக்குதல் தளம் நோக்கி பயணத்தைத்
தொடங்கினான்...


எதிரியின் தலைநகரம்....
யாழ்ப்பாணம் மீது படையெடுப்பு மேற்கொண்ட சூழல்...
எவ்வேளையிலும் அங்கே குண்டுகள் வெடிக்கலாம் என்ற எதிரிப் புலனாய்வாளர்களின் எச்சரிக்கை...
எந்நேரமும் எதிரியின் தலைநகரம் அதிஉச்ச விழிப்பு நிலையிலிருந்தது.
ஒருநாள்...
அது ஒரு பகற்பொழுது...
வானத்திலிருந்து குதித்த வல்லவர்கள் போல
திடீரென எங்கிருந்து வந்தார்களோ தெரியாது...
சில வீரர்கள் வீதியின் குறுக்கேயிருந்த தடைகளை உடைத்து வழியெடுத்துக் கொடுக்க...
உறுமியப்படி அந்தக் குண்டூர்தி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது...
ஆம்... எங்கள் தோழன் எதிரி நாட்டின் பொருளாதார மையத்துள் அந்த பூகம்பத்தை வெடிக்கச் செய்தான்...
எதிர்பாராத அந்த அடியால் ஆட்டம் கண்டு; சிங்களத்தின் பொருளாதார மதில்கள்
நொருங்கி விழ... தெருவெங்கும் நாறிக் கிடந்தது. எதிரியின் பணமும் -
மானமும்.

நான் மட்டும்

தமிழர் மனங்களில் என்றும்
ஆறாக்காயமான ~வடுவை ஏற்படுத்திப் பெரும் அறிவுச் சொத்தழிவுக்குக் காரணமான
ஒரு ~சூத்திரதாரி மீதான தாக்குதல்.

தமிழர்கள் பெருமையோடும் -
மகிழ்வோடும் ஓடியோடி ஒன்று சேர்ந்து பாதுகாத்த அந்த அறிவுத்தாய் மடியில்
தீமூட்டிய கொடியவன் மீதுதான் இலக்கு வைக்கப்பட்டது. அவன் என்றும்
அழிக்கப்பட வேண்டியவனாகவே இருந்தான்.

ஆனால், அதிகாரத்தின் மையப்பாதுகாப்புக்குள் அவன் நின்றான்.

தமிழினத்தின் கோபத்திற்குள்ளாகிய அந்தக் குற்றவாளி; சனநாயகத் தலைவனாக வேடம் தரித்து நின்றான்.

உள்ளே குமுறும் எரிமலையைப்போன்று கண்களில் தீச்சொரிய் இலக்கை நோக்கி அந்தக் கரும்புலி நகர்த்தப்பட்டாள்.

காலம் கனிந்து - தாக்குதல் இலக்குப் பொருந்தி வந்து - கச்சிதமாக அந்த
எதிரியை அழிக்கும் வரை எதிரியின் நகரத்திலேயே அவள் உறைந்திருக்க வேண்டும்.

அதற்காக அவளுக்கு பல்வேறு ஒழுங்குகளையும் செய்துகொடுக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக அவள் பாதுகாப்பாகக் குடியிருக்க ஒரு இடம் வேண்டும்.

எதிரியின் தளத்தில் ஒரு பாதுகாப்பான இடம் தேடுவதென்றால் எவ்வளவு சிரமமிருக்கும் என்பதை அவள் நன்கு அறிவாள்.

எத்தனையாயிரம் கண்களை சமாளிக்க வேண்டும். அத்தனை சிரமங்களுக்கு
மத்தியிலும் அவளுக்கு வசதியாக இருக்கும் என ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட்ட
இடம்... அவ்வளவாக வாய்க்கவில்லை...


முரண்பட்ட கணவன் - மனைவியைக் கொண்ட ஒரு குடும்பத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட அவள் பல்வேறுவழிகளிலும் சிரமப்பட வேண்டியதாயிற்று...

மனம் வெறுத்துப் போகுமளவுக்கு அவள் அங்கே தொந்தரவு செய்யப்பட்டாள்.

ஒற்றுமையற்ற அந்தக் குடும்பத்தின் எல்லா ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையே
நின்று; அவள் இயங்க வேண்டியிருந்தது. அவர்கள் அனுமதிக்கும் பொழுதுகளில்
வெளியே சென்று - மேற்கொள்ளவேண்டிய தாக்குதல் இலக்கிற்கான
வேவுபார்ப்பதிலிருந்து - தகவல்களைப் பரிமாறுவது வரையான வேலைகளிலும் அவள்
பங்கெடுக்க வேண்டியிருந்தது.

வெறுத்தொதுக்கும் ஒரு இடத்தில் நின்று பிடிப்பதென்பது எத்தனை சிரமமானது.
ஆனால், ஒரு நாள் கூட அவள் வாய்திறந்து தான் எதிர்நோக்கும் எந்த நெருக்கடி களையும் எவருக்கும் தெரியப் படுத்தியதேயில்லை.

எல்லாவற்றையும் ~நானே தாங்கிக்கொள்கின்றேன். என்பது போல எல்லாவற்றையும்
விடுதலையின் பெயரால் தன் தாய் நாட்டுக்காக மௌனமாக அவள் சுமந்தாள்.


ஒருநாள் அங்கே அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இங்கே தெரியவந்து...
அவளுக்கு வேறொரு இடம் ஒழுங்குபடுத்திக் கொடுக்க அங்கேயும் அவளைத்
துரத்தியது அந்தத் துயரம்...

அங்கு அவள் உதாசீனப் படுத்தப்பட்டாள் - தாங்கமுடியாத வீட்டு வேலைகள் அவள் மீது சுமத்தப்பட்டது.

அவளையோ... அவளது இலட்சியத்தையோ... புரிந்து கொள்ளாத அவர்கள்; அதிலிருந்து அந்நியப்பட்டுச் செயற்பட்டார்கள்...
அவள் அங்கு ஒரு வேலைக்காரியாக நடத்தப்பட்டாள்.
தொட்டதுக்கும் தீர்வு தேட... அது எங்களது தளமல்ல - அங்கு
பொறுப்பானவர்களும் இல்லை - எல்லாமே இரகசியமானது - கடினப்பட்டுத்தான் எந்த
ஒழுங்கு களையும் செய்ய வேண்டிய களச்சூழல்.

இது அவளுக்கும் தெரியும்...

அதனால் தான் அவள் எதையுமே இங்கு தெரியப்படுத்த விரும்பவில்லை... இங்கே
அவளை வழிநடத்திய பொறுப்பாளர்கள்; மீண்டும் அவள் அங்கு நெருக்கடிகளை
எதிர்நோக்குகிறாள் என்பதை அறிந்து - அவளுக்காகப் பிறிதொரு
ஒழுங்குபடுத்தலைச் செய்து - கடிதம் மூலம்... அவளை இடம்மாறி நிற்கச்சொல்லி
எழுதியனுப்பிய போது...

அவள் அந்தக் கடிதத்தை உடைத்துப் பார்க்கவேயில்லை...
கேட்டதற்கு எனக்கு ஒழுங்குபடுத்தித்தாற இடம் இன்னொரு பிள்ளைக்குப்
பயன்படும் அதனால்தான் கடிதத்தை உடைத்துப்பார்க்கவில்லை என்றாளாம்...


இத்தனைக்குமிடையில் அவள் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்வதற்காக ஒவ்வொரு நாளும் அங்கிருந்து புறப்பட்டுப் போவாள்.

நம்பக்கடினமான பயணங்கள் அவை...

எப்படித்தான் அவளால் அப்படி புறப்பட்டுப்போக முடிகிறதோ...
அதற்கு இரும்பையொத்த மனம் வேண்டும். தாயகத்தின் மீது... தலைவரின் மீது...
தான் நேசிக்கும் மக்களின் மீது... அளவுகடந்த அன்பைச் செலுத்தும் இவள் போன்ற
கரும்புலிகளால் மட்டும் தான் அது முடியும்.

எத்தனை நாள் அவள் இப்படி புறப்பட்டுப் போயிருப்பாள்...
நம்பிக்கையோடு புறப்பட்டுப் போவாள்... ஆனால் இன்னதென்றில்லாமல் ஏதோவொரு
காரணத்தால்... அவள் நோக்கம் கைகூடாமல் சறுகிப்போகும்... மற்றவர்களென்றால்
சோர்ந்து போவார்கள்... ஆனால் அவள் சோர்ந்துபோய் ஒரு நாளும் நின்றதில்லை...
அழகாக உடையுடுத்தி... உள்ளே வெடிகுண்டு அங்கியணிந்து... வெளியில் எதையுமே
வெளிக்காட்டாது சாவை தன் இதயத்திற்கு அருகில் சுமந்தபடி அவள் புறப்பட்டுப்
போவாள்...

ஆனால் மீண்டும்... இலக்கு சறுகி நோக்கம் நிறைவேறாமல் அவள் திரும்பி வருவாள்...
மீண்டும் அவளுக்கு வழமையான நெருக்கடி... மனச்சோர்வு... ஆனால் அவள் துவண்டு
போகமாட்டாள்... மீண்டும் உற்சாகத்தோடும் - நம்பிக்கையோடும் வெடிகுண்டு
அங்கியை அணிந்து அங்கிருந்து புறப்பட்டுப் போவாள்...
மீண்டும் ஏதோவொரு சறுகல் - அல்லது சிக்கல்.
இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல... பல தடவைக்கு மேல்; அவள் இப்படிப் புறப்பட்டுப் போவதும் வருவதுமாக இருந்திருப்பாள்...

சலியாது - மனம்கோணாது இப்படிப் புறப்பட்டுப் போன ஒருநாள்...
எல்லாம் சரி வந்து இலக்குக் கைக்கெட்டும் தூரத்தில் நின்றது.
அன்று தான் அவள் அதிக மகிழ்ச்சியோடு காணப்பட்டாள்.
அதுதான் அவளின் இறுதிப் பயணம்.
இனி அவள் இப்படிப் புறப்பட்டுப் போக வேண்டியதேவையேயில்லை.
இனி அவள் எப்போதும் திரும்பி வரப்போவதுமில்லை.
அங்கே களத்தில் அவளை வழிநடாத்திக் கொண்டிருந்தவர்; அவளை நன்கு அறிந்திருந்தார்.
அவள் இத்தனை நாளும் சந்தித்த துயரையெல்லாம் அவர் அறிவார்.

அவரும் கூடவே அந்தத் தாக்குதல் வலயத்துக்குள் நின்று கொண்டிருந்தவருக்குள்
சிறு தயக்கம் - சிறுகுழப்பம். கடைசி நிமிடங்கள் அந்தத் தோழியைப்
பிரிந்துவரவும் அந்த இடத்தைவிட்டு விலகிவிடவும் மனமில்லாமலிருந்தது.....

எல்லாவற்றையும் சரிபார்த்து தாக்குதல் நூறு வீதமும் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் போலிருந்தது அவருக்கு...
அவள் கண்களால் சமிக்கை செய்தாள்.
நீங்கள்..... வெளியால போங்கோ.....
நான் அடிக்கப்போறன்.
ஆனால் அவர் போகவில்லை..... தளப்பொறுப்பாளர் தொடர்ந்தும் அங்கே நின்று கொண்டிருந்தார்.....
முடிவில்; மெல்ல அவரருகில் வந்து அவள் காதோரம் சொன்னாள்.....
நீங்கள் போராட்டத்திற்கு இன்னமும் நிறையச் செய்ய வேண்டியிருக்கு.....
இதுல நான் மட்டும் போதும்.....
நீங்கள் தேவையில்லை.....
இன்னுமொரு தாக்குதலுக்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள்..... என்றவள் அவரை
வெளியேற்றிவிட்டு விடைபெற்றுப் போய் ஒரு கொடிய காலத்தில் தமிழர்களை
நோக்கி.....
உங்களை யார் தாக்கியது - சிங்களவர்.....
உங்களை யார் காப்பாற்றியது - சிங்களவர்.....
உங்களைத் தாக்கவும் அணைக்கவும் எங்களால் தான் முடியும்.....
எனத் திமிரோடு பேசித் தமிழினத்திற்குப் பெரும் தீங்கிழைத்த அந்த எதிரியை அழித்துத் தாயகத்துக்கு இறுதி விடைகொடுத்தாள்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum