போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? Arul11 தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? Untitl11 தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? Iiiiii12 தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? Untitl13 தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...?

Go down

தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? Empty தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...?

Post by Admin Mon Sep 03, 2012 9:09 am

தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...?
தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா...? 549668_277607092343210_1645343739_n

"தண்ணீரைத் தெளித்துவிட்டு இது தூய்மையான இடம் என்று கூறுவதால் ஓர் இடம்
தூய்மையாகி விடாது. தண்ணீரால் குற்றத்தைக் கழுவ இயலாது. மனிதன்
மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.



மீன், புலால்
முதலிய உணவுகளை விலக்குவதாலோ, ஆடையின்றி அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ,
முடியை வளர்ப்பதலோ, உடலில் துப்புரவற்ற பொருள்களைப் பூசிக் கொள்வதாலோ அவன்
தூய்மையுடையவனாகான்" இது புத்தபகவானின் போதனைகளில் ஒன்று.


மிருகபலி......! மிருக பலி.......! மிருக பலி......! கடந்த வாரம் எல்லா
ஊடகங்களிலும் சிங்கள அரசியல் வாதிகள் மற்றும் மதத் தலைவர்களிடையேயும்
அடிபட்டுத் திரிந்த ஒன்று.

அதாவது, முன்னேஸ்வரம் காளிகோவிலில்
இடம்பெறும் சடங்கான மிருக பலியினைப் பற்றிய பேச்சே மத அடிப்படைவாதிகளிடம்
பரவலாகக் காணப்பட்டது எனலாம்.

இந்து மதப்படி துர்க்கைக்கு மிருக
பலி கொடுத்து திருவிழா செய்வது வழக்கம். மிருகபலி இல்லாமல் நடத்தப்படும்
துர்க்கை பூசை வைஷ்ணவி (அ) சாத்துவிக பூஜை எனப்படும். அது வைஷ்ணவர்களால்
செய்யப்படுகிறது. விலங்குகளைப் பலி கொடுத்து செய்யப்படும் பூஜையே துர்க்கை
பூஜை.

இந்து மதத்தைப் பின்பற்றி தான் மிருகபலி (வேட்டைத்
திருவிழா) காலம் காலமாக நடந்துகொண்டு வருகின்றது. ஆனால் கடந்த ஓரிரு
வருடங்களாக தான் இவ்வாறு மிருகங்களை பலி கொடுக்கக் கூடாது என அதை அரசியல்
பிரச்சினையாக கொண்டு வந்துள்ளனர்.

சாதாரணமாக நாம் உணவில்
சேர்த்துக்கொள்ளும், கோழி, ஆடு, மான், மரை, முயல் போன்று தான் துர்க்கை
கடவுளுக்கும் மிருக பலி கொடுத்து அக்கடவுளின் கோபத்தை தணிப்பதாகக் கருதி
அவ்வேட்டைத் திருவிழாவினைச் செய்கின்றோம். பலிகொடுக்கும் மிருகங்களை
பின்னர் காய்ச்சிப் படைத்து அதை அன்னதானமாக மக்களுக்கும் வழங்குவதுதான்
வேட்டைத் திருவிழா.

அந்தவகையில், முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன்
ஆலயத் திருவிழாவில் வேட்டைத் திருவிழா என்பது சிறப்பாக நடைபெறும்.
இவ்விழாவில் மிருகங்களைப் பலி கொடுப்பது காலம் காலமாக இடம்பெற்று வரும்
சடங்கு.
இச்சம்பிரதாயத்தை தடுப்பதற்காக கடந்த வருடம் முதல் பௌத்த மத
குருமாரும், இந்துமத அடிப்படை வாதிகளும், முக்கியமாக மக்கள் தொடர்பாடல்
அமைச்சர் மேர்வின் சில்வாவும் பெரும் பாடுபட்டு வருகின்றனர்.


புத்தரின் காலடியை தமிழனின் இரத்தம் கழுவிச் சென்றபோதெல்லாம் வராத கவலை,
துடிதுடிப்பெல்லாம் கோவிலில் மிருகத்தைப் பலிகொடுக்கப் போகிறார்கள்
என்றதும் வருகின்றது இந்த காரூண்யம் கொண்ட காவியுடைதாரிகளுக்கு. ஒவ்வொரு
தமிழனின் இரத்தக் கறை படிந்துள்ள இந்நாட்டை, புனித பூமியென பறைசாற்றிக்
கொண்டு திரியும் இவர்கள், பலியிடல் பௌத்திற்கு எதிரானது என்று கூறுவது
நியாயமானதா?என்பது புரியவில்லை.

கடந்த முப்பது வருடங்களுக்கு
மேலாக வன்முறைகளாலும் சித்திரவதைகளாலும் தமிழ் மக்களை சிங்கள அரசு
பலிகடாவாக்கியதை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது.
விடுதலைப்
புலிகள் தொடக்கம் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்கள் என பரந்து விரியத் தொடங்கி
போர் என்ற பெயரில் பலிக்கடாவாக்கி அனைவரின் இரத்ததையும் காணத் துடித்தது
இவ்வரசாங்கம்.

யார் யாரெல்லாம் துப்பாக்கியின் கண்களில்
சந்தேகமாகத் தெரிகின்றார்களோ, அவர்களெல்லாம் துப்பாக்கிச் சன்னம் தடவிச்
சென்றது என்பது தான் உண்மை.

தற்போது மிருக பலியினை தடுப்பதற்காக
போராடிக் கொண்டிருப்பவர்கள், வடகிழக்கில் விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில்
தோற்கடிப்பதற்காக அப்பாவிப் பொதுமக்களை பலியெடுத்த அரசாங்கத்தைத் தடுத்து
நிறுத்தாதது ஏன்?

மிருகவதையை தடுக்க வேண்டும் தான், ஆனால்
இலங்கையிலுள்ள தமிழன் மிருகத்தை விட கேவலமானவனாக சிங்கள கடும் போக்கு
அரசியல்வாதிகளினால் நடத்தப்படுகிறான். மிருகத்திடம் காட்டும் கரிசனை ஒரு
துளிகூட தமிழனிடம் காட்டியிருந்தால் கடந்த முப்பது வருடத்திற்கு மேலாக பல
சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டிருப்பார்களா அல்லது இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருப்பார்களா?
முன்னேஸ்வரம் காளிகோவிலில் இடம்பெறவிருந்த மிருகபலியினைத் தடுக்குமாறு,
பௌத்த சங்கங்களின் சம்மேளனமும், மிருக உரிமை ஆர்வலர்களும் கடந்த மாதம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போர்க்கொடி பிடித்திருந்தனர்.

இதே
மாதிரி 2009ஆம் ஆண்டு அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாக
பலியிடப்படுகையில், போர்கொடிபிடித்திருந்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
தமிழர்களின் உயிர் பறி போயிருக்குமா?

அன்று முள்ளிவாய்க்காலில்
முதியவர்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரம் மக்களைக் கொன்று குவிக்கும்போது
தெரியாத வலி, தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள கடவுளுக்களிக்கும்
மிருகபலியின்போது வலிக்கிறதா?

மிருகபலி என்ற பெயரில் மீண்டும்
நாட்டை இரத்தத்தால் நனைவிடப்போவதில்லை என்று கூறும் இவர்கள், தமிழர்களின்
இரத்தம் ஆறாக ஓடும் போது அது அவர்கள் கண்ணில் ஏன் படவில்லை? உயிரினங்களை
வதைக்கக் கூடாது என்று ஜீவகாருண்ய ரீதியில் பேசினால், மனித உயிர்க்
கொலையையும் தடுக்கவேண்டும், கண்டிக்கவேண்டும், நிறுத்தவேண்டும்.


சிங்கள பௌத்த சிந்தனைகளை அரசியல்வாதிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள்
கொண்டுவந்து, ஆட்சி நடத்தும் போதெல்லாம் தமிழன் ஒடுக்கப்படுகிறான். இது
தான் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. தங்களது
தேசியவாத கொள்கைகளால் சிங்கள பௌத்தத்தின் சிந்தனைகள் திணிக்கப்படுகிறது.
அதனை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

அரசியலுள்
அமுங்கிப் போன இச்சிந்தனைகளைக் கொண்டு திணிக்கும் போது அதுவே
இனங்களுக்கிடையே முரண்பாட்டினைத் தோற்றுவிக்கின்றது. தற்சமயம் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் மிருகபலி சர்ச்சையும் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தால்
திணிக்கப்படுகின்ற ஒன்று. சிங்கள பௌத்தம் தமது அடையாளத்தை பாதுகாக்க
சிறுபான்மை இனங்களைப் பலியாக்க யுத்தத்தைக் கையிலெடுக்கின்றது. இதுவே
இலங்கையின் அரசியல் யதார்த்தம் எனலாம்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழன் போர்க்கலைகள்
» தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்;
» முள்ளிவாய்க்கால்:புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரை
» தமிழ் போனால்.. உலகில் தமிழன் ஏனடா? கவிதை
» தமிழர்களின் வீரத்தின் அடையாளத்திற்கு சொந்தமான இடம்..துரோகங்களினால் இன்று இந்நிலையில் இருந்தாலும் நிலை மாறும் தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum