போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Arul11 தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Untitl11 தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Iiiiii12 தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Untitl13 தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Thu Aug 09, 2012 9:25 am

[You must be registered and logged in to see this image.]


ஜெயவர்த்தனே
அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என தமிழீழ இளைஞர்கள்,
அரசியல்வாதிகள் அனைவரும் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருந்தனர். தலைவர்
பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்து விட்டார். ஏர்
லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை
பொறுத்திருந்து விட்டு, ஆவ்ரோ விமானத்தை வெடிக்கச் செய்து இலங்கைத் தீவையே
திரும்பிப் பார்க்கச் செய்தார். இது பேசும் இயக்கமல்ல ; செய்யும் இயக்கம்
என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Thu Aug 09, 2012 2:51 pm

Smile Smile Smile
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Fri Aug 10, 2012 2:38 pm

[You must be registered and logged in to see this image.]
நான்
பெரிது..... நீ பெரிது....... என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.
நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்ளே எமது
நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.
.........மேதகு .வே. பிரபாகரன்.........
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Fri Aug 10, 2012 2:39 pm

[You must be registered and logged in to see this image.]
"மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்,
சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணிலே
ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு
வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்"

' மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Fri Aug 10, 2012 2:40 pm

[You must be registered and logged in to see this image.]
"நாம் ஒரு சத்திய லட்சியத்தால் பற்றுதலால்
உறுதிகொண்ட மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால்
எந்தவொரு சக்தியாலும் எம்மை
அசைக்கவோ அழிக்கவோ முடியாது"

மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் !!
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Fri Aug 10, 2012 5:55 pm

1963ம் ஆண்டு துரு துரு என்று சுழன்றுகொண்டிருக்கும் பார்வை. ஆனால் எதையுமே
ஊடுருவிப் பார்க்கும் அழகான பெரிய விழிகள் ஏகாந்தமாக அக்கோயில்களின்
வீதிகளினை அளந்து கொண்டிருக்கும் சிறிய கால்கள்.

ஆனால் ஏனைய சிறுவர்களுக்கு இருக்கும் அதீதமான குறும்பு
கள் அற்று யாரைப்பார்த்தாலும் வெட்கப்பட்டு அல்லது சங்கோசப்பட்டு அமைதியாக ஒதுங்கிப் போகும் சுபாவம்.

இதுதான் மட்டக்களப்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கும்
உறவினரான வேலுப்பிள்ளையின் கடைக்குட்டிச் சிறுவனான பிரபாகரன்.

பார்க்கப் பார்க்க காரோடும் வெள்ளைச்சாமிக்கு (சோமசுந்தரம் சிவபாதசுந்தரம்) என்னவோ செய்தது.

ஆனால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை!. ஏதோ ஒரு வித்தியாசம்?...
தந்தை வழிச் சொத்தான வல்வை வைத்தீஸ்வரர் கோயில் உற்சவங்களிலும் மற்றும்
விசேட தினங்களிலும் சாமி வீதிவலம் வரும்போது அர்ச்சகருக்கு முன்பாக
கொடியுடன் நடந்து வருபவர்தான் சிறுவன் பிரபாகரன்.


வெள்ளைச்சாமிக்கு ஏனோ புரியவில்லை சாதாரண சிறுவர்கள் காரில் செல்லும்போது
தம்மையே சாரதியாக எண்ணிக் கொண்டு முண்டியடித்து முன் சீற்றிலேயே ஏற
விரும்புவார்கள்.

ஆனால் சிறுவன் பிரபாகரனோ கார் ஓடும்போது
ஏற்படும் அந்தப் பெற்றோல் எரியும் மணம் பிடிப்பதில்லை எனக் கூறி பின்
சீற்றிலேயே அமர்ந்து கொள்வதும் வெளியிலே அமைதியாகப் பார்த்துக் கொண்டு
வருவதும் வழமையான நிகழ்ச்சியே.

ஆனால் வெள்ளைச்சாமிக்கு ஏனோ
ஆச்சரியம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெள்ளைச்சாமி சிறுவனுக்கு
வேடிக்கையாகக் கூறுவது “டேய் உன் மூக்கை வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு
வா.” அதேசமயம் தாய் தந்தையர்க்குக் கூறுவது “இவன் ஒரு வித்தியாசமான ஆள்
என்னவென்று புரியவில்லையே”.

ஆம் அன்று அந்த ஒன்பது வயதுச் சிறுவனை
வெள்ளைச்சாமிக்கு மட்டுமே புரியவில்லை. ஆனால் இன்று ஐம்பது வயது கட்நத அதே
பிரபாகரனை முழு உலகத்திற்கும் புரியவில்லை.

ஏன் உலகின் உச்சமான வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும் புரியவில்லை. ஏன் இவ்வாறு நடந்தது? யார் இந்தப் பிரபாகரன்?

இவர் வெறுமனே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரா? அல்லது தமிழீழ மக்களின்
தேசியத் தலைவரா? பலரும் பலவாறாக எழுதுகின்றார்கள் பேசுகின்றார்கள்.

ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் இவரது பெயர் வெற்றி பெற்ற விடுதலைப்
போராட்ட வீரர்களான மாசேதுங், கோஷிமின், பிடல்கஸ்ரோ என்போரின் வரிசையில்
சேர்க்கப்பட்டு விட்டது.

ஆனால் முன் கூறிய மூவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு.

இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஒடுக்கப்பட்ட ஒரு
இனத்தின் போராட்டத் தலைமையை ஏற்று நடத்திய தொடர் போராட்ட வீரர். அல்லது
விடுதலை இயக்கத் தலைவர் என்னும் தனிச்சிறப்பாகும்.

உலகின் ஏனைய
விடுதலைப் போராட்டங் களுடன் ஒப்பிடும்போது தமிழீழ விடுதலைப் போராட்டம்
என்பது நம்பமுடியாத பல உண்மைகளைக் கண்டு நகர்ந்து கொண்டிருப்பதாகும்.

கடலினால் சூழப்பட்ட தரைவழித் தொடர்புகளற்ற ஒரு தீவில் சிறுபான்மை இனமொன்று
தன்னைவிடப் பலமடங்கு வலிமை கொண்ட அரச இயந்திரம் அதிலும் ஏகாதிபத்திய
பிராந்திய மற்றும் உலக வல்லரசு களில் துணை கொண்டு இனம் மொழி நிலம் என
ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு நடவடிக் கையில் ஈடுபடும் பொழுது அதனை
எதிர்த்து வெற்றி கொள்வதாகும்.

இவ்வாறான நிலைமை எவ்வாறு
சிறுபான்மை ஈழத்தமிழ் இனத்திற்கு சாத்தியமானது. இதுதான் இன்று உலகளாவிய
ரீதியில் கேட்கப்படும் ஒரே கேள்வியாகும்.

அதற்கான விடை தலைவர் பிரபாகரன் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என்பதே.

இந்நிலையில்தான் யார் இந்தப் பிரபாகரன் என்னும் கேள்வி பூதாகரமாக எழும்புகின்றது.

இதற்கான விடையை பேனா முனை வீரர்கள் எனப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும்
நூலாசிரியர்கள் என்போர் பேட்டிகள் மூலமும் தமது ஆய்வுக் கட்டுரைகள் மூலமும்
எதிர்வு கூறல்கள் மூலமும் எழுத முற்படுகின்றார்கள். ஆனால் முழுமை
காணமுடியவில்லை.

இதேபோலவே அவரோடு உடனிருந்த தளபதிகள் மற்றும்
போராளிகள் என்போரும் அவரைப்பற்றி எழுத முற்படுகின் றார்கள். ஏனெனில் அவர்
ஒரு சரித்திர புருஷ‌ர்.

அவர் வரலாறு சாகாவரம் பெற்றது. இன்று
மட்டுமல்ல இன்னும் ஆயிரம் வருடங்கள் அல்ல இரண்டாயிரம் வருடங்கள்
கழிந்தாலும் அவர் வரலாறு ஆய்வுக்கு உட்ப டுத்தப்படும்.

இந்நிலையில்

“இயற்கை எனது நண்பன்”
“வாழ்க்கை எனது தத்துவாசிரியன்”
“வரலாறு எனது வழிகாட்டி”

என வரலாறாய் வாழும் அவரைப்பற்றிக் கூற முற்படும்போது முதலாவதாக அவர்
பிறந்தபோதினில், 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர்
பிரபாகரன் அவர்கள் பிறந்தார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை
பார்வதி தம்பதியினருக்கு அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று
நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம்
வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன்
என்னும் பெயரை இட்டார் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியே. ஆனால் இதன்பின்பேதான்
பெரும் வரலாறு மறைந்து கிடந்தது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த
திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953
செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.


அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும்
இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம்
பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு
சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு
இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம்
என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONஸ் OF
CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN
EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப
காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க
அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று
குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின்
தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்”
என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப்
பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா
“ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர்
காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட
வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL
CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து
வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில்
காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய
ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே
தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.


இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால்
இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும்
மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது
எல்லாளன் என
மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி
ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும்
இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண
மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு
நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும்
அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு
அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது.
“சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.


இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான
திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு
செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக்
கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும். இந்நிலையில்
பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.


இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த
நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம்
என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை.
கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன்
பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும்
உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. இதுவே 55
வருடங்களுக்கு முன் பிரபாகரன் உருவாகிய வரலாறு.

இதனையே திருமூலர் தனது திருமந்திரத்தில்

“ஏயங்கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங்கருவும் உருவாம் எனப் பல
காயங்கலந்தது காணப்பதிந்தபின்
மாயங்கலந்த மனோலயமானதே”

என தனது திருமந்திரம் முதலாம் பாகத்தில் 459ம் பாடலில் இவ்வாறு கூறியிருப்
பதும் எமது முன்னைய தமிழர்களின் நுண்ணறிவிற்குச் சான்றாகும்.

நன்றி : வல்வை
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Admin Fri Aug 10, 2012 10:57 pm

[You must be registered and logged in to see this image.]பாண்டி பஜார், சென்னை.

கண்ணன் என்ற நண்பருடன் டிபன் சாப்பிட வந்திருந்த உமா மகேஸ்வரனை தலைவர்
பிரபாகரன் தற்செயலாக கண்டார், உடன் ராகவன். உமாவை, 'பிரபா' என்று முதலில்
எச்சரித்தது கண்ணன் தான். உமா மகேஸ்வரன் தன் பிஸ்டலில் கைவைக்க, அதற்குள்
தலைவர் முந்திக் கொண்டார். மொத்தம் ஆறு குண்டுகள், அவை கண்ணனைத்தான்
தாக்கின, குண்டடிப்பட்டு அவர் கீழே விழ, உமா மகேஸ்வரன் தப்பியோட
ஆரம்பித்தார். துரத்தியோடிய தலைவரையும், ராகவனையும் பாண்டி பஜார் போலீசார்
கைது செய்தனர், உமாவையும் கைது செய்தனர். பெயரென்ன என்று இன்ஸ்பெக்டர்
நந்தகுமார் கேட்ட போது உமா தன் பெயரை முகுந்தன் என்றார், தலைவர் தன்னை
கரிகாலன் என்றார். இரண்டுமே இயக்கப்பெயர்கள். செய்தி கேள்விப்பட்ட
ஜெயவர்த்தனே எம்ஜிஆரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார், எம்ஜிஆர் சிரித்தார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில  Empty Re: தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum